கோவில் 690 - செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள் கோவில் சிங்கை சிங்காரவேலன் கோவில்

 🙏🏻🙏🏻                                                                                                                                                      தினம் ஒரு முருகன் ஆலயம்-690

ஐஸ்வர்யங்களை அருளும் செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள் கோவில் சிங்கை சிங்காரவேலன் கோவில்

29.4.2023 சனி

அருள்மிகு சிங்கை சிங்காரவேலன் திருக்கோவில்

சிங்கபெருமாள் கோவில்-603204

செங்கல்பட்டு மாவட்டம்

இருப்பிடம்: செங்கல்பட்டு 11 கிமீ, சிங்கபெருமாள் கோவில் 1.5 கிமீ, தாம்பரம் 23 கிமீ


மூலவர்: சிங்காரவேலன்

உற்சவர்: முருகப்பெருமான், வள்ளி, தெய்வானை


தலமகிமை:

சென்னை மாநகர் தாம்பரத்திலிருந்து 23 கிமீ தொலைவிலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு நகரிலிருந்து 11 கிமீ தொலைவிலும் உள்ள சிங்கபெருமாள் கோவில் பகுதியில் சிங்கபெருமாள் கோவில் ரயில் நிலையம் அருகில் சிறப்பு மிக்க சிங்கை சிங்காரவேலன் கோவில் அமைந்துள்ளது.. இக்கோவிலில் முருகப்பெருமான், சிங்காரவேலனாக அருள்பாலிக்கின்றார். இக்கோவிலுக்கு அருகில் நெற்றிக்கண்ணுடன் நரசிம்மர் அருள்பாலிக்கும் சிங்கபெருமாள் கோவில் இருப்பது சிறப்பம்சமாகும்.


ஆடிக்கிருத்திகை திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுகிறது. மேலும் பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, தைப்பூசம் உட்பட முருகபெருமானின் அனைத்து விசேஷங்களும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. வெள்ளிக்கிழமைகளில் விசேஷ பூஜைகள் நடைபெறுவதால் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை வழிபட்டு எல்லா நலன்களும் பெற்று செல்கின்றனர்.


தல வரலாறு:

சிங்கபெருமாள் கோவில் வாழ் முருக பக்தர்களால் சிங்கை சிங்காரவேலன் கோவில் எழுப்பப்பட்டது.


தல அமைப்பு:

அழகிய சிற்பங்களுடன் கூடிய இத்திருக்கோவில் கருவறையில் மூலவராக சிங்காரவேலன் வலக்கரம் அபய முத்திரையுடனும், இடக்கரம் இடுப்பில் தாங்கிய படியும் பொலிவாக நின்ற கோலத்தில் வேல் தாங்கி திருக்காட்சி அளித்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மேலும் விநாயகர், உற்சவ மூர்த்திகள், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, அம்பாள், கஜலட்சுமி, நவக்கிரகங்கள் முதலான தெய்வங்கள் அருள்பாலிக்கின்றனர்.


திருவிழா:

ஆடிக்கிருத்திகை, கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், தைப்பூசம், கிருத்திகை, சஷ்டி, செவ்வாய், வெள்ளி


பிரார்த்தனை:

ஐஸ்வர்யங்கள் வேண்டி, நேர்மறை எண்ணங்கள் உண்டாக, மன அமைதி பெற, நல்லது நடக்க


நேர்த்திக்கடன்:

அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் அணிவித்தல், பொருள் காணிக்கை


நேர்மறை எண்ணங்களை உண்டாக்கும் செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள் கோவில் சிங்கை சிங்காரவேலன் திருப்பாதங்களை சென்னி மேல் சூட்டி மகிழ்வோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்


Dr K. முத்துக்குமரன் Ph. D

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻


படம் 1 - 690 ஐஸ்வர்யங்களை அருளும் செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள் கோவில் சிங்கை சிங்காரவேலன்


படம் 2 - 690 நேர்மறை எண்ணங்களை உண்டாக்கும் செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள் கோவில் சிங்கை சிங்காரவேலன்





Comments

Popular posts from this blog

கோவில் 1319 - சேலம் மல்லிகுந்தம் சின்ன பழனியாண்டவர் கோவில்

கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 1201 - கொழும்பு மாண்புமிகு பண்டாரநாயக்க மாவத்தை சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்