கோவில் 1470 - சென்னை குரோம்பேட்டை பெரியார் நகர் பாலமுருகன் கோவில்
🙏🙏
தினம் ஒரு முருகன் ஆலயம்-1470
வேண்டிய வரங்கள் தரும் சென்னை குரோம்பேட்டை பெரியார் நகர் பாலமுருகன் கோவில்
17.06.2025 செவ்வாய்
அருள்மிகு பாலமுருகன் திருக்கோவில்
பெரியார் நகர்
குரோம்பேட்டை
சென்னை 600044
இருப்பிடம்: சென்னை சென்ட்ரல் 25 கிமீ, சென்னை கிளாம்பாக்கம் பே. நி 14 கிமீ, குரோம்பேட்டை 3 கிமீ, பல்லாவரம் 4 கிமீ, தாம்பரம் 8 கிமீ, கிண்டி 14 கிமீ
மூலவர்: பாலமுருகன்
உற்சவர்: முருகப்பெருமான் வள்ளி, தெய்வானை
தல மகிமை:
சென்னை மாநகரம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து 25 கிமீ தொலைவில் இருக்கும் குரோம்பேட்டை அருகில் இருக்கும் பெரியார் நகரில் வேண்டிய வரங்கள் தரும் சென்னை குரோம்பேட்டை பெரியார் நகர் பாலமுருகன் கோவில் அமைந்துள்ளது. மேலும் சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து 14 கிமீ தொலைவு அல்லது குரோம்பேட்டை பேருந்து நிலையத்திலிருந்து 3 கிமீ தொலைவு பல்லாவரம் பேருந்து நிலையத்திலிருந்து 4 கிமீ தொலைவு அல்லது தாம்பரம் பேருந்து நிலையத்திலிருந்து 8 கிமீ தொலைவு அல்லது கிண்டி பேருந்து நிலையத்திலிருந்து 14 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் சென்னை குரோம்பேட்டை பெரியார் நகர் பாலமுருகன் கோவிலை அடையலாம் பாலமுருகன். இத்திருக்கோவிலில் மூலவராக வீற்றிருந்து அருளாட்சி செய்கின்றார்.
சென்னை குரோம்பேட்டை பெரியார் நகர் பாலமுருகன் கோவிலில் தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி திருவிழாக்கள் மிகவும் கோலாகலமாக சிறப்புப் பூஜைகளுடன் கொண்டாடப்படுகின்றன. மேலும் வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, ஆடிக்கிருத்திகை உள்ளிட்ட முருகப்பெருமானின் அனைத்து திருவிழாக்களும் விமரிசையாக நடைபெறுகின்றன. சஷ்டி, கிருத்திகை, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன.
தல வரலாறு:
சென்னை குரோம்பேட்டை பகுதி வாழ் புரவலர்கள் மற்றும் முருகப்பெருமான் பக்தர்களின், பேருதவியினாலும் குரோம்பேட்டை பெரியார் நகர் பாலமுருகன் கோவில் கட்டப்பட்டது.
தல அமைப்பு:
சென்னை குரோம்பேட்டை பெரியார் நகர் பாலமுருகன் கோவிலில் அழகிய ராஜகோபுரம் உள்ளது. உள்ளே நுழைந்தவுடன் நெடிய கொடிமரம் உள்ளது. கோவிலில் அழகிய சிற்பங்கள் இருப்பது சிறப்பம்சமாகும். திருக்கோவில் கருவறையில் மூலவர் பாலமுருகன் கருணை பொங்க பொலிவான தோற்றத்தில் கையில் வேலுடன் திருக்காட்சி தந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மூலவர் பாலமுருகன் வலது திருக்கரம் அபய முத்திரை அருளியும், இடது திருக்கரம் இடுப்பில் ஒயிலாக ஏந்தியும் மயில் பின் நிற்க அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம், வேல் உள்ளன. மேலும் விநாயகர், சிவபெருமான், அம்பாள், தட்சிணாமூர்த்தி, பெருமாள், துர்க்கை, நவக்கிரகங்கள் உட்பட எல்லா பரிவார தெய்வங்களும் இத்திருக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
தைப்பூசம், பங்குனி உத்திரம்கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, ஆடிக்கார்த்திகை, சஷ்டி, கிருத்திகை, செவ்வாய், வெள்ளி, பிரதோஷம், சங்கடஹர சதுர்த்தி
பிரார்த்தனை:
வேண்டிய வரங்கள் பெற, கல்வி, கலை, ஞானம் சிறக்க, பிணிகள் நீங்க, வல்வினைகள் தீர, மழலை பாக்கியம் பெற்றிட, குடும்ப வாழ்வு மகிழ்ச்சி வேண்டி, மன அமைதி கிடைக்க, நோய்கள் குணமடைய, நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்க, பாவங்கள் விலக, தோஷங்கள் தீர
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
திறக்கும் நேரம்:
காலை 6.30-9.30 மாலை 5-8
கல்வி, கலை, ஞானம் சிறக்க அருளும் சென்னை குரோம்பேட்டை பெரியார் நகர் பாலமுருகன் திருப்பாதங்கள் பணிந்து தொழுதிடுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
கோயம்புத்தூர் 25
🙏🙏
படம் 1 - 1470 வேண்டிய வரங்கள் தரும் சென்னை குரோம்பேட்டை பெரியார் நகர் பாலமுருகன்
படம் 2 - 1470 கல்வி, கலை, ஞானம் சிறக்க அருளும் சென்னை குரோம்பேட்டை பெரியார் நகர் பாலமுருகன்
Comments
Post a Comment