கோவில் 1471 - சென்னை கிண்டி பாலமுருகன் கோவில்

 🙏🙏

தினம் ஒரு முருகன் ஆலயம்-1471

சஞ்சலங்கள் நீக்கும் சென்னை கிண்டி பாலமுருகன் கோவில்

18.06.2025 புதன்


அருள்மிகு பாலமுருகன் திருக்கோவில்

ஆலந்தூர் சாலை

கிண்டி

சென்னை 600032


இருப்பிடம்: சென்னை சென்ட்ரல் 13 கிமீ, சென்னை கிளாம்பாக்கம் பே. நி 26 கிமீ, கிண்டி 1 கிமீ, தி. நகர் 5 கிமீ, அடையாறு 8 கிமீ, தாம்பரம் 16 கிமீ,


மூலவர்: பாலமுருகன்

செல்: திரு எஸ். முருகன் 73580 99883, 81246 26628


தல மகிமை:

சென்னை மாநகரம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து 13 கிமீ தொலைவில் இருக்கும் கிண்டி ஆலந்தூர் சாலையில் சஞ்சலங்கள் நீக்கும் சென்னை கிண்டி பாலமுருகன் கோவில் அமைந்துள்ளது. மேலும் சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து 26 கிமீ தொலைவு அல்லது கிண்டி பேருந்து நிலையத்திலிருந்து 1 கிமீ தொலைவு தி. நகர் பேருந்து நிலையத்திலிருந்து 4 கிமீ தொலைவு அல்லது அடையாறு பேருந்து நிலையத்திலிருந்து 8 கிமீ தொலைவு அல்லது தாம்பரம் பேருந்து நிலையத்திலிருந்து 16 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் சென்னை கிண்டி பாலமுருகன் கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவராக பாலமுருகன் வீற்றிருந்து அருள்புரிகின்றார். இக்கோவிலுக்கு அருகில் மிகவும் சிறப்புப் பெற்ற கிண்டி தொழிற்பேட்டையும், ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் இருப்பது சிறப்பம்சமாகும்.


சென்னை கிண்டி பாலமுருகன் கோவிலில் ஒவ்வொரு வருடமும் தைப்பூசம் முக்கிய திருவிழாவாக சிறப்புப் பூஜைகளுடன் நடைபெறுகின்றது. மேலும் பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, ஆடிக்கிருத்திகை உள்ளிட்ட முருகப்பெருமானின் எல்லா திருவிழாக்களும் விமரிசையாக கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன.


தல வரலாறு:

சென்னை கிண்டி, ஆலந்தூர், கிண்டி எஸ்டேட் பகுதிகளில் உள்ள புரவலர்கள் மற்றும் முருக பக்தர்களின் உதவியால் கிண்டி ஆலந்தூர் சாலை பாலமுருகன் கோவில் கட்டப்பட்டது.

தல அமைப்பு:

சென்னை கிண்டி பாலமுருகன் கோவிலில் கருவறையில் மூலவர் பாலமுருகன் இளைய தோற்றத்தில் கையில் வேலேந்தி நின்ற திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் இத்திருக்கோவிலில் விநாயகர், அட்சய லிங்கேஸ்வரர், வனகுஜ அம்பிகை உள்ளிட்ட அனைத்து தெய்வங்களும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.


திருவிழா:

தைப்பூசம், பங்குனி உத்திரம்கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, ஆடிக்கார்த்திகை, சஷ்டி, கிருத்திகை, பிரதோஷம், சங்கடஹர சதுர்த்தி


பிரார்த்தனை:

சஞ்சலங்கள் தீர, தொழில் மேம்பட, வினைகள் அகல, பிணிகள் போக்க, குழந்தைப்பேறு வேண்டி, உடல் ஆரோக்கியம் உண்டாக, மன மகிழ்ச்சி அடைய, நல்ல எண்ணங்கள் அதிகரிக்க, தோஷங்கள் விலக


நேர்த்திக்கடன்:

அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்


திறக்கும் நேரம்:

காலை 6.30-9.30 மாலை 5-8


தொழில் மேம்பட அருளும் சென்னை கிண்டி பாலமுருகனை போற்றி வணங்குவோம்!

வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

Dr K. முத்துக்குமரன் Ph. D

9489302842

bamikumar@gmail.com

கோயம்புத்தூர் 25

🙏🙏


படம் 1 - 1471 சஞ்சலங்கள் நீக்கும் சென்னை கிண்டி பாலமுருகன்


படம் 2 - 1471 தொழில் மேம்பட அருளும் சென்னை கிண்டி பாலமுருகன் கோவில்



Comments

Popular posts from this blog

கோவில் 1319 - சேலம் மல்லிகுந்தம் சின்ன பழனியாண்டவர் கோவில்

கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 1201 - கொழும்பு மாண்புமிகு பண்டாரநாயக்க மாவத்தை சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்