கோவில் 1657 - மலேசியா பேராக் தாப்பா செந்தில்வேல் முருகன் கோவில்
🙏🏽🙏🏽
தினம் ஒரு முருகன் ஆலயம்-1657
விருப்பங்களை நிறைவேற்றும் மலேசியா பேராக் தாப்பா செந்தில்வேல் முருகன் கோவில்
21.12.2025 ஞாயிறு
அருள்மிகு செந்தில்வேல் முருகன் திருக்கோவில்
1, Ladang Tong Wah
35000 தாப்பா [Tapah]
பத்தாங் பாடாங் மாவட்டம் [Batang Padang District]
பேராக் மாநிலம் [Perak]
மலேசியா [Malaysia]
இருப்பிடம்: கோலாலம்பூர் [Kuala Lumpur] 155 கிமீ, தாப்பா [Tapah] 5 கிமீ, பீடோர் [Bidor] 16 கிமீ, சுங்கை [Sungkai] 30 கிமீ, தெலுக் இந்தான் [Teluk Intan] 46 கிமீ, ஈப்போ [Ipoh] 67 கிமீ, பினாங்கு [Penang] 213 கிமீ
மூலவர்: செந்தில்வேல் முருகன்
தேவியர்: வள்ளி, தெய்வானை
உற்சவர்: செந்தில்வேல் முருகன் வள்ளி, தெய்வானை
தல மகிமை:
மலேசியா நாட்டின் தலைநகரம் கோலாலம்பூருக்கு வடக்கே அமைந்துள்ள பேராக் [Perak] மாநிலம் பத்தாங் பாடாங் மாவட்டத்தில் [Batang Padang District] உள்ள Batang Padang நகரில் 1, Ladang Tong Wah பகுதியில் விருப்பங்களை நிறைவேற்றும் தாப்பா செந்தில்வேல் முருகன் கோவில் அமைந்துள்ளது.
இத்திருக்கோவில் மலேசியா நாட்டின் தலைநகரம் கோலாலம்பூர் [Kuala Lumpur] பேருந்து நிலையத்திலிருந்து 155 கிமீ தொலைவு அல்லது தாப்பா [Tapah] பேருந்து நிலையத்திலிருந்து 5 கிமீ தொலைவு அல்லது பீடோர் [Bidor] பேருந்து நிலையத்திலிருந்து 16 கிமீ தொலைவு அல்லது சுங்கை [Sungkai] பேருந்து நிலையத்திலிருந்து 30 கிமீ தொலைவு அல்லது தெலுக் இந்தான் [Teluk Intan] பேருந்து நிலையத்திலிருந்து 45 கிமீ தொலைவு அல்லது ஈப்போ [Ipoh] பேருந்து நிலையத்திலிருந்து 67 கிமீ தொலைவு அல்லது பினாங்கு [Penang] பேருந்து நிலையத்திலிருந்து 213 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் தாப்பா செந்தில்வேல் முருகன் கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் செந்தில்வேல் முருகன் வள்ளி, தெய்வானை சமேதராக வீற்றிருந்து அருள்பாலிக்கின்றார்.
மலேசியா பேராக் மாநிலம் பத்தாங் பாடாங் மாவட்டம் தாப்பா செந்தில்வேல் முருகன் கோவிலில் தைப்பூசம் முக்கியத் திருவிழாவாக வருடந்தோறும் சிறப்பாக நடைபெறுகின்றது. பக்தர்கள் காவடி ஏந்தி வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். கந்த சஷ்டி திருவிழா தினமும் அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகளுடன் சிறப்பாக நடைபெறுகின்றது. சூரம்சம்ஹாரம் முக்கிய நிகழ்வாகும். மேலும் இத்திருக்கோவிலில் முருகப்பெருமானின் பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், மாசி மகம், திருக்கார்த்திகை, சித்ரா பௌர்ணமி உள்ளிட்ட அனைத்து திருவிழாக்களும் சிறப்புப் பூஜைகளுடன் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை திருநாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. தமிழ், ஆங்கில வருட பிறப்பு, தீபாவளி, பொங்கல், நவராத்திரி, விநாயகர் சதுர்த்தி, மகா சிவராத்திரி, உள்ளிட்ட அனைத்து இந்து பண்டிகைகளும் விசேஷ வழிபாடுகளுடன் நடைபெறுகின்றன.
தல வரலாறு:
மலேசியா பேராக் மாநிலம் பத்தாங் பாடாங் மாவட்டம் தாப்பா செந்தில்வேல் முருகன் இப்பகுதியில் கோவில் பிரசித்திப் பெற்றக் கோவிலாகும்.
தல அமைப்பு:
மலேசியா பேராக் மாநிலம் பத்தாங் பாடாங் மாவட்டம் தாப்பா செந்தில்வேல் முருகன் கோவிலில் கோபுரங்கள், சிற்பங்கள் அழகுற அமைந்துள்ளன. இக்கோவிலினுள் நுழைந்தவுடன் அழகிய கொடிமரம் உள்ளது. இத்திருக்கோவில் கருவறையில் செந்தில்வேல் முருகன் வள்ளி, தெய்வானை சமேதராக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் இத்திருக்கோவிலில் விநாயகர், உற்சவர், சிவபெருமான், மாரியம்மன், பெருமாள், நவக்கிரகங்கள் உட்பட அனைத்துத் தெய்வங்களும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
தைப்பூசம், கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சித்ரா பௌர்ணமி, மாசி மகம், மகா சிவராத்திரி, நவராத்திரி, விநாயகர் சதுர்த்தி, தீபாவளி, பொங்கல், தமிழ், ஆங்கில புத்தாண்டு தினம், பிரதோஷம், சஷ்டி, கிருத்திகை
பிரார்த்தனை:
விருப்பங்கள் நிறைவேற, பிணிகள் அகல, வேண்டும் வரம் கிட்ட, வினைகள் போக்க, திருமணத்தடை நீங்க, குழந்தை பாக்கியம் வேண்டி, குடும்ப வாழ்வு சிறக்க, உடல் ஆரோக்கியம் உண்டாக, நல்லன அருள, மன தைரியம் கிடைக்க, நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்க, துன்பங்கள் விலக, தோஷங்கள் அகல
நேர்த்திக்கடன்:
பால்குடம், காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
சகல பிணிகளையும் அகற்றியருளும் மலேசியா பேராக் தாப்பா செந்தில்வேல் முருகனை மனமுருகி பிரார்த்திப்போம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
சைவ சித்தாந்தச் சுடர்
சைவ நெறிச் செம்மல்
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
கோயம்புத்தூர் 25
🙏🏽🙏🏽
படம் 1 - 1657 விருப்பங்களை நிறைவேற்றும் மலேசியா பேராக் தாப்பா செந்தில்வேல் முருகன்
Comments
Post a Comment