கோவில் 1794 - கேரளா திருச்சூர் S N புரம் சுப்பிரமணிய சுவாமி கோவில்

 🙏🏻🙏🏻

தினம் ஒரு முருகன் ஆலயம்-1794

செல்வம் பெருக அருளும் கேரளா திருச்சூர் S N புரம் சுப்பிரமணிய சுவாமி கோவில்

7.05.2026 வியாழன்


அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்

Kallettumkara Road

S N புரம் 680651 [S N Puram]

திருச்சூர் மாவட்டம் [Thrissur]

கேரளா மாநிலம் [Kerala]


இருப்பிடம்: திருச்சூர் 24 கிமீ, கொடுங்களூர் 26 கிமீ, கொச்சி விமான நிலையம் 32 கிமீ, குருவாயூர் 52 கிமீ, ஏர்ணாகுளம் 56 கிமீ, ஷோரனூர் 57 கிமீ, பாலக்காடு 81 கிமீ


மூலவர்: சுப்பிரமணிய சுவாமி

உற்சவர்: சுப்பிரமணிய சுவாமி


தல மகிமை:

கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டம் S N புரம் பகுதியில் செல்வம் பெருக அருளும் S N புரம் சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது.


திருச்சூர் பேருந்து நிலையத்திலிருந்து 24 கிமீ தொலைவு அல்லது கொடுங்களூர் பேருந்து நிலையத்திலிருந்து 26 கிமீ தொலைவு அல்லது கொச்சி விமான நிலையத்திலிருந்து 32 கிமீ தொலைவு அல்லது குருவாயூர் பேருந்து நிலையத்திலிருந்து 52 கிமீ தொலைவு அல்லது ஏர்ணாகுளம் பேருந்து நிலையத்திலிருந்து 56 கிமீ தொலைவு அல்லது ஷோரனூர் பேருந்து நிலையத்திலிருந்து 57 கிமீ தொலைவு அல்லது பாலக்காடு பேருந்து நிலையத்திலிருந்து 81 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் திருச்சூர் S N புரம் சுப்பிரமணிய சுவாமி கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி கையில் வேலுடன் கருணை பொங்க திருக்காட்சி தந்து அருள்பாலிக்கின்றார்.


திருச்சூர் S N புரம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசம் முக்கியத் திருவிழாவாக விமரிசையாக சிறப்புப் பூஜைகளுடன் நடைபெறுகின்றது. கந்த சஷ்டி திருவிழாவும் வருடந்தோறும் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றது. மேலும் முருகப்பெருமானின் பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை உள்ளிட்ட அனைத்துத் திருவிழாக்களும் இத்திருக்கோவிலில் விசேஷப் பூஜைகளுடன் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை நன்னாட்களில் விசேஷ பூஜைகள் நடக்கின்றன.


தல வரலாறு:

கேரள மாநிலம் திருச்சூர் S N புரம் சுப்பிரமணிய சுவாமி கோவில் இப்பகுதியில் ஒரு முக்கியமான திருக்கோவிலாகும்.


தல அமைப்பு:

திருச்சூர் S N புரம் சுப்பிரமணிய சுவாமி கோவில் கேரள பாணியில் கட்டப்பட்டுள்ளது. வாயில் கோபுரம் மற்றும் கருவறைக்கு நடுவில் அழகிய வேல் ஒன்று பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி கையில் வேலுடன் நின்ற திருக்கோலத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மேலும் கணபதி, உற்சவர், ஐயப்பன், சிவபெருமான், பகவதி, நாகராஜா, நாகர்கள் உள்ளிட்ட அனைத்துத் தெய்வங்களும் இத்திருக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.


திருவிழா:

தைப்பூசம், கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சஷ்டி, கிருத்திகை


பிரார்த்தனை:

செல்வம் பெருக, அல்லல்கள் அகல, எண்ணியது ஈடேற, பிணிகள் அகல, வினைகள் நீங்க, குழந்தை பாக்கியம் வேண்டி, குடும்ப ஒற்றுமை ஓங்க, தீராத நோய்கள் தீர, நல்லன அருள, மன மகிழ்ச்சி கிடைக்க, தொழில் மேம்பட, தோஷங்கள் அகல

நேர்த்திக்கடன்:

காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்


திறக்கும் நேரம்:

காலை 6-9 மாலை 5.30-7


அல்லல்கள் அகற்றியருளும் திருச்சூர் S N புரம் சுப்பிரமணிய சுவாமி திருத்தாள் பணிந்து கும்பிடுவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

சைவ சித்தாந்தச் சுடர்

சைவ நெறிச் செம்மல்

Dr K. முத்துக்குமரன் Ph. D

9489302842

bamikumar@gmail.com

🙏🏻🙏🏻


படம் 1 - 1794 செல்வம் பெருக அருளும் கேரளா திருச்சூர் S N புரம் சுப்பிரமணிய சுவாமி



படம் 2 - 1794 அல்லல்கள் அகற்றியருளும் திருச்சூர் S N புரம் சுப்பிரமணிய சுவாமி

Comments

Popular posts from this blog

கோவில் 1341 - சேலம் பள்ளப்பட்டி பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில்

கோவில் 1326 - சேலம் K R தோப்பூர் பாலமுருகன் கோவில்

கோவில் 1102 - திருச்சி மணப்பாறை சென்னக்கல் குன்றம் சின்ன பழனி முருகன் கோவில்