கோவில் 1472 - சென்னை கீழ்க்கட்டளை சக்திவேல் முருகன் கோவில்
🙏🙏
தினம் ஒரு முருகன் ஆலயம்-1472
நேர்மறை அதிர்வுகளை அதிகரிக்கும் சென்னை கீழ்க்கட்டளை சக்திவேல் முருகன் கோவில்
19.06.2025 வியாழன்
அருள்மிகு சக்திவேல் முருகன் திருக்கோவில்
பெரிய தெரு
கீழ்க்கட்டளை
சென்னை 600032
இருப்பிடம்: சென்னை சென்ட்ரல் 21 கிமீ, சென்னை கிளாம்பாக்கம் பே. நி 18 கிமீ, கிண்டி 9 கிமீ, தாம்பரம் 11 கிமீ, தி. நகர் 13 கிமீ, அடையாறு 14 கிமீ
மூலவர் சக்திவேல் முருகன்
தேவியர்: வள்ளி, தெய்வானை
உற்சவர்: சக்திவேல் முருகன் வள்ளி, தெய்வானை
தல விருட்சம்: வன்னி மரம்
கும்பாபிஷேகம்: 21.11.2024
தல மகிமை:
சென்னை மாநகரம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து 21 கிமீ தொலைவில் இருக்கும் கீழ்க்கட்டளை பெரிய தெருவில் நேர்மறை அதிர்வுகளை அதிகரிக்கும் சென்னை கீழ்க்கட்டளை சக்திவேல் முருகன் கோவில் அமைந்துள்ளது. மேலும் சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து 18 கிமீ தொலைவு அல்லது கிண்டி பேருந்து நிலையத்திலிருந்து 9 கிமீ தொலைவு தாம்பரம் பேருந்து நிலையத்திலிருந்து 11 கிமீ தொலைவு அல்லது தி. நகர் பேருந்து நிலையத்திலிருந்து 13 கிமீ தொலைவு அல்லது அடையாறு பேருந்து நிலையத்திலிருந்து 14 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் சென்னை கீழ்க்கட்டளை சக்திவேல் முருகன் கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் சக்திவேல் முருகன் வள்ளி, தெய்வானை சமேதராக வீற்றிருந்து அருள்பாலிக்கின்றார். இக்கோவில் புனரமைக்கப்பட்டு 21.11.2024 அன்று மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
இத்திருக்கோவிலின் தல விருட்சம் வன்னி மரம் என்பது சிறப்பம்சமாகும். திருமண தடை உள்ளவர்கள் வன்னி மரத்தில் மஞ்சள் கயிற்றை சுற்றி 9 முறை சுற்றி வந்து சக்திவேல் முருகனை வழிபடுவோருக்கு திருமண தடை நீங்கி திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை. குழந்தை இல்லாதவர்கள் வன்னி மரத்தில் தொட்டில் கட்டி சக்திவேல் முருகனை வழிபட்டு வந்தால் சந்தான பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
சென்னை கீழ்க்கட்டளை சக்திவேல் முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழா மிகவும் விமரிசையாக நடைபெறுகின்றது. மேலும் முருகப்பெருமானின் பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, ஆடிக்கிருத்திகை உள்ளிட்ட அனைத்துத் திருவிழாக்களும் சிறப்பு பூஜைகளுடன் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை தினங்களில் விசேஷ வழிபாடுகள் நடக்கின்றன. பிரதோஷம், சங்கடஹர சதுர்த்தி நாட்களில் சிறப்புப் பூஜைகள் நடைபெறுகின்றன. விநாயகர் சதுர்த்தியன்று விநாயகப் பெருமானுக்கு சிறப்பு தீபாராதனைகள் நடக்கின்றன.
தல வரலாறு:
சென்னை கீழ்க்கட்டளை, மடிபாக்கம் பகுதிகளில் உள்ள புரவலர்கள் மற்றும் சைவ பெரியோர்களின் பொருளுதவியுடன் கீழ்க்கட்டளை சக்திவேல் முருகன் கோவில் எழுப்பப்பட்டுள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் வேலைகள் நடைபெற்று 21.11.2024-ல் மகா கும்பாபிஷேகம் நடந்தேறியது.
தல அமைப்பு:
சென்னை கீழ்க்கட்டளை சக்திவேல் முருகன் கோவிலில் அழகிய ராஜகோபுரம் உள்ளது. கோவில் முழுவதும் அழகிய சிற்பங்கள் நிறைந்துள்ளன. இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் சக்திவேல் முருகன் வள்ளி, தெய்வானையுடன் பொலிவான திருக்கோலத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் விநாயகர், தட்சிணாமூர்த்தி, பெருமாள், பிரம்மா, துர்க்கை, சிவபெருமான், அம்பாள், நவக்கிரகங்கள் உள்ளிட்ட அனைத்து பரிவார மூர்த்திகளும் இத்திருக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
தைப்பூசம், பங்குனி உத்திரம்கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, ஆடிக்கார்த்திகை, விநாயகர் சதுர்த்தி, சஷ்டி, கிருத்திகை, பிரதோஷம், சங்கடஹர சதுர்த்தி
பிரார்த்தனை:
நேர்மறை அதிர்வுகள் அதிகரிக்க, மங்கல வாழ்வு அருள, கேட்டதை அள்ளி வழங்க, இரு வினைகள் தீர, பிணிகள் போக்க, திருமணத்தடை நீங்க, சந்தான பாக்கியம் வேண்டி, குடும்ப ஒற்றுமை ஓங்க, நோய்கள் குணமாக, தொல்லைகள் தீர, தோஷங்கள் அகல
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
திறக்கும் நேரம்:
காலை 6.30-10.30 மாலை 4.30-8.30
மங்கல வாழ்வு அருளும் சென்னை கீழ்க்கட்டளை சக்திவேல் முருகனை மனமுருகி வேண்டுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
கோயம்புத்தூர் 25
🙏🙏
படம் 1 - 1472 நேர்மறை அதிர்வுகளை அதிகரிக்கும் சென்னை கீழ்க்கட்டளை சக்திவேல் முருகன்
படம் 2 - 1472 மங்கல வாழ்வு அருளும் சென்னை கீழ்க்கட்டளை சக்திவேல் முருகன்
Comments
Post a Comment