கோவில் 1117 - கடலூர் அம்பாபுரம் சுப்பிரமணிய சுவாமி கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1117
கேட்கும் வரமருளும் கடலூர் அம்பாபுரம் சுப்பிரமணிய சுவாமி கோவில்
29.6.2024 சனி
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் [TM021793]
அம்பாபுரம்—608704
புவனகிரி வட்டம்
கடலூர் மாவட்டம்
இருப்பிடம்: புவனகிரி 13 கிமீ, வடலூர் 12 கிமீ, சிதம்பரம் 18 கிமீ
மூலவர் சுப்பிரமணிய சுவாமி
தேவியர்: வள்ளி, தெய்வானை
தல மகிமை:
கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் புவனகிரி பேருந்து நிலையத்திலிருந்து 13 கிமீ தொலைவில் இருக்கும் அம்பாபுரம் கிராமத்தில் கேட்கும் வரமருளும் சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. வடலூர் வள்ளலார் மையத்திலிருந்து 12 கிமீ அல்லது சிதம்பரம் நடராஜர் கோவிலிலிருந்து 18 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் அம்பாபுரம் சுப்பிரமணிய சுவாமி கோவிலை அடையலாம். இக்கோவிலில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானை சமேதராக அருள்கின்றார். பின்னலூர் சுப்பிரமணிய சுவாமி [கோவில் எண்: 438] இக்கோவிலிலிருந்து 2 கிமீ அருகில் இருப்பது சிறப்பம்சமாகும்.
இத்திருக்கோவிலில் பங்குனி உத்தர திருவிழா வெகு விமரிசயாக நடைபெறுகின்றன. முருகப்பெருமானுக்குரிய அனைத்து திருநாட்களும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.
தல வரலாறு:
மிகவும் பழமையான இக்கோவில் நிர்வாகம் இந்து அறநிலையத் துறை மூலமாக நிர்வகிக்கப்படுகின்றது.
தல அமைப்பு:
இக்கோவில் கருவறையில் மூலவ்ர் சுப்பிரமணிய சுவாமி கையில் வேலுடன் வள்ளி, தெய்வானை சகிதம் திருக்காட்சியருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறை எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் இக்கோவிலில் கணபதி உள்ளிட்ட அனைத்து தெய்வங்களும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
பங்குனி உத்திரம், தைப்பூசம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், கார்த்திகை, சஷ்டி
பிரார்த்தனை:
கேட்டது கிடைக்க, வினைகள் தீர, நல்லன நடைபெற, திருமணம் வேண்டி, குழந்தை வரம் கிட்ட, நோய்கள் அகல, தோஷங்கள் நீங்க
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல்
வினைகள் யாவும் தீர அருளும் கடலூர் அம்பாபுரம் சுப்பிரமணிய சுவாமி திருவடிகள் பணிந்து தொழுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 1117 கேட்கும் வரமருளும் கடலூர் அம்பாபுரம் சுப்பிரமணிய சுவாமி கோவில்
Comments
Post a Comment