கோவில் 1267 - மதுரை பழங்காநத்தம் குமரகம் தச பீட மயில் வாகன ஞானவேல் கோவில்

 🙏🏻🙏🏻

தினம் ஒரு முருகன் ஆலயம்-1267

வாழ்வில் திருப்பங்கள் தரும் மதுரை பழங்காநத்தம் குமரகம் தச பீட மயில் வாகன ஞானவேல் கோவில்

26.11.24 செவ்வாய்


அருள்மிகு தச பீட மயில் வாகன ஞானவேல் கோவில்

குமரகம்

திருப்பரங்குன்றம் சாலை

பழங்காநத்தம்

மதுரை 625003

மதுரை மாவட்டம்

இருப்பிடம்: மதுரை பெரியார் பேருந்து நிலையம் 4 கிமீ, மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் 11 கிமீ, மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையம் 6 கிமீ, திருப்பரங்குன்றம் 4 கிமீ, திருமங்கலம் 16 கிமீ

மூலவர்: ஞானவேல்


தல மகிமை:

மதுரை மாவட்டம் மதுரை மாநகரம் பெரியார் (நகர) பேருந்து நிலையத்திலிருந்து திருப்பரங்குன்றம் சாலையில் 4 கிமீ தொலைவில் இருக்கும் பழங்காநத்தத்தில் வாழ்வில் திருப்பங்கள் தரும் பழங்காநத்தம் குமரகம் தச பீட மயில் வாகன ஞானவேல் கோவில் அமைந்துள்ளது. மேலும் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து 11 கிமீ தொலைவு அல்லது மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து 6 கிமீ தொலைவு அல்லது உலகப் புகழ் பெற்ற முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலிலிருந்து 4 கிமீ தொலைவு அல்லது திருமங்கலம் பேருந்து நிலையத்திலிருந்து 16 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் மதுரை பழங்காநத்தம் குமரகம் தச பீட மயில் வாகன ஞானவேல் கோவிலை அடையலாம். இக்கோவிலில் மூலவர் ஞானவேல் வேலாயுத மூர்த்தியாக அருளாட்சி செய்கின்றார்.


இக்கோவிலில் முருகபெருமானுக்குரிய தைப்பூசம், பங்குனி உத்திரம் திருவிழாக்கள் விமரிசையாக நடைபெறுகின்றன. மேலும் கந்த சஷ்டி, வைகாசி விசாகம் உள்ளிட்ட திருவிழாக்கள் அனைத்தும் சிறப்பாகக் கொண்டாடபடுகின்றன. சஷ்டி, கார்த்திகை திருநாட்களில் விசேஷ பூஜைகள் உண்டு.


தல வரலாறு:

மதுரை பழங்காநத்தம் பகுதியில் பல்லாண்டுகளுக்கு முன்னர் வேல் ஒன்று தீவிர முருக பக்த்ரகளால் பிரதிஷ்டை செய்யப்பட்டு, பின்னர் கோவில் எழுப்பப்பட்டது. இக்கோவில் குமரகம் என்றும் தச பீட மயில் வாகன ஞானவேல் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது.


தல அமைப்பு:

இக்கோவிலில் அழகிய ஞானவேல் மூலவராக வீற்றிருந்து வேலாயுத மூர்த்தியாக திருக்காட்சியளித்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மயில், பலிபீடம் உள்ளன. மேலும் விநாயகர் தனி சந்நிதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றார்.


திருவிழா:

தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், சஷ்டி, கார்த்திகை


பிரார்த்தனை:

வாழ்வில் திருப்பங்கள் பெற்றிட, ஞானம் மேம்பட, வல்வினைகள் தீர, பிணிகள் நீங்க, கல்வி சிறக்க, வேண்டியது நிறைவேற, மன அமைதி கிட்ட, நோய்கள் குணமாக, தோஷங்கள் விலகிட


நேர்த்திக்கடன்:

அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்


திறக்கும் நேரம்:

காலை 6-10 மாலை 5-8.30


ஞானம் மேம்பட அருளும் மதுரை பழங்காநத்தம் குமரகம் தச பீட மயில் வாகன ஞானவேல் திருவடி பணிந்து தொழுதிடுவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

Dr K. முத்துக்குமரன் Ph. D

9489302842

bamikumar@gmail.com

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻


படம் 1 - 1267 வாழ்வில் திருப்பங்கள் தரும் மதுரை பழங்காநத்தம் குமரகம் தச பீட மயில் வாகன ஞானவேல்


படம் 2 - 1267 ஞானம் மேம்பட அருளும் மதுரை பழங்காநத்தம் குமரகம் தச பீட மயில் வாகன ஞானவேல் கோவில்



Comments

Popular posts from this blog

கோவில் 1319 - சேலம் மல்லிகுந்தம் சின்ன பழனியாண்டவர் கோவில்

கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 1201 - கொழும்பு மாண்புமிகு பண்டாரநாயக்க மாவத்தை சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்