கோவில் 53 - கிருஷ்ணகிரி ஆஞ்சநேய சுப்பிரமணிய சுவாமி கோவில்

 🙏🙏

தினம் ஒரு முருகன் ஆலயம்-53

சைவர் வைணவர் பேதமின்றி வணங்கும் கிருஷ்ணகிரி ஆஞ்சநேய சுப்பிரமணிய சுவாமி கோவில்

31.7.2021 சனி


அருள்மிகு ஆஞ்சநேய சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்

காட்டினாயனப்பள்ளி-635001

கிருஷ்ணகிரி மாவட்டம்

இருப்பிடம்: கிருஷ்ணகிரியிலிருந்து 5 கிமீ


மூலவர்: சுப்பிரமணிய சுவாமி

தேவியர்: வள்ளி, தெய்வானை

தீர்த்தம்: திருக்குளம்


தலமகிமை:

கிருஷ்ணகிரி-சென்னை நெடுஞ்சாலையில் கிருஷ்ணகிரியிலிருந்து 5 கிமீ தொலைவில் காட்டினாயனப்பள்ளி என்ற இடத்தில் சைவர் வைணவர் பேதமின்றி வணங்கும் ஆஞ்சநேய சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. முருகப்பெருமானும், ஆஞ்சநேயரும் ஒரே தலத்தில் வீற்றிருந்து அருள்வதால், முருகப்பெருமானுக்கு ஆஞ்சநேய சுப்பிரமணிய சுவாமி என்ற சிறப்புப் பெயருடனும் அழைக்கப்படுகிறார்.


ஆடிக்கிருத்திகை பெருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. தைப்பூசத் திருவிழா 14 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறுகிறது.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆடிப் பாடி, பால் குடம் எடுத்து முருகனின் அருளை பெற்று செல்கின்றனர். விசேஷ தினங்களில் முருகன் மயில் வாகன உலா வருகிறார்.


தல வரலாறு:

இந்தத் தலத்தில் பல வருடங்கள் முன் பக்தர் ஒருவர் ஆஞ்சநேயர் சிலை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தார். சாது சாமி என்ற பெரிய மகான் இங்கு வந்த போது, அங்குள்ள பக்தர்களிடம் இத்தலம் முருகப்பெருமான் அருட்கடாட்சம் நிறைந்துள்ள இடம். எனவே இங்கு முருகனுக்கு ஆலயம் நிறுவுங்கள் என்றார். கந்தன் இந்த ஊர் மக்களையும், வழிபட வரும் பக்தர்களையும் காத்தருளுவான் என்றுரைத்தார். இவ்வாறு இக்கோவில் எழுப்பப்பட்டது.


தல அமைப்பு:

கோவிலின் விசாலமான முன் மண்டபத்தில் கொடி மரம் கம்பீரமாக காட்சி தருகிறது. கருவறையில் முருகப்பெருமான், சுப்பிரமணிய சுவாமி என்ற திருநாமத்துடன் வள்ளி, தெய்வானை சமேதராக பொலிவுடன் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மேலும் விநாயகர், ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள், ஆஞ்சநேயர் சந்நிதிகளில் வீற்றிருந்து அருளுகின்றனர்.. கோவிலுக்கு மேற்கே திருக்குளம் அமைந்துள்ளது. எதிரே உள்ள பெரிய மண்டபத்தில் நிறைய திருமணங்கள் நடைபெறுகின்றன. இக்கோவிலையொட்டி 700 படிகள் ஏறினால், மலை உச்சியில் ஆஞ்சநேயர் அம்சத்துடன் அருள்பாலிக்கிறார். வழியில் சாது சாமியின் ஜீவசமாதி உள்ளது.


திருவிழா:

ஆடிக்கிருத்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், கந்த சஷ்டி, மாதாந்திர கிருத்திகை, மூலம்


பிரார்த்தனை:

சகல தோஷங்கள் அகல , திருமணவரம்


நேர்த்திக்கடன்:

பால்குடம், அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள்


திறக்கும் நேரம்:

காலை 6-12 மாலை 5-8


திருமணவரம் கைக்கூட அருளும் கிருஷ்ணகிரி ஆஞ்சநேய சுப்பிரமணிய சுவாமியை போற்றி வணங்குவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


Dr K. முத்துக்குமரன் Ph. D

கோயம்புத்தூர் 25

 🙏🙏



படம் 1 - சைவர் வைணவர் பேதமின்றி வணங்கும் கிருஷ்ணகிரி ஆஞ்சநேய சுப்பிரமணிய சுவாமி



படம் 2 - திருமணவரம் கைக்கூட அருளும் கிருஷ்ணகிரி ஆஞ்சநேய சுப்பிரமணிய சுவாமி

Comments

  1. Krishnagiri Anjeneya Subramania Swamiku Arohara. Thanks for this post Iya.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கோவில் 1319 - சேலம் மல்லிகுந்தம் சின்ன பழனியாண்டவர் கோவில்

கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 1201 - கொழும்பு மாண்புமிகு பண்டாரநாயக்க மாவத்தை சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்