கோவில் 813 - பெங்களூரு பரப்பன அக்ரஹார சுப்ரமண்ய சுவாமி கோவில்

 🙏🏻🙏🏻

தினம் ஒரு முருகன் ஆலயம்-813

நல்லன அருளும் பெங்களூரு பரப்பன அக்ரஹார சுப்ரமண்ய சுவாமி கோவில்

30.8.2023 புதன்


அருள்மிகு சுப்ரமண்ய சுவாமி திருக்கோவில்

சாய் ஸ்ரீ லே அவுட் [Sai Sree Lay Out]

பரப்பன அக்ரஹார [Parappana Agrahara]

பெங்களூரு-560068 [Bengaluru]

கர்நாடகா மாநிலம்

இருப்பிடம்: பெங்களூரு மெஜெஸ்டிக்/KSR ரயில் நிலையம் 18 கிமீ, ஓசூர் 27 கிமீ


மூலவர்: சுப்ரமண்ய சுவாமி

தேவியர்: வள்ளி, தெய்வானை


தலமகிமை:

கர்நாடகா மாநிலம் பெங்களூரு மாநகரம் மெஜெஸ்டிக் KG பேருந்து நிலையம்/ KSR பெங்களூரு சிட்டி ரயில் நிலையத்திலிருந்து 18 கிமீ தூரத்தில் உள்ள பரப்பன அக்ரஹார பகுதியில் நல்லன அருளும் சுப்ரமண்ய சுவாமி கோவில் அமைந்துள்ளது. தமிழக நகரமான ஓசூரிலிருந்து 27 கிமீ பிராயாணம் செய்தாலும், இக்கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் சுப்ரமண்ய சுவாமி வள்ளி, தெய்வானை சமேதராக அருளாட்சி செய்கின்றார். இக்கோவில் முருகப்பெருமானை வழிபடும் கர்ப்பிணி பெண்களுக்கு, சுகப் பிரசவம் அடைய அருள்புரிகின்றார் சுப்ரமண்ய சுவாமி என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை.


மன அமைதி கிடைக்கும் மற்றும் நேர்மறை எண்ணங்களை உண்டாக்கும் இக்கோவிலில் தைப்பூசம் சிறப்பாக நடைபெறுகின்றது. இது போல பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், கந்த சஷ்டி திருவிழாக்களும் தமிழ் பக்தர்கள் மட்டுமல்லாது, இப்பகுதியில் உள்ள அனைத்து மாநில பக்தர்களின் பங்களிப்போடு வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றது. அனைத்து கிருத்திகை, சஷ்டி திருநாட்களும் சிறப்பு பூஜைகளுடன் நடைபெறுகின்றன.


தல வரலாறு:

இப்பகுதி செல்வந்தர்கள் மற்றும் பக்தர்களால் இக்கோவில் கட்டப்பட்டது.

.

தல அமைப்பு:

அழகிய ராஜகோபுரம் உடைய இத்திருக்கோவில் கருவறையில் முருகப்பெருமான், சுப்ரமண்ய சுவாமி என்ற திருப்பெயர் தாங்கி, வள்ளி, தெய்வானை உடனிருக்க திருக்காட்சி நின்ற கோலத்தில் அருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மேலும் விநாயகர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, சிவன், அம்பாள், நடராஜர், ஆஞ்சநேயர், நவக்கிரகங்கள் தனி சந்நிதிகளில் அருள்கின்றனர்.


திருவிழா:

தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், கந்த சஷ்டி, கிருத்திகை, சஷ்டி, வெள்ளி, செவ்வாய்


பிரார்த்தனை:

நல்லன நடக்க, சுகப் பிரசவம் அடைய, குழந்தை வரம் வேண்டி, மன அமைதி பெற, நேர்மறை எண்ணங்கள் உண்டாக


நேர்த்திக்கடன்:

அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் அணிவித்தல், அன்னதானம்


திறக்கும் நேரம்:

காலை 6-9 மாலை 5-7


நேர்மறை எண்ணங்களை உண்டாக்கும் பெங்களூரு பரப்பன அக்ரஹார சுப்ரமண்ய சுவாமியை போற்றி வணங்குவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

Dr K. முத்துக்குமரன் Ph. D

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻


படம் 1 - 813 நல்லன அருளும் பெங்களூரு பரப்பன அக்ரஹார சுப்ரமண்ய சுவாமி


படம் 2 - 813 நேர்மறை எண்ணங்களை உண்டாக்கும் பெங்களூரு பரப்பன அக்ரஹார சுப்ரமண்ய சுவாமி

Comments

Popular posts from this blog

கோவில் 1319 - சேலம் மல்லிகுந்தம் சின்ன பழனியாண்டவர் கோவில்

கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 1201 - கொழும்பு மாண்புமிகு பண்டாரநாயக்க மாவத்தை சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்