கோவில் 1467 - சென்னை பழைய பல்லாவரம் அருள்முருகன் கோவில்
🙏🙏
தினம் ஒரு முருகன் ஆலயம்-1467
வேண்டியது அனைத்தும் நிச்சயம் நிறைவேற்றும் சென்னை பழைய பல்லாவரம் அருள்முருகன் கோவில்
14.06.2025 சனி
அருள்மிகு அருள்முருகன் திருக்கோவில்
சாரா நகர் (யுனியன் கார்பைடு காலனி)
பழைய பல்லாவரம்
பல்லாவரம்
சென்னை 600043
இருப்பிடம்: சென்னை சென்ட்ரல் 25 கிமீ, சென்னை கிளாம்பாக்கம் பே. நி 17 கிமீ, பல்லாவரம் 4 கிமீ, தாம்பரம் 9 கிமீ, கிண்டி 11 கிமீ
மூலவர்: அருள்முருகன்
தேவியர்: வள்ளி, தெய்வானை
உற்சவர்: அருள்முருகன் வள்ளி, தெய்வானை
தல மகிமை:
சென்னை மாநகரம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து 25 கிமீ தொலைவில் இருக்கும் சாரா நகரில் (யுனியன் கார்பைடு காலனி) வேண்டியது அனைத்தும் நிச்சயம் நிறைவேற்றும் சென்னை பழைய பல்லாவரம் அருள்முருகன் கோவில் அமைந்துள்ளது. மேலும் சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து 17 கிமீ தொலைவு அல்லது பல்லாவரம் பேருந்து நிலையத்திலிருந்து 4 கிமீ தொலைவு அல்லது தாம்பரம் பேருந்து நிலையத்திலிருந்து 9 கிமீ தொலைவு அல்லது கிண்டி பேருந்து நிலையத்திலிருந்து 11 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் சென்னை பழைய பல்லாவரம் அருள்முருகன் கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் வள்ளி, தெய்வானை சமேதராக மூலவர் அருள்முருகன் வீற்றிருந்து அருளாட்சி புரிகின்றார். இத்திருக்கோவில் வளாகத்தில் மிகவும் பழமையான ஆலமரம் விநாயகப்பெருமான் போல திருக்காட்சி அருள்வது இக்கோவிலின் சிறப்பம்சமாகும்.
சென்னை பழைய பல்லாவரம் அருள்முருகன் கோவிலில் வருடந்தோறும் தைப்பூசம் மற்றும் பங்குனி உத்திரம் விசேஷ பூஜைகளுடன் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர், மேலும் கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, ஆடிக்கிருத்திகை உள்ளிட்ட முருகப்பெருமானின் அனைத்து திருவிழாக்களும் விமரிசையாக நடைபெறுகின்றன. சஷ்டி, கிருத்திகை முதலான நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன.
தல வரலாறு:
சென்னை பழைய பல்லாவரம் அருள்முருகன் கோவில் பல்லாவரம் வாழ் புரவலர்கள் மற்றும் முருக பக்தர்களின் அயராத முயற்சிகளாலும், பொருளுதவியினாலும் கோவில் நிறுவப்பட்டது.
தல அமைப்பு:
சென்னை பழைய பல்லாவரம் அருள்முருகன் கோவில் அழகிய கோபுர அமைப்புடன் உள்ளன. கோவிலினுள் நுழைந்தவுடன் நெடிய கொடிமரம் உள்ளது. இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் அருள்முருகன் கையில் வேலேந்தி, வள்ளி, தெய்வானை சமேதராக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் இத்திருக்கோவிலில் சக்தி விநாயகர், உற்சவர், கோஷ்ட தெய்வங்கள், சிவபெருமான். அம்பாள், பெருமாள், தேவி, ஐயப்பன், நாகர்கள், நவக்கிரகங்கள் உள்ளிட்ட அனைத்து தெய்வங்களும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, ஆடிக்கார்த்திகை, பிரதோஷம், சங்கடஹர சதுர்த்தி சஷ்டி, கிருத்திகை
பிரார்த்தனை:
வேண்டியது நிறைவேற, குறைகளை நீங்க, வினைகள் விலக, பிணிகள் தீர, திருமண வரம், குழந்திய வரம் வேண்டி, குடும்ப வாழ்வு சிறக்க, நோய்கள் பூரண குணமுடைய, நல்லன நடக்க, சோதனைகள் தவிர்க்க, நேர்மறை எண்ணங்கள் உண்டாக, தோஷங்கள் அகல
நேர்த்திக்கடன்:
காவடி, அலகு குத்துதல், அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
குறைகளை நீக்கும் சென்னை பழைய பல்லாவரம் அருள்முருகன் திருவருள் பெற்றிட வேண்டுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
கோயம்புத்தூர் 25
🙏🙏
படம் 1 - 1467 வேண்டியது அனைத்தும் நிச்சயம் நிறைவேற்றும் சென்னை பழைய பல்லாவரம் அருள்முருகன்
Comments
Post a Comment