கோவில் 1466 - சென்னை ஜமீன் பல்லாவரம் சுப்பிரமணிய சுவாமி கோவில்

 🙏🙏

தினம் ஒரு முருகன் ஆலயம்-1466

கவலைகள் தீர்க்கும் சென்னை ஜமீன் பல்லாவரம் சுப்பிரமணிய சுவாமி கோவில்

13.06.2025 வெள்ளி


அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்

சுந்தரேசன் தெரு

ஜமீன் பல்லாவரம்

பல்லாவரம்

சென்னை 600043


இருப்பிடம்: சென்னை சென்ட்ரல் 23 கிமீ, சென்னை கிளாம்பாக்கம் பே. நி 15 கிமீ, பல்லாவரம் 2 கிமீ, தாம்பரம் 9 கிமீ, கிண்டி 15 கிமீ


மூலவர்: சுப்பிரமணிய சுவாமி

தேவியர்: வள்ளி, தெய்வானை

உற்சவர்: சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானை

கும்பாபிஷேக நாள்: 04.05.25

தல மகிமை:

சென்னை மாநகரம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து 23 கிமீ தொலைவில் இருக்கும் ஜமீன் பல்லாவரம் சுந்தரேசன் தெருவில் கவலைகள் தீர்க்கும் சென்னை ஜமீன் பல்லாவரம் சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. மேலும் சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து 15 கிமீ தொலைவு அல்லது பல்லாவரம் பேருந்து நிலையத்திலிருந்து 2 கிமீ தொலைவு அல்லது தாம்பரம் பேருந்து நிலையத்திலிருந்து 9 கிமீ தொலைவு அல்லது கிண்டி பேருந்து நிலையத்திலிருந்து 15 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் சென்னை ஜமீன் பல்லாவரம் சுப்பிரமணிய சுவாமி கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானை சமேதராக வீற்றிருந்து அருளாட்சி செய்கின்றார்.


இத்திருக்கோவிலில் தினமும் மாலை 6 முதல் 7 மணி வரை விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் நடைபெறுகிறது. கும்பாபிஷேகம் 04.05.25 அன்று சகல வேத கிரியைகளுடன் வெகு விமரிசையாக நடைபெற்றது.


சென்னை ஜமீன் பல்லாவரம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வருடந்தோறும் தைப்பூசம் சிறப்பு பூஜைகளுடன் விமரிசையாக நடைபெறுகின்றது. மேலும் பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, ஆடிக்கிருத்திகை உள்ளிட்ட முருகப்பெருமானின் அனைத்து திருவிழாக்களும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை முதலான நன்னாட்களில் விசேஷ வழிபாடுகள் நடக்கின்றன. பிரதோஷம், சங்கடஹர சதுர்த்தி தினங்களில் சிறப்புப் பூஜைகள் நடைபெறுகின்றன.


தல வரலாறு:

சென்னை பல்லாவரம் வாழ் புரவலர்கள் மற்றும் சிறந்த முருக பக்தர்களின் சீரிய முயற்சிகளாலும், பொருளுதவியினாலும் சென்னை ஜமீன் பல்லாவரம் சுப்பிரமணிய சுவாமி கோவில் நிறுவப்பட்டது.

தல அமைப்பு:

சென்னை அய்யப்பன்தாங்கல் ஜமீன் பல்லாவரம் சுப்பிரமணிய சுவாமி கோவில் அழகிய கோபுரங்கள் உள்ளன. இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி கையில் வேல் கொண்டு, மயில் பின் நிற்க வள்ளி, தெய்வானையுடன் நின்ற திருக்கோலத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் விநாயகர், உற்சவர் சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானை, தட்சிணாமூர்த்தி, பிரம்மா, துர்க்கை, சிவபெருமான். அம்பாள், ராமர், ஐயப்பன், நவக்கிரகங்கள் உள்ளிட்ட எல்லா பரிவார மூர்த்திகளும் இத்திருக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.


திருவிழா:

பங்குனி உத்திரம், தைப்பூசம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, ஆடிக்கார்த்திகை, பிரதோஷம், சங்கடஹர சதுர்த்தி சஷ்டி, கிருத்திகை


பிரார்த்தனை:

கவலைகள் தீர, விருப்பங்கள் நிறைவேற, திருமணத்தடை நீங்க, குழந்தை பாக்கியம் கிட்ட, குடும்ப ஒற்றுமை ஓங்க, நோய்கள் குணமாக, நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்க, நல்லன வேண்டி, மன மகிழ்ச்சி உண்டாக, வியாபாரம் விருத்தியடைய, தோஷங்கள் அகல


நேர்த்திக்கடன்:

அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்


விருப்பங்களை நிறைவேற்றும் சென்னை ஜமீன் பல்லாவரம் சுப்பிரமணிய சுவாமியை மனமுருக பிரார்த்திப்போம்!

வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

Dr K. முத்துக்குமரன் Ph. D

9489302842

bamikumar@gmail.com

கோயம்புத்தூர் 25

🙏🙏


படம் 1 - 1466 கவலைகள் தீர்க்கும் சென்னை ஜமீன் பல்லாவரம் சுப்பிரமணிய சுவாமி


படம் 2 - 1466 விருப்பங்களை நிறைவேற்றும் சென்னை ஜமீன் பல்லாவரம் சுப்பிரமணிய சுவாமி



Comments

Popular posts from this blog

கோவில் 1319 - சேலம் மல்லிகுந்தம் சின்ன பழனியாண்டவர் கோவில்

கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 1201 - கொழும்பு மாண்புமிகு பண்டாரநாயக்க மாவத்தை சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்