கோவில் 1301 - விருதுநகர் ராஜபாளையம் சஞ்சீவி மலை குமாரசுவாமி கோவில்
🙏🏻🙏🏻 தினம் ஒரு முருகன் ஆலயம்-1301
சந்தோஷங்களை அள்ளித் தரும் விருதுநகர் ராஜபாளையம் சஞ்சீவி மலை குமாரசுவாமி கோவில்
30.12.24 திங்கள்
அருள்மிகு குமாரசுவாமி திருக்கோவில்
[அ/மி முருகன் கோவில்]
சஞ்சீவி மலை
ராஜபாளையம் 626117
ராஜபாளையம் வட்டம்
விருதுநகர் மாவட்டம்
இருப்பிடம்: விருதுநகர் 61 கிமீ, ராஜபாளையம் 3 கிமீ, ஸ்ரீவில்லிபுத்தூர் 17 கிமீ, சிவகாசி 33 கிமீ, சங்கரன்கோவில் 36 கிமீ, சாத்தூர் 46 கிமீ
மூலவர்: குமாரசுவாமி
தேவியர்: வள்ளி, தெய்வானை
தல மகிமை:
விருதுநகர் மாவட்டம் விருதுநகர் மாநகர பேருந்து நிலையத்திலிருந்து 61 கிமீ தொலைவில் இருக்கும் ராஜபாளையம் அருகில் இருக்கும் கிழக்கு பக்கம் சஞ்சீவி மலையில் சந்தோஷங்களை அள்ளித் தரும் ராஜபாளையம் சஞ்சீவி மலை குமாரசுவாமி கோவில் அமைந்துள்ளது. மேலும் ராஜபாளையம் நகரிலிருந்து 3 கிமீ தொலைவு அல்லது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலிருந்து 17 கிமீ தொலைவு அல்லது சிவகாசி நகரிலிருந்து 33 கிமீ தொலைவு அல்லது சங்கரன்கோவில் நகரிலிருந்து 36 கிமீ தொலைவு அல்லது சாத்தூர் நகரிலிருந்து 46 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சஞ்சீவி மலை குமாரசுவாமி கோவிலை அடையலாம். இக்கோவிலில் மூலவர் குமாரசுவாமி வள்ளி, தெய்வானையுடன் அருளாட்சி புரிகின்றார். இக்கோவில் சஞ்சீவி மலை முருகன் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. சுற்றுலா தலமான ராஜபாளையம் சஞ்சீவி மலை வனத்துறையின் கீழ் வருகிறது.
ராஜபாளையம் சஞ்சீவி மலை குமாரசுவாமி கோவில் ஒவ்வொர் மார்கழி மாத பிறப்பை முன்னிட்டும் சஞ்சீவி மலையில் படி பூஜை விழா நடைபெறுகிறது. கோவிலின் முக்கிய நிகழ்வான படி பூஜை விழாவையொட்டி பஜனை பாராயண குழுவுடன் 365 படிகளிலும் ஒவ்வொரு படியாக சூடம் பொருத்தி, பூக்கள் தூவி வழிபடுவர். பெண்கள் 10 படிகளுக்கு ஒரு தேங்காய், பழம் வைத்து வழிபாடு செய்து அவற்றை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவர். மலையில் உள்ள குமாரசுவாமி கோயிலில் குமாரசுவாமி அலங்காரத்தில் காட்சியருள்வார். பின்னர் கோவிலில் அன்னதானம் நடைபெறும். இவ்விழாவில் ஏராளாமான முருக பக்தர்கள் கலந்துக் கொண்டு குமாரசுவாமியை வழிபடுவர். மேலும் தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி உள்ளிட்ட முருகப்பெருமானின் அனைத்துத் திருவிழாக்களும் சிறாப்பாகக் கொண்டாடப்படுகின்றன.
தல வரலாறு:
சஞ்சீவி மலையில் நோய்களை நீக்கும் மூலிகை மரங்கள் நிறைந்துள்ளன. இந்துக்கள் மத்தியில் புனிதமான மலையாகக் கருதப்படுகிறது. ராமாயணத்தில் இம்மலையை பற்றி பல குறிப்புகள் உள்ளன. சஞ்சீவி மலையில் 3000 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சஞ்சீவி மலை உச்சியில் சஞ்சீவிநாதர் மற்றும் குமாரசுவாமி ஆலயம் அமைந்துள்ளது. முருகன் கோயில் அருகே உள்ள பாறையில், அலங்காரத்துடன் விஷ்ணுவின் முழு கோட்டுருவம் மிக நேர்த்தியாக வரையப்பட்டுள்ளது. ஆரம்ப காலத்தில் மழை பெய்ய ஊர் மக்கள் ஒன்று கூடி சஞ்சீவி மலைக்குச் சென்று கடவுளைக் வேண்டிக்கொண்டு மேளதாளத்துடன் பூஜை செய்து ஒரு கல்லை கீழே உருட்டி விடுவார்கள். பலமுறை அன்று இரவே மழை பெய்ததாக கதைகள் கூறுகின்றன.
தல அமைப்பு:
அழகிய அமைப்புடன் கூடிய இக்கோவிலின் கருவறையில் மூலவராக குமாரசுவாமி வள்ளி, தெய்வானையுடன் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மேலும் விநாயகர், சிவபெருமான், சக்தி, ஆஞ்சநேயர் உட்பட அனைத்து தெய்வங்களும் இக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
மார்கழி படி பூஜை, தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, சஷ்டி, கார்த்திகை
பிரார்த்தனை:
சந்தோஷங்கள் கிடைக்க, நினைத்தது நிறைவேற, பிணிகள் நீங்க, நோய்கள் குணமாக, மன மகிழ்ச்சி பெற்றிட, சங்கடங்கள் தீர, செல்வம் பெருக
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
நினைத்ததை நிறைவேற்றும் விருதுநகர் ராஜபாளையம் சஞ்சீவி மலை குமாரசுவாமி போற்றித் தொழுதிடுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 1301 சந்தோஷங்களை அள்ளித் தரும் விருதுநகர் ராஜபாளையம் சஞ்சீவி மலை குமாரசுவாமி கோவில்
படம் 2 - 1301 நினைத்ததை நிறைவேற்றும் விருதுநகர் ராஜபாளையம் சஞ்சீவி மலை குமாரசுவாமி கோவில் மார்கழி படி பூஜை [16.12.2024 மார்கழி 1 - தமிழ் மாத பிறப்பு]
Comments
Post a Comment