கோவில் 811 - கிருஷ்ணகிரி வேப்பனபள்ளி பச்சைமலை முருகன் கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-811
வேண்டியவை விரைவில் நிறைவேற அருளும் கிருஷ்ணகிரி வேப்பனபள்ளி பச்சைமலை முருகன் கோவில்
28.8.2023 திங்கள்
அருள்மிகு பச்சைமலை முருகன் திருக்கோவில்
காரக்குப்பம்
வேப்பனபள்ளி-635121
(வேப்பனஹள்ளி)
கிருஷ்ணகிரி மாவட்டம்
இருப்பிடம்: கிருஷ்ணகிரி 26 கிமீ
மூலவர்: பச்சைமலை முருகன்
தேவியர்: வள்ளி, தெய்வானை
பழமை: 45 ஆண்டுகள்
தலமகிமை:
கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரி நகரிலிருந்து 26 கிமீ தூரத்தில் உள்ள வேப்பனபள்ளி (வேப்பனஹள்ளி என்றும் அழைப்பர்) என்ற ஊருக்கு அருகில் சிறப்பு மிக்க பச்சைமலை முருகன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் மூலவராக வீற்றிருக்கும் வள்ளி, தெய்வானை சமேத பச்சைமலை முருகப்பெருமானை வழிபடுவோருக்கு வேண்டியவை அனைத்தும் விரைவில் நிறைவேறும் என்பது இப்பகுதி முருக பக்தர்களின் நம்பிக்கை. இக்கோவிலில் திருமணங்கள் அதிக அளவில் நடைபெறுகிறது.
கந்த சஷ்டி, ஆடிக்கிருத்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட முருகப்பெருமானின் அனைத்து திருவிழாக்களும் இங்கு வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. கந்த சஷ்டி பெருவிழா 7 நாட்கள் சிறப்பாக நடைபெறுகின்றன. முதல் ஆறு நாட்கள் பச்சைமலை முருகன், வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. 6-ம் நாள் மாலை சூரசம்ஹாரம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறும். ஏழாம் நாளன்று காலை முருகன், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடைபெறும். தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். கோவிலுக்கு சேவல் கொடி, வேல் வைத்து சிறப்பு பூஜைகள், யாகங்கள், ஆராதனைகள் செய்யப்படுகின்றன. இவ்விழாவில் வேப்பனஹள்ளி மற்றும் சுற்றுவட்டாரத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து பச்சைமலை முருகனை வழிபட்டு, அமைத்து நற்பலன்களை பெற்று செல்கின்றனர்.
2.8.2023 அன்று 40-ம் ஆண்டு ஆடிக்கிருத்திகை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. 9.8.23 அன்று பச்சைமலை முருகனுக்கு காவடி எடுத்தல், அலகு குத்துதல், தேர் இழுத்தல், ராட்டினம் இழுத்தல், கிரேன் காவடி (தூக்குக்காவடி), வாகன காவடி, எலுமிச்சை காவடி என்று தங்கள் நேர்த்திக்கடன்களை பக்தர்கள் செலுத்தினர்.
தல வரலாறு:
சுமார் 45 ஆண்டுகளுக்கு முன் இக்கோவில் எழுப்பப்பட்டதாக தெரிவிக்கின்றனர்.
தல அமைப்பு:
அழகிய வேலுடன் கூடிய ராஜகோபுரம் எதிரில் தீபஸ்தம்பம் உள்ளது. திருக்கோவில் கருவறையில் பச்சைமலை முருகன் வள்ளி, தெய்வானை உடனிருக்க நின்ற திருக்கோலத்தில் வேல், சேவற்கொடி தாங்கி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மேலும் விநாயகர் உட்பட அனைத்து தெய்வங்களும் அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
கந்த சஷ்டி, ஆடிக்கிருத்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம், கிருத்திகை, சஷ்டி
பிரார்த்தனை:
வேண்டியவை நிறைவேற, திருமணம் வேண்டி, குழந்தை வேண்டி, பிணிகள் அகல, மன அமைதி கிடைக்க
நேர்த்திக்கடன்:
பால்குடம், காவடி, தூக்குக்காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் அணிவித்தல், அன்னதானம்
பிணிகள் அகல அருளும் கிருஷ்ணகிரி வேப்பனபள்ளி பச்சைமலை முருகன் பணிந்து வேண்டுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
Dr K. முத்துக்குமரன் Ph. D
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 811 வேண்டியவை விரைவில் நிறைவேற அருளும் கிருஷ்ணகிரி வேப்பனபள்ளி பச்சைமலை முருகன்
படம் 2 - 811 பிணிகள் அகல அருளும் கிருஷ்ணகிரி வேப்பனபள்ளி பச்சைமலை முருகன்
Comments
Post a Comment