கோவில் 1468 - சென்னை மூவரசன்பேட்டை மயூரகிரி பாலமுருகன் கோவில்
🙏🙏
தினம் ஒரு முருகன் ஆலயம்-1468
நல்லன அருளும் சென்னை மூவரசன்பேட்டை மயூரகிரி பாலமுருகன் கோவில்
15.06.2025 ஞாயிறு
அருள்மிகு மயூரகிரி பாலமுருகன் திருக்கோவில்
உழைப்பாளி நகர்
மூவரசன்பேட்டை
சென்னை 600091
இருப்பிடம்: சென்னை சென்ட்ரல் 20 கிமீ, சென்னை கிளாம்பாக்கம் பே. நி 21 கிமீ, திரிசூலம் 2 கிமீ, பல்லாவரம் 7 கிமீ, கிண்டி 9 கிமீ, தாம்பரம் 15 கிமீ
மூலவர்: பாலமுருகன்
உற்சவர்: முருகப்பெருமான்
தல மகிமை:
சென்னை மாநகரம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து 20 கிமீ தொலைவில் இருக்கும் மூவரசன்பேட்டை உழைப்பாளி நகரில் நல்லன அருளும் சென்னை மூவரசன்பேட்டை மயூரகிரி பாலமுருகன் கோவில் அமைந்துள்ளது. மேலும் சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து 21 கிமீ தொலைவு அல்லது அல்லது திரிசூலம் பேருந்து நிலையத்திலிருந்து 2 கிமீ தொலைவு பல்லாவரம் பேருந்து நிலையத்திலிருந்து 7 கிமீ தொலைவு அல்லது கிண்டி பேருந்து நிலையத்திலிருந்து 9 கிமீ தொலைவு அல்லது தாம்பரம் பேருந்து நிலையத்திலிருந்து 15 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் சென்னை மூவரசன்பேட்டை மயூரகிரி பாலமுருகன் கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் பாலமுருகன் கையில் வேலுடன் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றார்.
சென்னை மூவரசன்பேட்டை மயூரகிரி பாலமுருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திரத் திருவிழா விமரிசையாக சிறப்பு பூஜைகளுடன் நடைபெறுகிறது. பக்தர்கள் பால்குடம் ஏந்தி தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர், மேலும் தைப்பூசம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, ஆடிக்கிருத்திகை உள்ளிட்ட முருகப்பெருமானின் அனைத்து திருவிழாக்களும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை நன்னாட்களில் விசேஷ பூஜைகள் நடக்கின்றன.
தல வரலாறு:
சென்னை மூவரசன்பேட்டை மயூரகிரி பாலமுருகன் கோவில் பல்லாவரம், திரிசூலம், மூவரசன்பேட்டை வாழ் புரவலர்கள் மற்றும் முருக பக்தர்களின், பொருளுதவியினாலும் கோவில் கட்டப்பட்டது.
தல அமைப்பு:
சென்னை மூவரசன்பேட்டை மயூரகிரி பாலமுருகன் கோவில் கருவறையில் மூலவர் பாலமுருகன் கையில் வேலேந்தி இளையோனாய் நின்ற திருக்கோலத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம், வேல் உள்ளன. மேலும் இக்கோவிலில் விநாயகர், உற்சவர் முருகப்பெருமான், உள்ளிட்ட அனைத்து தெய்வங்களும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
பங்குனி உத்திரம், தைப்பூசம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, ஆடிக்கார்த்திகை, சஷ்டி, கிருத்திகை
பிரார்த்தனை:
நல்லன அருள, எண்ணியது ஈடேற, வினைகள் தீர, பிணிகள் நீங்க, குழந்தைப்பேறு வேண்டி, உடல் ஆரோக்கியம் கிட்ட, மன அமைதி கிடைக்க, தொழில் மேம்பட, ஞானம் சிறக்க, தோஷங்கள் விலக
நேர்த்திக்கடன்:
பால்குடம், காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
எண்ணியதை ஈடேற்றும் சென்னை மூவரசன்பேட்டை மயூரகிரி பாலமுருகனை மனமுருகி பிரார்த்திப்போம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
கோயம்புத்தூர் 25
🙏🙏
படம் 1 - 1468 நல்லன அருளும் சென்னை மூவரசன்பேட்டை மயூரகிரி பாலமுருகன்
படம் 2 - 1468 எண்ணியதை ஈடேற்றும் சென்னை மூவரசன்பேட்டை மயூரகிரி பாலமுருகன்
Comments
Post a Comment