கோவில் 686 - திருச்சி மாவட்டம் புலிவலம் சுப்பிரமணிய சுவாமி கோவில்


 🙏🏻🙏🏻                                                                                                                                               தினம் ஒரு முருகன் ஆலயம்-686

பக்தர்களுக்கு முக்தி தந்தருளும் திருச்சி மாவட்டம் புலிவலம் சுப்பிரமணிய சுவாமி கோவில்

25.4.2023 செவ்வாய்

அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்

புலிவலம்-639115

திருச்சி மாவட்டம்

இருப்பிடம்: திருச்சி 24 கிமீ


மூலவர்: சுப்பிரமணிய சுவாமி

தேவியர்: வள்ளி, தெய்வானை


தலமகிமை:

திருச்சி மாவட்டம் திருச்சி மாநகரிலிருந்து 24 கிமீ தொலைவில் குழுமணி மற்றும் ஜியபுரத்திற்கு நடுவே உள்ள புலிவலத்தில் கல்வி, ஞானம் மேம்பட அருளும் சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. பழமையான இத்திருக்கோவிலில் வள்ளி, தெய்வானை உடனுறை சுப்பிரமணிய சுவாமி மூலஸ்தானத்தில் சோமாஸ்கந்தராக அருள்பாலிக்கின்றார். சிவபெருமான் மற்றும் அம்பாளுக்கு நடுவில் முருகப்பெருமான் தெற்கு நோக்கி அருள்பாலிப்பது அரிய திருக்காட்சியாகும். அவர் பார்வைக்கு முன் அந்த ஊரின் மயானம் இருக்கின்றது. எனவே முக்தி தரும் தலமாக விளங்குகின்றது. இத்தலத்தில் வீற்றிருக்கும் அகஸ்தீஸ்வரரும், அம்பாளும் பிற முக்கிய தெய்வங்கள்.


இத்திருக்கோவிலில் முருகப்பெருமானின் அனைத்து திருவிழாக்களும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. சிவபெருமான் மற்றும் அம்பாள் விசேஷங்களும் வெகு விமரிசையாக நடைபெறுகின்றன.

தல வரலாறு:

புலிவலம் திருத்தலத்தில் அகத்தியர் சிவபெருமானை வழிபட்டதால், இங்கு கோவில் எழுப்பப்பட்டு இங்கு வீற்றிருக்கும் இறைவனுக்கு அகஸ்தீஸ்வரர் என்று திருநாமம் இடப்பட்டது. மேலும் புலிக்கால் முனிவர் எனும் வியாக்கிரபாதர் இவ்வூர் வந்து அகஸ்தீஸ்வரரை வழிபட்டதால் இவ்வூருக்கு புலிவலம் என்று பெயர் வந்ததாக வரலாறு. சுப்பிரமணிய சுவாமி தெற்கு நோக்கி (மயானம் நோக்கி) அருள்புரிவதால் இத்தலம் ஒரு முக்தி தலம் என்றும் வரலாறு கூறுகிறது


தல அமைப்பு:

இந்த பழமையான திருக்கோவில் மூலஸ்தானத்தில் முருகப்பெருமான் சுப்பிரமணிய சுவாமியாக அறுங்கோண சக்கரத்துடன் வள்ளி, தெய்வானை சமேதராக தெற்கு நோக்கி பக்தர்களுக்கு திருக்காட்சியளித்து அருள்பாலிக்கின்றார். வலது பக்கம் அகத்தியரும், வியாகரபரதரும் வழிபட்ட அகஸ்தீஸ்வரர் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றார். இடப்பக்கம் அம்பாள் அருள்பாலித்துக் கொண்டிருக்கின்றார். இருவருக்கும் நடுவில் சுப்பிரமணிய சுவாமி அருள் புரிவதால் முருகப்பெருமான் சோமாஸ்கந்தராக காட்சி அருள்கின்றார். மேலும் விநாயகர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, பைரவர், நவக்கிரகங்கள், அகத்திய பெருமான், வியாகரபரதர் உள்ளிட்ட அனைத்து தெய்வங்களும் அருள்பாலிக்கின்றனர்.


திருவிழா:

கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், தைப்பூசம், வைகாசி விசாகம், கிருத்திகை, சஷ்டி, மார்கழி திருவாதிரை, ஐப்பசி அன்னாபிஷேகம், மாசி மகம், ஆடிப்பூரம், நவராத்திரி, பிரதோஷம்


பிரார்த்தனை:

முக்தி பெற, கல்வி, ஞானம் மேம்பட, திருமணம், குழந்தை வரம் வேண்டி, எண்ணியது நிறைவேற


நேர்த்திக்கடன்:

அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் அணிவித்தல்


கல்வி, ஞானம் மேம்பட அருளும் திருச்சி மாவட்டம் புலிவலம் சுப்பிரமணிய சுவாமியை மனமுருகி கும்பிடுவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்


Dr K. முத்துக்குமரன் Ph. D

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻



படம் 1 - 686 பக்தர்களுக்கு முக்தி தந்தருளும் திருச்சி மாவட்டம் புலிவலம் சுப்பிரமணிய சுவாமி


படம் 2 - 686 கல்வி, ஞானம் மேம்பட அருளும் திருச்சி மாவட்டம் புலிவலம் சுப்பிரமணிய சுவாமி கோவில்


Comments

Popular posts from this blog

கோவில் 1319 - சேலம் மல்லிகுந்தம் சின்ன பழனியாண்டவர் கோவில்

கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 1201 - கொழும்பு மாண்புமிகு பண்டாரநாயக்க மாவத்தை சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்