கோவில் 749 - இலங்கை யாழ்ப்பாணம் பண்ணாகம் விசவத்தனை முருகமூர்த்தி கோவில்

 🙏🏻🙏🏻                                                                                                                                                 தினம் ஒரு முருகன் ஆலயம்-749

வினைகளை வேரறுக்கும் இலங்கை யாழ்ப்பாணம் பண்ணாகம் விசவத்தனை முருகமூர்த்தி கோவில்

27.6.2023 செவ்வாய்


அருள்மிகு விசவத்தனை முருகமூர்த்தி திருக்கோவில்

விசவத்தனை (Visvaththanai)

பண்ணாகம் (Pannagam)

யாழ்ப்பாணம் மாவட்டம் (Jafina)

இலங்கை (Sri Lanka)

இருப்பிடம்: யாழ்ப்பாணம் 17 கிமீ


மூலவர்: முருகமூர்த்தி

தேவியர்: வள்ளி, தெய்வானை

உற்சவர்: முருகப்பெருமான் வள்ளி, தெய்வானை


தலமகிமை:

இலங்கை வடமாகாணம் யாழ்ப்பாணம் மாவட்டம் யாழ்ப்பாணம்-பருத்தித்துறை சாலையில் யாழ்ப்பாணம் நகரிலிருந்து 17 கிமீ தொலைவில் பண்ணாகம் எனும் இடத்தில் உள்ள விசவத்தனையில் வினைகளை வேரறுக்கும் முருகமூர்த்தி கோவில் அமைந்துள்ளது. பண்ணாக மக்களின் குலதெய்வமாக விசவத்தனை முருகமூர்த்தி அருள்பாலிக்கின்றார்.


இக்கோவிலில் பங்குனி மாதத்தில் வரும் பௌர்ணமியில் (பங்குனி உத்திரம்) வளர்பிறை முதல் 10 நாட்கள் கொடியேற்றதுடன் மகோற்சவம் ஆரம்பமாகி தினமும் சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்று தீர்த்தவாரி திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுகிறது. சித்ரா பௌர்ணமி, வைகாசி மாத பைரவ பொங்கல், வைகாசி விசாகம், ஆடிச்செவ்வாய், புரட்டாசி சனி, ஐப்பசி கந்த சஷ்டி, திருக்கார்த்திகை தீபம், மாதாந்த கார்த்திகை, மார்கழி திருவெம்பாவை, தைப்பூசம்,மாசி மகா சிவராத்திரி போன்ற திருநாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.


இவ்வாலயத்தில் நடைபெறும் விழாக்களின் போது அன்னதானம் வழங்குவதற்கென ஸ்ரீ முருகன் அன்னதான சபை என்ற அமைப்பு செயற்பட்டு வருகின்றது. இதற்கென ஆலயத்தின் முற்பகுதியில் பெரிய மண்டபமும் அமைக்கப்பட்டுள்ளது. இதனை நிர்வகிப்பதற்கென தனியான நிர்வாக கட்டமைப்பும் செயற்பட்டு வருகின்றது.


தல வரலாறு:

200 ஆண்டுகளிற்கு முன் வாழ்ந்த கதிர்காமர் என்பவர் தனது சொந்தக் காணியில் ஒரு கொட்டில் கட்டி அதில் பைரவ சூலம் வைத்து பூஜை செய்து வழிபட்டு வந்தார். பின்னர் அக் கொட்டில் மடாலயமாக பெருப்பிக்கப்பட்டு, ஊர் மக்கள் சேர்ந்து வழிபட்டு வந்தனர். ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாத முதல் செவ்வாயில் பைரவர்க்கு விளக்கு வைத்து அடுத்த செவ்வாய் ஊர்மக்கள் சேர்ந்து பொங்கல் பொங்கி படைத்து வழிபாடு செய்தார்கள்.


கதிர்காமரின் பேரனாகிய சின்னட்டியர் காலத்தில் வைரவ மடாலயத்திற்கு அருகில் முருகப் பருமானிற்கும் என ஒரு ஆலயம் அமைக்கப்பட்டது. தொடர்ந்து சின்னட்டியர் மகன் செல்லப்பா காலத்தில் முருகனுக்கு ஆகம முறைப்படி ஆலயம் அமைக்கப்பட்டது. 1910-ம் ஆண்டு கர்ப்பக்கிரகம், திருமஞ்சனக்கிணறு, மகாமண்டபம் என்பன அமைக்கப்பட்டன.


1912-ம் ஆண்டு முதலாவது கும்பாபஷேகம் நடத்தப்பட்டது. இக் காலத்தில் பத்து நாட்கள் பங்குனி மாதத்தில் அலங்காரத் திருவிழாக்கள் நடைபெற்று வந்தன. 1928-ம் ஆண்டில் கொடிமரம், பலிபீடம், அர்த்த மண்டபம், தரிசன மண்டபம் கட்டப்பட்டு இதே காலத்தில் இரண்டாவது கும்பாபிஷேகமும் நடைபெற்றது. இதன் பின் ஆலயத்தில் கொடியேற்றத்துடன் திருவிழாக்கள் இடம்பெற்றன.


1948-ல் சுவாமி பாலஸ்தாபனம் செய்யப்பட்டு, 1954-ல் மூன்றாவது கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. 1958-ல் கோவில் பரிபாலன சபை உருவாக்கப்பட்டது. தற்போதும் ஆலய செயற்பாடுகளை பரிபாலனம் சபை பராமரித்து வருகின்றது. 1966-ல் புதிய சித்திரத் தேர் உருவாக்கப்ட்டது. 1982-ம் ஆண்டு நான்காவது கும்பாபிஷேகம் நடைபெற்றது; 1998-ல் ஐந்தாவது கும்பாபிஷேகம் நடைபெற்றது. 2010-ல் கோவிலின் பிரதான வாயிலில் இராஜகோபுரம் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. 2016-ல் இருந்து ஆலய முழுவதும் புனரமைப்பு வேலைகள் நடைபெற்று 2019-ல் ஆறாவது மகா கும்பாவிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.


தல அமைப்பு:

புதிய அமைப்புடன் கூடிய இவ்வாலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கோவில் கருவறையில் முருகமூர்த்தி மூலவராக கிழக்கு நோக்கி தேவியருடன் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மேலும் பரிவார தெய்வங்களாக பிள்ளையார், முத்துக்குமாரசாமி, ஆறுமுகசாமி, சிவபெருமான், பார்வதி, சண்டிகேஸ்வரர், பெருமாள், ஆஞ்சநேயர், நவக்கிரகங்கள், பைரவர் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.


திருவிழா:

பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, தைப்பூசம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை தீபம், கிருத்திகை, சித்ரா பௌர்ணமி, வைகாசி மாத பைரவ பொங்கல், ஆடிச்செவ்வாய், புரட்டாசி சனி, மார்கழி திருவெம்பாவை, மாசி மகா சிவராத்திரி


பிரார்த்தனை:

வினைகள் தீர, நேர்மறை ஆற்றல் உண்டாக, மன அமைதி பெற, வேண்டியன கிடைக்க


நேர்த்திக்கடன்:

அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் அணிவித்தல்


திறக்கும் நேரம்:

காலை 7-12 மாலை 5-8


நேர்மறை ஆற்றல் உண்டாக்கும் இலங்கை யாழ்ப்பாணம் பண்ணாகம் விசவத்தனை முருகமூர்த்தியை முழு அர்ப்பணிப்புடன் கும்பிட்டு மகிழ்வோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


Dr K. முத்துக்குமரன் Ph. D

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻


படம் 1 - 749 வினைகளை வேரறுக்கும் இலங்கை யாழ்ப்பாணம் பண்ணாகம் விசவத்தனை முருகமூர்த்தி


படம் 2 - 749 நேர்மறை ஆற்றல் உண்டாக்கும் இலங்கை யாழ்ப்பாணம் பண்ணாகம் விசவத்தனை முருகமூர்த்தி

Comments

Popular posts from this blog

கோவில் 1319 - சேலம் மல்லிகுந்தம் சின்ன பழனியாண்டவர் கோவில்

கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 1201 - கொழும்பு மாண்புமிகு பண்டாரநாயக்க மாவத்தை சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்