கோவில் 753 - சென்னை நந்தனம் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்
🙏🏻🙏🏻 தினம் ஒரு முருகன் ஆலயம்-753
வெற்றிகரமான அறுவை சிகிச்சைக்கு (Operation) அருளும் சென்னை நந்தனம் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்
1.7.2023 சனி
அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்
முதல் மெயின் ரோடு
நந்தனம் விரிவாக்கம் [Nandhanam Extensio]
நந்தனம்
சென்னை-600035
இருப்பிடம்: கோயம்பேடு 10 கிமீ, சென்னை சென்ட்ரல் 9 கிமீ, நந்தனம் பேருந்து நிலையம் 1 கிமீ
மூலவர்: பாலசுப்பிரமணிய சுவாமி
சிறப்புப் பெயர்: ஆப்பரேஷன் முருகன் [Operation முருகன்]
உற்சவர்: முருகப்பெருமான்
தலமகிமை:
சென்னை மாநகரின் மையப்பகுதியில் உள்ள நந்தனம் பேருந்து நிலையத்தில்/Metro Station-ல் இருந்து 1 கிமீ தொலைவில் உள்ள நந்தனம் விரிவாக்கம் [Nandhanam Extensio] முதல் மெயின் ரோடில் வெற்றிகரமான அறுவை சிகிச்சைக்கு (Operation) அருளும் சிறப்பு மிக்க பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. உடல் அறுவை சிகிச்சை செய்ய உள்ளவர்கள் இக்கோவிலில் வீற்றிருக்கும் முருகப்பெருமானை மனமுருகி வேண்டிக்கொண்டால், அறுவை சிகிச்சை வெற்றியடையும் என்பது இப்பகுதி வாழ் மக்களின் நம்பிக்கை ஆகும். எனவே இங்குள்ள மூலவர் பாலசுப்பிரமணிய சுவாமி ஆப்பரேஷன் முருகன் [Operation முருகன்] என்ற சிறப்பு பெயரும் உண்டு.
இக்கோவிலில் சஷ்டி, கிருத்திகை தினங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது. சிறப்பு நாட்களில் அன்னதானம் அளிக்கப்படுகிறது. கந்த சஷ்டி திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. பக்தர்கள் 6 நாட்கள் விரதம் அனுஷ்டிக்கின்றனர். மேலும் பங்குனி உத்திரம், தைப்பூசம், வைகாசி விசாகம் என அனைத்து திருவிழாக்களும் வெகு விமரிசையாக நடக்கின்றன.
தல வரலாறு:
நந்தனம் வாழ் சைவ பெருமக்கள் மற்றும் ஆகச்சிறந்த புரவலர்கள் பெரும் உதவியால் சுமார் 35 ஆண்டுகளுக்கு முன் இக்கோவில் எழுப்பப்பட்டது. சமீபத்தில் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தல அமைப்பு:
இக்கோவிலின் நுழைவு வாயில் வடக்கு நோக்கி அமைந்துள்ளது. கருவறை வாயில் சுவற்றின் இரு பக்கமும் விநாயகர் மற்றும் ஐயப்பன் வீற்றிருந்து அருள்கின்றனர். கருவறையில் மூலவரான பாலசுப்பிரமணிய சுவாமி வடக்கு நோக்கி அழகிய திருக்கோலத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு ஆற்றலுடன் அருள்பாலிக்கின்றனர். முருகப்பெருமானை வழிபடுவோருக்கு உடல்நலன் காத்தருளுகின்றார். கருவறையின் எதிரில் மயில் உள்ளது. முருகப்பெருமான் ஆற்றல் மிக்க ஆஞ்சநேயர் அருள்பாலித்து கொண்டுள்ளார். அடுத்து நவக்கிரகங்கள் தனி சந்நிதியில் அருளுகின்றனர்.
திருவிழா:
கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், தைப்பூசம், வைகாசி விசாகம், கிருத்திகை, சஷ்டி
பிரார்த்தனை:
வெற்றிகரமான அறுவை சிகிச்சைக்கு (Operation) அருள, தொழில் மேம்பட, வியாபாரம் செழிக்க, கல்வி, ஞானம் சிறக்க, எண்ணியது நடக்க
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் அணிவித்தல், அன்னதானம்
திறக்கும் நேரம்:
காலை 8-10 மாலை 6-8
தொழில் மேம்பட அருளும் சென்னை நந்தனம் பாலசுப்பிரமணிய சுவாமியை போற்றி வணங்கிடுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
Dr K. முத்துக்குமரன் Ph. D
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 753 வெற்றிகரமான அறுவை சிகிச்சைக்கு (Operation) அருளும் சென்னை நந்தனம் பாலசுப்பிரமணிய சுவாமி
படம் 2 - 753 தொழில் மேம்பட அருளும் சென்னை நந்தனம் பாலசுப்பிரமணிய சுவாமி
Comments
Post a Comment