கோவில் 1653 - மலேசியா பேராக் கம்பார் முருகன் கோவில்
🙏🏽🙏🏽
தினம் ஒரு முருகன் ஆலயம்-1653
சகல செல்வங்களையும் அருளும் மலேசியா பேராக் கம்பார் முருகன் கோவில்
17.12.2025 புதன்
அருள்மிகு முருகன் திருக்கோவில்
730, Jalan Jelawat
31950 கம்பார் [Kampar]
கம்பார் மாவட்டம் [[Kampar District]
பேராக் மாநிலம் [Perak]
மலேசியா [Malaysia]
இருப்பிடம்: கோலாலம்பூர் [Kuala Lumpur] 170 கிமீ, தாப்பா [Tapah] 20 கிமீ, பீடோர் [Bidor] 31 கிமீ, தெலுக் இந்தான் [Teluk Intan] 41 கிமீ, ஈப்போ [Ipoh] 52 கிமீ, கோலா கங்சார் [Kuala Kangsar] 84 கிமீ, பினாங்கு [Penang] 174 கிமீ
மூலவர்: முருகன்
தேவியர்: வள்ளி, தெய்வானை
உற்சவர்: முருகன் வள்ளி, தெய்வானை
தல மகிமை:
மலேசியா நாட்டின் தலைநகரம் கோலாலம்பூருக்கு வடக்கே அமைந்துள்ள பேராக் [Perak] மாநிலம் கம்பார் மாவட்டத்தின் [Kampar District] தலைநகர் கம்பார் [Kampar] நகரில் சகல செல்வங்களையும் அருளும் கம்பார் முருகன் கோவில் அமைந்துள்ளது.
இத்திருக்கோவில் மலேசியா நாட்டின் தலைநகரம் கோலாலம்பூர் [Kuala Lumpur] பேருந்து நிலையத்திலிருந்து 170 கிமீ தொலைவு அல்லது தாப்பா [Tapah] பேருந்து நிலையத்திலிருந்து 20 கிமீ தொலைவு அல்லது பீடோர் [Bidor] பேருந்து நிலையத்திலிருந்து 31 கிமீ தொலைவு அல்லது தெலுக் இந்தான் [Teluk Intan] பேருந்து நிலையத்திலிருந்து 41 கிமீ தொலைவு அல்லது ஈப்போ [Ipoh] பேருந்து நிலையத்திலிருந்து 52 கிமீ தொலைவு அல்லது கோலா கங்சார் [Kuala Kangsar]] பேருந்து நிலையத்திலிருந்து 84 கிமீ தொலைவு அல்லது பினாங்கு [Penang] பேருந்து நிலையத்திலிருந்து 174 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் கம்பார் முருகன் கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் முருகன் கையில் வேலுடன் வள்ளி, தெய்வானை சமேதராக வீற்றிருந்து அருள்பாலிக்கின்றார்.
மலேசியா பேராக் மாநிலம் கம்பார் மாவட்டம் கம்பார் முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழாவாக விமரிசையாக நடைபெறுகின்றது. பக்தர்கள் பால்குடம், காவடி ஏந்தி வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். கந்த சஷ்டி மற்றும் பங்குனி உத்திரம் திருவிழாக்களும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. கந்த சஷ்டி பெருவிழாவில் 6-ம் நாள் சூரம்சம்ஹாரம் நிகழ்வும், 7-ம் நாள் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் மிகவும் விமரிசையாக நடைபெறுகின்றது. மேலும் இத்திருக்கோவிலில் வைகாசி விசாகம், மாசி மகம், திருக்கார்த்திகை உள்ளிட்ட முருகப்பெருமானின் அனைத்துத் திருவிழாக்களும் சிறப்பு பூஜைகளுடன் கொண்டாடப்படுகின்றன. தமிழ், ஆங்கில வருட பிறப்பு, தீபாவளி, பொங்கல், சஷ்டி, கிருத்திகை முதலான நன்னாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. நவராத்திரி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட அனைத்து இந்து பண்டிகைகளும் சிறப்பு பூஜைகளுடன் நடக்கின்றன.
தல வரலாறு:
மலேசியா பேராக் மாநிலம் கம்பார் மாவட்டம் கம்பார் முருகன் கோவில் இப்பகுதியில் சிறப்புப் பெற்ற முருகன் கோவிலாகும்.
தல அமைப்பு:
மலேசியா பேராக் மாநிலம் கம்பார் மாவட்டம் கம்பார் முருகன் கோவில் கோபுரங்கள், சிற்பங்களுடன் அழகுற கட்டப்பட்டுள்ளது. கோவிலில் அழகிய கொடிமரம் உள்ளது. இத்திருக்கோவில் கருவறையில் முருகன் வள்ளி, தெய்வானை சமேதராக கையில் வேலுடன் நின்ற திருக்கோலத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் விநாயகர், கோஷ்ட தெய்வங்கள், உற்சவர், நடராஜர், சிவகாமி, சிவபெருமான், அம்பாள், அம்மன், பைரவர், நவக்கிரகங்கள் உள்ளிட்ட எல்லா தெய்வங்களும் இத்திருக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
தைப்பூசம், கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை, வைகாசி விசாகம், மாசி மகம், சித்ரா பௌர்ணமி, மகா சிவராத்திரி, நவராத்திரி, விநாயகர் சதுர்த்தி, தீபாவளி, பொங்கல், தமிழ், ஆங்கில புத்தாண்டு தினம், பிரதோஷம், சஷ்டி, கிருத்திகை
பிரார்த்தனை:
சகல செல்வங்கள் வேண்டி, இடர்கள் களைய, வேண்டியது நிறைவேற, இருவினைகள் மறைய, பிணிகள் தீர, நேர்மறை எண்ணங்கள் உண்டாக, திருமணத்தடை நீங்க, குழந்தை பாக்கியம் வேண்டி, நோய்கள் குணமடைய, நல்லன அருள, மன அமைதி கிடைக்க, தோஷங்கள் விலக
நேர்த்திக்கடன்:
பால்குடம், காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
இடர்கள் களைய அருளும் மலேசியா பேராக் கம்பார் முருகனை மனமுருகி வேண்டுடிவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
சைவ சித்தாந்தச் சுடர்
சைவ நெறிச் செம்மல்
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
கோயம்புத்தூர் 25
🙏🏽🙏🏽
படம் 1 - 1653 சகல செல்வங்களையும் அருளும் மலேசியா பேராக் கம்பார் முருகன்
Comments
Post a Comment