கோவில் 510 - சென்னை திருவேற்காடு கல்யாண முருகன் கோவில்

🙏🙏     

தினம் ஒரு முருகன் ஆலயம்-510

சஷ்டியின் 7-வது நாள் திருக்கல்யாண நாளன்று திருமண வரமருளும் சென்னை திருவேற்காடு கல்யாண முருகன் கோவில்

31.10.2022 திங்கள்

அருள்மிகு கல்யாண முருகன் திருக்கோவில்

திருவேற்காடு

சென்னை-600077

இருப்பிடம்: கோயம்பேடு 10 கிமீ, சென்ட்ரல் 18 கிமீ


மூலவர்: கல்யாண முருகன்

தேவியர்: வள்ளி, தெய்வானை


தலமகிமை:

சென்னை மாநகரில் கோயம்பேட்டிலிருந்து 10 கிமீ தொலைவில் சிறப்பு மிக்க திருவேற்காடு கருமாரியம்மன் குடியிருக்கும் தலத்தில் திருமண வரமருளும் சென்னை திருவேற்காடு பேருந்து நிலையம் அருகில் கல்யாண முருகன் கோவில் அமைந்துள்ளது சிறப்பு.


பங்குனி உத்திரம் சிறப்பு திருவிழாவாக நடைபெறுகிறது. ஹோமம், யாகம், அபிஷேகம், அலங்காரம், சிறப்பு தீபாரதனைகள், தேவியருடன் சுவாமி திரு வீதிஉலா என் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. கடந்த பங்குனி உத்திர திருநாளன்று உற்சவ மூர்த்திகளான முருகப்பெருமான், வள்ளி, தெய்வானை சிறப்பாக் பிரதிஷ்டை செய்யப்பட்டன். முருகப்பெருமானின் அனைத்து விசேஷங்களும் நடைபெறுகிறது. சிறப்பு வாய்ந்த திருவேற்காடு கருமாரியம்மன் மற்றும் திருப்புகழ் தலமான திருவேற்காடு வேதபுரீஸ்வரர் கோவில்கள் அருகருகே இருப்பதால், இத்திருக்கோவிலுக்கு அதிக அளவில் பக்தர்கள் வருகிறார்கள்.

தல வரலாறு:

சூரனை ஆட்கொண்டதால் பிரம்மஹத்தி தோஷம் பிடித்தால், அருகில் உள்ள திருப்புகழ் தலமான திருவேற்காடு வேதபுரீஸ்வரர் கோவில் வந்து வேலாயுத தீர்த்ததில் குளித்து, வேதபுரீஸ்வரரை நித்தமும் பூஜை செய்து, வாணங்கி வந்தார். அதனால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கிய நம் பெருமான், கல்யாண முருகனாக இத்தலத்தில் குடிக்கொண்டுள்ளார்.


தல அமைப்பு:

திருக்கோவில் கருவறையில் முருகப்பெருமான், கல்யாண முருகன் என்ற திருப்பெயருடன் வள்ளை, தெய்வானை சமேதராக பக்தர்களுக்கு திருக்காட்சி தந்து அருள்பாலிக்கின்றார். மேலும் அழகான முருகப்பெருமான், வள்ளி, தெய்வானை உற்சவ மூர்தங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.


திருவிழா:

பங்குனி உத்திரம், தைப்பூசம், வைகாசி விசாகம், கந்த சஷ்டி, ஆடிக்கிருத்திகை,


பிரார்த்தனை:

வேண்டும் வரம் அருள், கல்யாண வரம், குழந்தை பாக்கியம் வேண்டி


நேர்த்திக்கடன்:

அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்


திறக்கும் நேரம்:

காலை 6.30-12 மாலை 5.30-8.45 வரை


சஷ்டியின் 7-வது நாள் திருக்கல்யாண நாளன்று வேண்டுவோருக்கு வேண்டும் வரம் தரும் சென்னை திருவேற்காடு கல்யாண முருகனை வணங்கி நற்பலன் பெறுவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


Dr K. முத்துக்குமரன் Ph. D

கோயம்புத்தூர் 25

🙏🙏     


படம் 1 வேண்டும் வரம் அருளும் சென்னை திருவேற்காடு கல்யாண முருகன் கோவில்



படம் 2 - 510 கோவிலுக்கு வந்தாலே கல்யாண வரம் அருளும் சென்னை திருவேற்காடு கல்யாண முருகன்


Comments

Popular posts from this blog

கோவில் 1319 - சேலம் மல்லிகுந்தம் சின்ன பழனியாண்டவர் கோவில்

கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 1201 - கொழும்பு மாண்புமிகு பண்டாரநாயக்க மாவத்தை சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்