கோவில் 1269 - மதுரை நல்லமரம் மீனாட்சிபுரம் சுப்பிரமணிய சுவாமி கோவில்

 🙏🏻🙏🏻

தினம் ஒரு முருகன் ஆலயம்-1269

எல்லா நன்மைகளையும் தந்தருளும் மதுரை நல்லமரம் மீனாட்சிபுரம் சுப்பிரமணிய சுவாமி கோவில்

28.11.24 வியாழன்


அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் [TM047235]

மீனாட்சிபுரம்

நல்லமரம் 625702

மதுரை மாவட்டம்

இருப்பிடம்: மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் 58 கிமீ, டி. கல்லுப்பட்டி 5 கிமீ, பேரையூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் 14 கிமீ, விருதுநகர் 22 கிமீ, திருமங்கலம் 25 கிமீ

மூலவர்: சுப்பிரமணிய சுவாமி

தேவியர்: வள்ளி, தெய்வானை


தல மகிமை:

மதுரை மாவட்டம் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து திருமங்கலம் வழியாக 58 கிமீ தொலைவில் இருக்கும் நல்லமரம் கிராமத்தின் அருகில் இருக்கும் மீனாட்சிபுரத்தில் எல்லா நன்மைகளையும் தந்தருளும் நல்லமரம் மீனாட்சிபுரம் சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. மேலும் டி. கல்லுப்பட்டியிலிருந்து 5 கிமீ தொலைவு அல்லது சிறப்பு மிக்க பேரையூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலிலிருந்து 14 கிமீ தொலைவு அல்லது விருதுநகர் பேருந்து நிலையத்திலிருந்து 22 கிமீ தொலைவு அல்லது திருமங்கலம் பேருந்து நிலையத்திலிருந்து 25 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் மதுரை மாவட்டத்தில் உள்ள நல்லமரம் மீனாட்சிபுரம் சுப்பிரமணிய சுவாமி கோவிலை அடையலாம். இக்கோவிலில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானை சமேதராக அருளாட்சி செய்கின்றார். இக்கோவில் ஆற்றல் மிக்க பிரார்த்தனை தலமாகும்.


மதுரை நல்லமரம் மீனாட்சிபுரம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஒவ்வொரு வருடமும் தைப்பூசம் திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. சுப்பிரமணிய சுவாமியின் இதர திருவிழாக்களான பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம் முதலான திருநாட்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. சஷ்டி, கார்த்திகை ஆகிய நன்னாட்களில் விசேஷ பூஜைகள் உண்டு.


தல வரலாறு:

மிகவும் பழமையான இத்திருக்கோவில் நிர்வாகத்தை தற்போது இந்து அறநிலையத்துறை நிர்வகித்து வருகின்றது.


தல அமைப்பு:

ஆகம விதிகளின் படை அமைந்துள்ள இக்கோவிலில் சிற்பங்கள் அழகுற அமைந்துள்ளது. நுழைவாயிலை கடந்த உடன் கொடிமரம், மயில், பலிபீடம் உள்ளன. இக்கோவில் கருவறையில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானையுடன் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மேலும் விநாயகர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, சிவபெருமான், அம்பாள், பைரவர், நவக்கிரகங்கள் உள்ளிட்ட அனைத்து பரிவார தெய்வங்களும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.


திருவிழா:

தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், பிரதோஷம், சங்கடஹர சதுர்த்தி, சஷ்டி, கார்த்திகை


பிரார்த்தனை:

நன்மைகள் வேண்டி, நேர்மறை அதிர்வுகள் உண்டாக, நினைத்தது நிறைவேற, வினைகள் நீங்க, சிக்கல்கள் தீர, திருமணத்தடை அகல, குழந்தை வரம் கிடைத்திட, உடல் ஆரோக்கியம் வேண்டி


நேர்த்திக்கடன்:

அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்


திறக்கும் நேரம்:

காலை 6-9 மாலை 5-8


நேர்மறை அதிர்வுகளை உண்டாக்கும் மதுரை நல்லமரம் மீனாட்சிபுரம் சுப்பிரமணிய சுவாமியை போற்றி வணங்குவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

Dr K. முத்துக்குமரன் Ph. D

9489302842

bamikumar@gmail.com

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻


படம் 1 - 1269 எல்லா நன்மைகளையும் தந்தருளும் மதுரை நல்லமரம் மீனாட்சிபுரம் சுப்பிரமணிய சுவாமி


படம் 2 - 1269 நேர்மறை அதிர்வுகளை உண்டாக்கும் மதுரை நல்லமரம் மீனாட்சிபுரம் சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாணம்



Comments

Popular posts from this blog

கோவில் 1319 - சேலம் மல்லிகுந்தம் சின்ன பழனியாண்டவர் கோவில்

கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 1201 - கொழும்பு மாண்புமிகு பண்டாரநாயக்க மாவத்தை சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்