கோவில் 1469 - சென்னை பள்ளிக்கரணை அறுபடை கார்த்தீஸ்வரர் கோவில்
🙏🙏
தினம் ஒரு முருகன் ஆலயம்-1469
கேட்டதை தந்தருளும் சென்னை பள்ளிக்கரணை அறுபடை கார்த்தீஸ்வரர் கோவில்
16.06.2025 திங்கள்
அருள்மிகு அறுபடை கார்த்தீஸ்வரர் திருக்கோவில்
சாய்பாபா நகர்
பள்ளிக்கரணை
சென்னை 600100
இருப்பிடம்: சென்னை சென்ட்ரல் 22 கிமீ, சென்னை கிளாம்பாக்கம் பே. நி 21 கிமீ, மேடவாக்கம் 6 கிமீ, வேளச்சேரி 7 கிமீ, மடிபாக்கம் 8 கிமீ, கிண்டி 9 கிமீ
மூலவர்: அறுபடை கார்த்தீஸ்வரர்
உற்சவர்: முருகப்பெருமான் வள்ளி, தெய்வானை
தல மகிமை:
சென்னை மாநகரம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து 22 கிமீ தொலைவில் இருக்கும் பள்ளிக்கரணை சாய்பாப நகரில் கேட்டதை தந்தருளும் சென்னை பள்ளிக்கரணை அறுபடை கார்த்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. மேலும் சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து 21 கிமீ தொலைவு அல்லது மேடவாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து 6 கிமீ தொலைவு வேளச்சேரி பேருந்து நிலையத்திலிருந்து 7 கிமீ தொலைவு அல்லது மடிபாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து 7 கிமீ தொலைவு அல்லது கிண்டி பேருந்து நிலையத்திலிருந்து 9 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் சென்னை பள்ளிக்கரணை அறுபடை கார்த்தீஸ்வரர் கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் கார்த்தீஸ்வரர் கையில் வேலுடன் அருளாட்சி புரிகின்றார்.
சென்னை பள்ளிக்கரணை கார்த்தீஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசம் மற்றும் பங்குனி உத்திரத் திருவிழாக்கள் மிகவும் சிறப்பாக நடைபெறுகின்றன. மேலும் கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, ஆடிக்கிருத்திகை உள்ளிட்ட முருகப்பெருமானின் அனைத்து திருவிழாக்களும் விசேஷ பூஜைகளுடன் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை நன்னாட்களில் விசேஷ பூஜைகள் நடக்கின்றன.
தல வரலாறு:
சென்னை பள்ளிக்கரணை கார்த்தீஸ்வரர் கோவில், இப்பகுதி வாழ் புரவலர்கள் மற்றும் முருக பக்தர்களின், பொருளுதவியினாலும் கோவில் கட்டப்பட்டது.
தல அமைப்பு:
சென்னை பள்ளிக்கரணை கார்த்தீஸ்வரர் கோவில் கருவறையில் மூலவர் கார்த்தீஸ்வரர் கையில் வேலேந்தி நான்கு திருக்கரங்களுடன் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம், வேல் உள்ளன. மேலும் விநாயகர் உள்ளிட்ட அனைத்து தெய்வங்களும் இத்திருக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
தைப்பூசம், பங்குனி உத்திரம்கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, ஆடிக்கார்த்திகை, சஷ்டி, கிருத்திகை
பிரார்த்தனை:
கேட்டது கிடைக்க, பாவங்கள் போக்க, வினைகள் தீர, பிணிகள் அகல, குழந்தை வரம் கிட்ட, குடும்ப ஒற்றுமை ஒங்க, மன அமைதி கிட்ட, சஞ்சலங்கள் தீர, நல்லன வேண்டி. தோஷங்கள் நீங்க
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
பாவங்களை போக்கியருளும் சென்னை பள்ளிக்கரணை அறுபடை கார்த்தீஸ்வரரை போற்றி வணங்குவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
கோயம்புத்தூர்
🙏🙏
படம் 1 - 1469 கேட்டதை தந்தருளும் சென்னை பள்ளிக்கரணை அறுபடை கார்த்தீஸ்வரர்
Comments
Post a Comment