கோவில் 997 - திருப்பத்தூர் கொரட்டி காளத்தீஸ்வரர் கோவில் சண்முகர்

 🙏🏻🙏🏻 

தினம் ஒரு முருகன் ஆலயம்-997 [திருப்புகழ் தலம்]

தடைகளை அகற்றும் திருப்பத்தூர் கொரட்டி காளத்தீஸ்வரர் கோவில் சண்முகர்

1.3.2024 வெள்ளி


அருள்மிகு காளத்தீஸ்வரர் திருக்கோவில் [TM003988]

திருப்புகழ் தலம்

[குறட்டி]

கொரட்டி-635602

திருப்பத்தூர் மாவட்டம்

இருப்பிடம்: திருப்பத்தூர் 8 கிமீ


மூலவர்: காளத்தீஸ்வரர்

அம்பாள்: ஞானப்பூங்கோதை

திருப்புகழ் நாயகர்: சண்முகர்

தேவியர்: வள்ளி, தெய்வானை

தல விருட்சம்: வில்வமரம்

தீர்த்தம்: ஜம்பு நதி

புராணப்பெயர்: குறட்டி

பாடியவர்: அருணகிரிநாதர் (2)


தல மகிமை:

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர்-ஊத்தங்கரை சாலையில் திருப்பத்தூரிலிருந்து 8 கிமீ-ல் தொலைவில் இருக்கும் கொரட்டி [குறட்டி திருத்தலம்] என்ற கிராமத்தில் தடைகளை அகற்றும் காளத்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்கு காளத்தீஸ்வரர் அம்பாள் ஞானப்பூங்கோதையுடன் அருளாட்சி புரிந்து வருகின்றார். திருக்காளத்தி (காளஹஸ்தி) போல சர்ப்ப தோஷப் பரிகாரத் தலமாக உள்ளது. தட்சிண வாயுத்தலம் என போற்றப்படுகிறது. திருக்காளத்தியில் நடைபெறும் அனைத்து பரிகார பூஜைகளும் இங்கும் நடைபெறுகின்றன.


ஆடிக்கிருத்திகை திருவிழா ஒரு நாளும், பங்குனி உத்திர திருவிழா 13 நாட்களும் கொண்டாடப்படுகின்றன. மார் மீது மஞ்சள் இடித்தல் நேர்த்திக்கடனும், அலகுக் குத்தி, வேலேந்தி, பால்காவடி, புஷ்பக்காவடி, தேன்காவடி, இளநீர்காவடிகள் எடுத்து நேர்த்திக்கடனை நிறைவேற்றுகின்றனர்.


அருணகிரிநாதர் குரட்டி சண்முகரை நோக்கி இரண்டு திருப்புகழ் பாடல்கள் பாடியுள்ளார். “கூரியக் கடைக்கணாலும்”, “நீரிழிவு குட்டம் ஈளை” என்று தொடங்கி “வாகுள குறட்டி மேவு பெருமாளே” என்று இரண்டு பாடல்களையும் சிறப்புற முடிக்கின்றார்.


தல வரலாறு:

திரேதா யுகத்தில் ஜதூக முனிவரின் நியமம் தடைபடாதிருக்கும் பொருட்டு திருக்காளத்தியில் எழுந்தருளியுள்ள காளத்தீஸ்வரர் பிரதோஷ காலத்தில் இத்தலத்திலும் எழுந்தருளி தரிசனம் தந்ததாக தலபுராணம் கூறுகின்றது. இந்து அறநிலையத் துறை நிர்வகிக்கும் இக்கோவில் கல்வெட்டில் திருவண்ணாமலை பெருமாள் நல்லூராகிய குறட்டி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பழமையான இத்திருக்கோவில் புனரமைக்கப்பட்டு 2015-ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது.


தல அமைப்பு:

இக்கோவிலில் ஐந்து நிலை கொண்ட ராஜகோபுரம் உள்ளது. கருவறையில் மூலவர் காளத்தீஸ்வரர் சுயம்பு லிங்கமாக மேற்கு நோக்கி எழுந்தருளி அருள்பாலிக்கின்றார். கோஷ்ட தெய்வங்களும் அருள்கின்றனர். அம்பாள் ஞானப்பூங்கோதை நின்ற திருக்கோலத்தில் கிழக்கு நோக்கி எழுந்தருளி அருள்பாலிக்கின்றார். மேலும் விநாயகர், காசி விஸ்வநாதர், ராமநாதீஸ்வரர், ஜதூக முனிவர் உட்பட அனைத்து தெய்வங்களும் அருள்பாலிக்கின்றனர்.


.இக்கோவிலின் வெளிப்பிரகாரத்தில், கருவறையின் பின்புறம் வலது பக்கம் திருப்புகழ் தெய்வம் சண்முகர் ஆறு திருமுகங்களும், பன்னிரு திருக்கரங்களும் கொண்டு மயில் மீதமர்ந்து அற்புதத் திருக்கோலத்தில் வள்ளி, தெய்வானை இரு தேவியரும் உடனிருக்க கிழக்கு நோக்கி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.


திருவிழா:

மகா சிவராத்திரி, மாசிமகம், ஆடிக்கிருத்திகை, கந்த சஷ்டி, பங்குனி உத்திரம் (13 நாள்), தைப்பூசம், பிரதோஷம், கார்த்திகை, சஷ்டி


பிரார்த்தனை:

தடைகள் அகல, சர்ப்ப தோஷப் பரிகாரம் வேண்டி


நேர்த்திக்கடன்:

மார் மீது மஞ்சள் இடித்தல், அலகு குத்துதல், வேலேந்தல், பால்காவடி, புஷ்பக்காவடி, தேன்காவடி, இளநீர்காவடிகள், அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல்


திறக்கும் நேரம்:

காலை 6-9.30 மாலை 5-8


சர்ப்ப தோஷம் நீக்கி அருளும் திருப்பத்தூர் கொரட்டி காளத்தீஸ்வரர், சண்முகரை ஒரு சேர வணங்கிடுவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

Dr K. முத்துக்குமரன் Ph. D

9489302842

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻


படம் 1 - 997 தடைகளை அகற்றும் திருப்பத்தூர் கொரட்டி காளத்தீஸ்வரர் கோவில் சண்முகர்


படம் 2 - 997 சர்ப்ப தோஷம் நீக்கி அருளும் திருப்பத்தூர் கொரட்டி காளத்தீஸ்வரர்



Comments

Popular posts from this blog

கோவில் 1319 - சேலம் மல்லிகுந்தம் சின்ன பழனியாண்டவர் கோவில்

கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 1201 - கொழும்பு மாண்புமிகு பண்டாரநாயக்க மாவத்தை சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்