கோவில் 1271 - மதுரை ஐராவதநல்லூர் தண்டாயுதபாணி கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1271
சங்கடங்கள் தீர்க்கும் மதுரை ஐராவதநல்லூர் தண்டாயுதபாணி கோவில்
30.11.24 சனி
அருள்மிகு தண்டாயுதபாணி கோவில்
ஐராவதநல்லூர்
மதுரை 625009
மதுரை மாவட்டம்
இருப்பிடம்: மதுரை பெரியார் பேருந்து நிலையம் 6 கிமீ, மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் 6 கிமீ, மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையம் 7 கிமீ, திருப்பரங்குன்றம் 11 கிமீ, திருமங்கலம் 28 கிமீ
மூலவர்: தண்டாயுதபாணி
தல மகிமை:
மதுரை மாநகரம் மதுரை பெரியார் (நகர) பேருந்து நிலையத்திலிருந்து 6 கிமீ தொலைவில் இருக்கும் ஐராவதநல்லூர் பகுதியில் சங்கடங்கள் தீர்க்கும் மதுரை ஐராவதநல்லூர் தண்டாயுதபாணி கோவில் அமைந்துள்ளது. மேலும் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து 6 கிமீ தொலைவு அல்லது மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து 7 கிமீ தொலைவு அல்லது சிறப்பு மிக்க திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலிலிருந்து 11 கிமீ தொலைவு அல்லது திருமங்கலம் பேருந்து நிலையத்திலிருந்து 28 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் மதுரை நகரில் உள்ள ஐராவதநல்லூர் தண்டாயுதபாணி கோவிலை அடையலாம். இக்கோவிலில் தண்டாயுதபாணி மூலவராக அருள்புரிகின்றார். இக்கோவில் கும்பாபிஷேகம் கடந்த 17.11.24 ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
மதுரை ஐராவதநல்லூர் தண்டாயுதபாணி கோவிலில் தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம் திருவிழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கார்த்திகை திருநாட்களில் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.
தல வரலாறு:
இப்பகுதி வாழ் புரவலர்கள் மற்றும் சைவ பெருமக்கள் பேருதவியால் ஐராவதநல்லூர் தண்டாயுதபாணி கோவில் கட்டப்பட்டது. சமீபத்தில் இக்கோவில் திருப்பணிகள் நிறைவு பெற்று கடந்த 17.11.24 அன்று கும்பாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
தல அமைப்பு:
இக்கோவில் கருவறையில் மூலவராக தண்டாயுதபாணி அழகிய திருக்கோலத்தில் கையில் தண்டம் ஏந்தி நின்ற நிலையில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறை எதிரில் மயில், பலிபீடம் உள்ளன, மேலும் கருவறை வாயிலில் விநாயகர், முருகன் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சஷ்டி, கார்த்திகை
பிரார்த்தனை:
சிக்கல்கள் தீர, நினைத்த காரியங்கள் வெற்றி பெற, கல்வி, ஞானம் மேம்பட, வினைகள் நீங்க, பிணிகள் அகல, தொழில் விருத்தியடைய, மன நிம்மதி கிடைக்க, குடும்ப வாழ்வு சிறக்க
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
நினைத்த காரியங்கள் வெற்றி பெற அருளும் மதுரை ஐராவதநல்லூர் தண்டாயுதபாணியை போற்றி வணங்குவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 1271 சங்கடங்கள் தீர்க்கும் மதுரை ஐராவதநல்லூர் தண்டாயுதபாணி
படம் 2 - 1271 நினைத்த காரியங்கள் வெற்றி பெற அருளும் மதுரை ஐராவதநல்லூர் தண்டாயுதபாணி கோவில்
Comments
Post a Comment