கோவில் 1026 - விழுப்புரம் செஞ்சி சுப்பிரமணிய சுவாமி கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1026
நன்மைகளை அள்ளித் தரும் விழுப்புரம் செஞ்சி சுப்பிரமணிய சுவாமி கோவில்
30.3.2024 சனி
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் [TM011939]
B. ஏரிக்கரை
செஞ்சி-604202
விழுப்புரம் மாவட்டம்
இருப்பிடம்: விழுப்புரம் 39 கிமீ, திண்டிவனம் 32 கிமீ, செஞ்சி பேருந்து நிலையம் 1 கிமீ
மூலவர்: சுப்பிரமணிய சுவாமி (சுப்பிரமணியர்)
தேவியர்: வள்ளி, தெய்வானை
தல மகிமை:
விழுப்புரம் மாவட்டம் விழுப்புரம் மாநகரிலிருந்து 39 கிமீ தொலைவிலும், திண்டிவனம் நகரிலிருந்து 32 கிமீ தொலைவிலும் உள்ள உலகப் புகழ் பெற்ற சுற்றுலா தலமான செஞ்சி கோட்டைக்கருகில் B. ஏரிக்கரையில் உள்ள நன்மைகளை அள்ளித் தரும் சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. செஞ்சி பேருந்து நிலையத்திலிருந்து 1 கிமீ அருகில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானையுடன் அருள்புரிகின்றார்.
50 ஆண்டுகளாக ஆடிக்கிருத்திகை திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. கொடியேற்றத்துடன் தொடங்கும் 10 நாள் பெருவிழாவில் தினமும் காலையில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. ஆடிக்கிருத்திகை திருநாளன்று அருகிலுள்ள மகா மாரியம்மன் ஆலயத்தில் இருந்து 108 பால் குட ஊர்வலமும், சக்திவேல் அபிஷேகம் மற்றும் ஊர்வலமும், தொடர்நது காலை 10 மணிக்கு மேல் அக்கினி சட்டி ஊர்வலமும், தீ மிதித்தல் மற்றும் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி தேர் வீதியுலாவும் சிறப்பாக நடைபெறுகின்றன. இதனை தொடர்ந்து திருக்கோவில் வளாகத்தில் செக்கில் நல்லெண்ணெய் ஆடும் நிகழ்ச்சியும், வேண்டுதல் உள்ள 5 நபர்களுக்கு மிளகாய் அபிஷேகமும், முதுகில் அலகு குத்தி பறவை காவடி மற்றும் கிரேன் ,நெல் அறுவடை இயந்திரம், லாரி, ஜேசிபி உள்ளிட்ட வாகனங்களை இழுத்து/ஓட்டி திருவண்ணாமலை சாலை, விழுப்புரம் சாலை, பீரங்கி மேடு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து கோவிலை வந்தடைவர். மேலும் முருகப்பெருமானுக்குரிய அனைத்து திருவிழாக்களும் சிறப்பாக நடைபெறுகின்றன.
தல வரலாறு:
இக்கோவில் 50 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானதாக கருதப்படுகின்றது.
தல அமைப்பு:
அழகிய கொடிமரம் கோவில் வாயிலில் உள்ளது. கருவறையில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானை சமேதராக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மேலும் விநாயகர், அம்பாள் மற்றும் இதர தெய்வங்களும் இக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
ஆடிக்கிருத்திகை, பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, தைப்பூசம், வைகாசி விசாகம், கார்த்திகை, சஷ்டி
பிரார்த்தனை:
நன்மைகள் பெற, துன்பங்கள் நீங்க, திருமண வரம், குழந்தை வரம் வேண்டி, எண்ணியது நிறைவேற
நேர்த்திக்கடன்:
பால்குடம், காவடி, அலகு குத்துதல், தூக்கு நேர்ச்சை, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல்
துன்பங்கள் நீங்க அருளும் விழுப்புரம் செஞ்சி சுப்பிரமணிய சுவாமி மனமுருகி வேண்டுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 1026 நன்மைகளை அள்ளித் தரும் விழுப்புரம் செஞ்சி சுப்பிரமணிய சுவாமி
படம் 2 - 1026 துன்பங்கள் நீங்க அருளும் விழுப்புரம் செஞ்சி சுப்பிரமணிய சுவாமி கோவில்
Comments
Post a Comment