கோவில் 1268 - மதுரை சிந்தாமணி அய்யனார்புரம் முருகன் கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1268
விருப்பங்களை நிறைவேற்றும் மதுரை சிந்தாமணி அய்யனார்புரம் முருகன் கோவில்
27.11.24 புதன்
அருள்மிகு முருகன் கோவில்
அய்யனார்புரம்
சிந்தாமணி
மதுரை 625009
மதுரை மாவட்டம்
இருப்பிடம்: மதுரை பெரியார் பேருந்து நிலையம் 7 கிமீ, மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் 10 கிமீ, மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையம் 12 கிமீ, திருப்பரங்குன்றம் 12 கிமீ, திருமங்கலம் 23 கிமீ
மூலவர்: முருகன்
உற்சவர்: முருகன்
தல மகிமை:
மதுரை மாவட்டம் மதுரை மாநகரம் பெரியார் (நகர) பேருந்து நிலையத்திலிருந்து திருப்பரங்குன்றம் சாலையில் 7 கிமீ தொலைவில் இருக்கும் சிந்தாமணி நகரம் அருகில் இருக்கும் அய்யனார்புரத்தில் விருப்பங்களை நிறைவேற்றும் அய்யனார்புரம் முருகன் கோவில் அமைந்துள்ளது. மேலும் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து 10 கிமீ தொலைவு அல்லது மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து 12 கிமீ தொலைவு அல்லது உலகப் புகழ் பெற்ற முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலிலிருந்து 12 கிமீ தொலைவு அல்லது திருமங்கலம் பேருந்து நிலையத்திலிருந்து 23 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் மதுரை சிந்தாமணி அய்யனார்புரம் முருகன் கோவிலை அடையலாம். இக்கோவிலில் மூலவர் முருகப்பெருமான் கையில் தண்டம் ஏந்தி அருள்கின்றார்.
மதுரை சிந்தாமணி அய்யனார்புரம் முருகன் கோவிலில் தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம் திருவிழாக்கள் சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனைகளுடன் விமரிசியாக நடைபெறுகின்றன.
தல வரலாறு:
மதுரை வாழ் முருக பக்தர்கள் மற்றும் புரவலர்கள் பேருதவியுடன் இப்பகுதியில் முருகன் கோவில் நிறுவப்பட்டது.
தல அமைப்பு:
இக்கோவில் கருவறையில் மூலவர் முருகப்பெருமான் கையில் தண்டம் ஏந்தி நின்ற நிலையில் அழகிய திருக்கோலத்துடன் காட்சி தந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். உற்சவப்பெருமான் முருகன் அருகில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் விநாயகர், சிவபெருமான், சக்தி முதலான தெய்வங்களும் இக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், சஷ்டி, கார்த்திகை
பிரார்த்தனை:
விருப்பங்களை நிறைவேற, வினைகள் தீர, பிணிகள் நீங்க, திருமணம், குழந்தை பாக்கியம் வேண்டி, மனக்கவலைகள் அகல, நல்லன நடைபெற, தொழில், வியாபாரம் மேம்பட
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
வினைகள் யாவற்றையும் தீர்த்தருளும் மதுரை சிந்தாமணி அய்யனார்புரம் முருகனை மனமுருகி வழிபடுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
Comments
Post a Comment