கோவில் 386 - சென்னை சோழிங்கங்கநல்லூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்
🙏🙏 தினம் ஒரு முருகன் ஆலயம்-386
இகபர சௌபாக்கியம் அருளும் சென்னை சோழிங்கங்கநல்லூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்
29.6.2022 புதன்
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்
சோழிங்கங்கநல்லூர்
சென்னை-608703
இருப்பிடம்: சென்னை அடையாறு-கோவில் 13 கிமீ
மூலவர்: சுப்பிரமணிய சுவாமி
தேவி: வள்ளி, தெய்வானை
தலமகிமை:
சோழிங்கங்கநல்லூர்-பழைய மகாபலிபுரம் சாலையில், அடையாறில் இருந்து தெற்கே 13 கிமீ தோலைவில் சிறப்பு மிக்க சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது.
அம்மன் பின்புறம் தனி ஆலயம் உள்ளது. திருவோடு மரம் இங்கு சிறப்பு வாய்ந்தது. திருவோடு பழங்களின் ஓடுகள் மகான்களால் பிக்ஷை பாத்திரமாகப் பயன்படுத்தப்படுகின்றன. மகா சிவராத்திரியின் போது சிவபெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.
கோவிலுக்கு அருகில் புற்று மாரியம்மன் கோவில் என்று அழைக்கப்படும் மற்றொரு மிகவும் சக்தி வாய்ந்த கோவிலும் உள்ளது, இது 600 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்ததாகவும், சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது
தல வரலாறு:
காஞ்சி பெரியவா, மகான்கள் ஆகியோரால் ஆசிர்வதிக்கப்பட்ட கோவில் இதுவாகும். மகா கும்பாபிஷேகம் 1999-ல் சிறப்புற நடைபெற்றது.
தல அமைப்பு:
திருக்கோவில் கருவறையில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி அழகிய தோற்றத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். அருகில் செல்வவிநாயகர், சிவபெருமான், அம்மன், மகாவிஷ்ணு, சீதா-ராம-லக்ஷ்மணன், வனதுர்க்கை, சப்தமாதா, ஆஞ்சநேயர், லட்சுமி, நவகிரகங்கள் முதலான தெய்வங்களும் அருளுகின்றனர்.
திருவிழா:
பங்குனி உத்திரம், தைப்பூசம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், மகா சிவராத்திரி
பிரார்த்தனை:
இகபர சௌபாக்கியம் வேண்டி, மன அமைதி பெற, மன மகிழ்ச்சி உண்டாக
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், பூஜைகள், வஸ்திரம் சாற்றுதல்
திறக்கும் நேரம்:
காலை 6-10 முதல் மாலை 5-8 வரை
மன அமைதி மற்றும் மகிழச்சி அளிக்கும் சோழிங்கங்கநல்லூர் சுப்பிரமணிய சுவாமியை கொண்டாடி வணங்குவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
Dr K. முத்துக்குமரன் Ph. D
கோயம்புத்தூர் 25
🙏🙏
படம் 1 - இகபர சௌபாக்கியம் அருளும் சென்னை சோழிங்கங்கநல்லூர் சுப்பிரமணிய சுவாமி
படம் 2 - மன அமைதி மற்றும் மகிழச்சி அளிக்கும் சோழிங்கங்கநல்லூர் சுப்பிரமணிய சுவாமி
Comments
Post a Comment