கோவில் 1270 - மதுரை ரயில்வே காலனி செல்வ விநாயகர் சுப்பிரமணியர் கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1270
செல்வங்கள் பெருக அருளும் மதுரை ரயில்வே காலனி செல்வ விநாயகர் சுப்பிரமணியர் கோவில்
29.11.24 வெள்ளி
அருள்மிகு செல்வ விநாயகர் சுப்பிரமணியர் கோவில்
[அ/மி செல்வ விநாயகர் கோவில்]
ரயில்வே காலனி
மதுரை 625016
மதுரை மாவட்டம்
இருப்பிடம்: மதுரை பெரியார் பேருந்து நிலையம் 2 கிமீ, மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் 10 கிமீ, மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையம் 4 கிமீ, திருப்பரங்குன்றம் 8 கிமீ, திருமங்கலம் 22 கிமீ
மூலவர்: சுப்பிரமணியர்
தேவியர்: வள்ளி, தெய்வானை
மூலவர்: செல்வ விநாயகர்
தல மகிமை:
மதுரை மாநகரம் மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து 2 கிமீ தொலைவில் இருக்கும் ரயில்வே காலனியில் செல்வங்கள் பெருக அருளும் ரயில்வே காலனி செல்வ விநாயகர் சுப்பிரமணியர் கோவில் அமைந்துள்ளது. மேலும் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து 10 கிமீ தொலைவு அல்லது மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையம் 4 கிமீ தொலைவு அல்லது புகழ் பெற்ற திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலிலிருந்து 8 கிமீ தொலைவு அல்லது திருமங்கலம் பேருந்து நிலையத்திலிருந்து 22 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் மதுரை நகரில் உள்ள ரயில்வே காலனி செல்வ விநாயகர் சுப்பிரமணியர் கோவிலை அடையலாம். இக்கோவிலில் மூலவர் சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானை சமேதராக அருளாட்சி செய்கின்றார். இக்கோவில் ஆற்றல் மிக்க பிரார்த்தனை தலமாகும். இக்கோவில் மதுரை ரயில்வே காலனி செல்வ விநாயகர் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது.
மதுரை ரயில்வே காலனி செல்வ விநாயகர் சுப்பிரமணியர் கோவிலில் முருகப்பெருமானின் தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை உள்ளிட்ட அனைத்து திருவிழாக்களும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. விநாயகர் சதுர்த்தி திருவிழா மூன்று நாட்கள் திருவிழாவாக சிரப்பு பூஜைகள், திருவீதி உலா என விமரிசையாக நடைபெறுகிறது. ராகு, கேது, சனி, குரு பெயர்ச்சிகளின் போது சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடக்கின்றன. பௌர்ணமி, பிரதோஷம், சங்கடஹர சதுர்த்தி, சஷ்டி, கார்த்திகை தினங்களில் சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன.
தல வரலாறு:
எண்பது ஆண்டுகளுக்கு முன் மதுரை ரயில்வே காலனி பகுதியில் விநாயகர் சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அச்சிலைக்கு செல்வ விநாயகர் என்று திருப்பெயரிட்டு ஒரு சிறிய கோவில் எழுப்பப்பட்டது. பின்னர் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் உட்பட அனைத்து கடவுளர் சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டன. செல்வ விநாயகர் போன்றே இப்பகுதியில் சுப்பிரமணியரின் ஆற்றல்களும் இப்பகுதியில் சிறப்பம்சமாக விளங்குகின்றது.
தல அமைப்பு:
அழகிய அமைப்புடன் கூடிய ஒரு கருவறையில் சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானை சமேதராக ஆற்றலுடன் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மற்றொரு கருவறையில் செல்வ விநாயகர் ஆற்றலுடன் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மேலும் சித்தி விநாயகர், சொக்கநாதர், மீனாட்சி, தட்சிணாமூர்த்தி, துர்க்கை, பெருமாள், ஆஞ்சநேயர், கால பைரவர், நவக்கிரகங்கள் உள்ளிட்ட தெய்வங்கள் இக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, விநாயகர் சதுர்த்தி, பௌர்ணமி, பிரதோஷம், சங்கடஹர சதுர்த்தி, சஷ்டி, கார்த்திகை
பிரார்த்தனை:
செல்வம் பெருக, கேட்டது கிடைக்க, பிணிகள் நீங்க, கல்யாண வரம், குழந்தை வரம் வேண்டி, ராகு, கேது, சனி தோஷங்கள் விலக
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
திறக்கும் நேரம்:
காலை 6-10 மாலை 5-8.30
கேட்டது தந்தருளும் மதுரை ரயில்வே காலனி செல்வ விநாயகர் சுப்பிரமணியர் திருவடிகள் பணிந்து போற்றுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 1270 செல்வங்கள் பெருக அருளும் மதுரை ரயில்வே காலனி சுப்பிரமணியர்
படம் 2 - 1270 கேட்டது தந்தருளும் மதுரை ரயில்வே காலனி சுப்பிரமணியர்
Comments
Post a Comment