கோவில் 1023 - திருவாரூர் லட்சுமாங்குடி சுப்பிரமணிய சுவாமி கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1023
எண்ணியதை ஈடேற்றும் திருவாரூர் லட்சுமாங்குடி சுப்பிரமணிய சுவாமி கோவில்
27.3.2024 புதன்
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் [TM016524]
லட்சுமாங்குடி-614102
[லஷ்மாங்குடி/லெட்சுமாங்குடி]
திருவாரூர் மாவட்டம்
இருப்பிடம்: திருவாரூர் 17 கிமீ, மன்னார்குடி 12 கிமீ, கூத்தாநல்லூர் 1.5 கிமீ
மூலவர்: சுப்பிரமணிய சுவாமி
தேவியர்: வள்ளி, தெய்வானை
தல மகிமை:
திருவாரூர் மாவட்டம் திருவாரூர் கோவில் நகரிலிருந்து 17 கிமீ தொலைவில் இருக்கும் லட்சுமாங்குடி என்னும் ஊரில் சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. மன்னார்குடியிலிருந்து 12 கிமீ பிரயாணம் செய்தாலும், அருகில் உள்ள கூத்தாநல்லூரிலிருந்து 1.5 கிமீ பிரயாணம் செய்தாலும் லட்சுமாங்குடி சுப்பிரமணிய சுவாமி கோவிலை அடையலாம். இக்கோவிலில் சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானை சமேதராக அருள்பாலிக்கின்றார்.
இக்கோவிலில் கந்த சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம், சித்ரா பௌர்ணமி உள்ளிட்ட திருவிழாக்கள் சிறப்பாக நடைபெறுகின்றன. கார்த்திகை, சஷ்டி, செவ்வாய், வெள்ளி திருநாட்களில் விசேஷ பூஜைகள் நடக்கின்றன.
தல வரலாறு:
இந்து அறநிலையத் துறை மூலம் நிர்வகிக்கப்படும் இக்கோவில் மிகவும் பழமையானதாக கருதப்படுகிறது.
தல அமைப்பு:
இத்திருக்கோவில் கருவறையில் சுப்பிரமணிய சுவாமி கையில் வேலேந்தி வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மேலும் விநாயகர், இடும்பன் உட்பட தெய்வங்கள் அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
கந்த சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம், சித்ரா பௌர்ணமி, கார்த்திகை, சஷ்டி
பிரார்த்தனை:
எண்ணியதை ஈடேற, தீவினைகள் அகல, நல்லன நடக்க, குடும்ப ஒற்றுமை ஓங்கிட, கல்வி, ஞானம், செல்வம் மேம்பட
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல்
தீவினைகள் அகல அருளும் திருவாரூர் லட்சுமாங்குடி சுப்பிரமணிய சுவாமியை போற்றி வணங்குவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 1023 எண்ணியதை ஈடேற்றும் திருவாரூர் லட்சுமாங்குடி சுப்பிரமணிய சுவாமி
படம் 2 - 1023 தீவினைகள் அகல அருளும் திருவாரூர் லட்சுமாங்குடி சுப்பிரமணிய சுவாமி
Comments
Post a Comment