கோவில் 1299 - விருதுநகர் ராஜபாளையம் புதுபாளையம் பாலமுருகன் கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1299
பாவங்களை போக்கியருளும் விருதுநகர் ராஜபாளையம் புதுபாளையம் பாலமுருகன் கோவில்
28.12.24 சனி
அருள்மிகு பாலமுருகன் கோவில்
[அ/மி செல்வ விநாயகர் கோவில்]
புதுபாளையம்
ராஜபாளையம் 626117
ராஜபாளையம் வட்டம்
விருதுநகர் மாவட்டம்
இருப்பிடம்: விருதுநகர் 57 கிமீ, ராஜபாளையம் 2 கிமீ, ஸ்ரீவில்லிபுத்தூர் 13 கிமீ, சிவகாசி 34 கிமீ, சங்கரன்கோவில் 33 கிமீ, சாத்தூர் 46 கிமீ
மூலவர்: பாலமுருகன்
உற்சவர்: வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமான்
தல மகிமை:
விருதுநகர் மாவட்டம் விருதுநகர் மாநகர பேருந்து நிலையத்திலிருந்து 57 கிமீ தொலைவில் இருக்கும் ராஜபாளையம் புதுபாளையம் பகுதியில் (பழைய பேருந்து நிலையம் அருகில்) பாவங்களை போக்கியருளும் ராஜபாளையம் புதுபாளையம் பாலமுருகன் கோவில் அமைந்துள்ளது. மேலும் ராஜபாளையம் நகரிலிருந்து 2 கிமீ தொலைவு அல்லது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலிருந்து 13 கிமீ தொலைவு அல்லது சிவகாசி நகரிலிருந்து 34 கிமீ தொலைவு அல்லது சங்கரன்கோவில் நகரிலிருந்து 33 கிமீ தொலைவு அல்லது சாத்தூர் நகரிலிருந்து 46 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் புதுபாளையம் பாலமுருகன் கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் பாலமுருகன் பாலகனாக அருள்புரிகின்றார். செல்வ விநாயகரும் மற்றொரு மூலவராக வீற்றிருப்பதால், இக்கோவில் செல்வ விநாயகர் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது.
ராஜபாளையம் புதுபாளையம் பாலமுருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் முருகப்பெருமானின் தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை உள்ளிட்ட அனைத்து திருவிழாக்களும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கார்த்திகை நன்னாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. செல்வ விநாயகருக்கு விநாயகர் சதுர்த்தி திருநாள் வெகு விமரிசையாக நடைபெறுகின்றது. பிரதி சங்கடஹர சதுர்த்தி அன்று சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன. பிரதோஷம், ஆஞ்சநேய ஜெயந்தி நன்னாளில் விசேஷ வழிபாடுகள் நடக்கின்றன.
தல வரலாறு:
ராஜபாளையம் மையப்பகுதியில் புதுபாளையம் பாலமுருகன் கோவில் மற்றும் செல்வ விநாயகர் கோவில் இப்பகுதி வாழ் பெருமக்களால் கட்டப்பட்டு, நிர்வகிக்கப்பட்டு வருகின்றது.
தல அமைப்பு:
அழகிய சிற்பங்களுடன் கூடிய இக்கோவில் கருவறையில் மூலவர் பாலமுருகன் அழகு பாலகனாக நின்ற திருக்கோலத்தில் திருக்காட்சி தந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மேலும் அருகில் செல்வ விநாயகர் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். உற்சவர் வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமான் பொலிவான தோற்றத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கணபதி, சிவபெருமான், அம்பாள், ஆஞ்சநேயர், நவக்கிரகங்கள் உள்ளிட்ட அனைத்துத் தெய்வங்களும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
தைப்பூசம்,பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, விநாயகர் சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி, சஷ்டி, கார்த்திகை, பிரதோஷம், ஆஞ்சநேய ஜெயந்தி
பிரார்த்தனை:
பாவங்கள் போக்க, கேட்டது கிடைக்க, வினைகள் நீங்க, பிணிகள் அகல, திருமணம், குழந்தை வேண்டி, தொழில், வியாபாரம் மேம்பட, கல்வி, ஞானம் சிறக்க, உடல் நலன் சீராக, மன மகிழ்ச்சி கிட்ட, தோஷங்கள் விலக
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
கேட்டதை எல்லாம் தந்தருளும் விருதுநகர் ராஜபாளையம் புதுபாளையம் பாலமுருகன் மனக்கண்ணால் தரிசித்து பயன்பெறுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 1299 பாவங்களை போக்கியருளும் விருதுநகர் ராஜபாளையம் புதுபாளையம் பாலமுருகன் , செல்வ விநாயகர்
Comments
Post a Comment