கோவில் 1651 - மலேசியா பேராக் தஞ்சோங் மாலிம் தண்டாயுதபாணி கோவில்
🙏🏽🙏🏽
தினம் ஒரு முருகன் ஆலயம்-1651
எதிரிகளை அழித்தருளும் மலேசியா பேராக் தஞ்சோங் மாலிம் தண்டாயுதபாணி கோவில்
15.12.2025 திங்கள்
அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவில்
Jalan Ketoyong
35900 தஞ்சோங் மாலிம் [Tanjung Malim]
முவாலிம் மாவட்டம் [Muallim District]
பேராக் மாநிலம் [Perak]
மலேசியா [Malaysia]
இருப்பிடம்: கோலாலம்பூர் [Kuala Lumpur] 79 கிமீ, சுங்கை [Sungkai] 44 கிமீ, பீடோர் [Bidor] 60 கிமீ, தாப்பா [Tapah] 74 கிமீ, ஈப்போ [Ipoh] 131 கிமீ, பினாங்கு [Penang] 277 கிமீ
மூலவர்: தண்டாயுதபாணி
உற்சவர்: முருகப்பெருமான் வள்ளி, தெய்வானை
பழமை: 100 ஆண்டுகள்
கும்பாபிஷேகம்: 10.12.2023
தல மகிமை:
மலேசியா நாட்டின் தலைநகரம் கோலாலம்பூருக்கு வடக்கே அமைந்துள்ள பேராக் [Perak] மாநிலம் முவாலிம் மாவட்டத்தில் [Muallim District] உள்ள தஞ்சோங் மாலிம் [Tanjung Malim] நகரில் எதிரிகளை அழித்தருளும் தஞ்சோங் மாலிம் தண்டாயுதபாணி கோவில் அமைந்துள்ளது. நூறு ஆண்டுகள் பழமையான தஞ்சோங் மாலிம் தண்டாயுதபாணி கோவில் கும்பாபிஷேகம் 10.12.2023-ல் நடைபெற்றது.
இத்திருக்கோவில் மலேசியா நாட்டின் தலைநகரம் கோலாலம்பூர் [Kuala Lumpur] பேருந்து நிலையத்திலிருந்து 79 கிமீ தொலைவு அல்லது சுங்கை [Sungkai] பேருந்து நிலையத்திலிருந்து 44 கிமீ தொலைவு அல்லது பீடோர் [Bidor] பேருந்து நிலையத்திலிருந்து 60 கிமீ தொலைவு அல்லது தாப்பா [Tapah] பேருந்து நிலையத்திலிருந்து 74 கிமீ தொலைவு அல்லது ஈப்போ [Ipoh] பேருந்து நிலையத்திலிருந்து 131 கிமீ தொலைவு அல்லது பினாங்கு [Penang] பேருந்து நிலையத்திலிருந்து 277 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் தஞ்சோங் மாலிம் தண்டாயுதபாணி கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் பொலிவான தோற்றத்தில் தண்டாயுதபாணி மூலவராக கையில் தண்டத்துடன் அருளாட்சி புரிகின்றார்.
மலேசியா பேராக் மாநிலம் முவாலிம் மாவட்டம் தஞ்சோங் மாலிம் தண்டாயுதபாணி கோவிலில் வருடந்தோறும் வைகாசி விசாகம் 12 நாட்கள் பெரிய திருவிழாவாக கொடியேற்றத்துடன் தொடங்கி கோலாகலமாகக் கொண்டாடப்படுகின்றது. தினமும் தண்டாயுதபாணி சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம், சிறப்புப் பூஜைகள், அன்னதானம், சுவாமி வீதி உலா விமரிசையாக நடைபெறுகின்றன. வைகாசி விசாகத் திருநாளன்று பால்குடம், காவடிகள் ஏந்தி வந்து ஏராளமான பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். தைப்பூசம் திருவிழாவன்று சிறப்புப் பூஜைகள் நடக்கின்றன. பக்தர்கள் பால்குடம், காவடி சுமந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். கந்த சஷ்டி திருவிழா 7 நாட்கள் அபிஷேகம், அலங்காரம், சிறப்பு தீபாராதனைகள் என சிறப்பாக நடைபெறுகின்றது. ஆறாம் நாள் மாலை சூரம்சம்ஹாரம் நிகழ்வு சிறப்பாக நடைபெறுகின்றது. 7-ம் நாள் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் மிகவும் விமரிசையாக நடைபெறுகின்றது. மேலும் இத்திருக்கோவிலில் பங்குனி உத்திரம், மாசி மகம், திருக்கார்த்திகை உள்ளிட்ட முருகப்பெருமானின் அனைத்துத் திருவிழாக்களும் சிறப்பு பூஜைகளுடன் கொண்டாடப்படுகின்றன. தமிழ், ஆங்கில வருட பிறப்பு, தீபாவளி, பொங்கல், சஷ்டி, கிருத்திகை முதலான திருநாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. நவராத்திரி, விநாயகர் சதுர்த்தி, மார்கழி பூஜை உள்ளிட்ட அனைத்து இந்து பண்டிகைகளும் விசேஷ பூஜைகளுடன் நடைபெறுகின்றன. இக்கோவிலில் மகா சிவராத்திரி நான்கு கால பூஜைகளுடன் மிகவும் சிறப்பாக நடைபெறுகின்றது.
தல வரலாறு:
மலேசியா பேராக் மாநிலம் முவாலிம் மாவட்டம் தஞ்சோங் மாலிம் தண்டாயுதபாணி கோவில் இப்பகுதியில்மிகவும் பிரசித்திப் பெற்ற 100 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான கோவிலாகும். இத்திருக்கோவிலில் திருப்பணி வேலைகள் மேற்கொள்ளப்பட்டு 10.12.2023 அன்று கும்பாபிஷேகம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
தல அமைப்பு:
மலேசியா பேராக் மாநிலம் முவாலிம் மாவட்டம் தஞ்சோங் மாலிம் தண்டாயுதபாணி கோவிலில் ஆகம விதிகளின் படி அமைந்துள்ளது. திருக்கோவிலிலில் ராஜகோபுரத்தில் அழகிய வேல் ஒன்று சாத்தப்பட்டுள்ளது. இக்கோவிலுக்குள் நுழைந்தவுடன் அழகிய கொடிமரம் உள்ளது. இத்திருக்கோவில் கருவறையில் தண்டாயுதபாணி கையில் தண்டத்துடன் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் இத்திருக்கோவிலில் விநாயகர், உற்சவர் வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமான், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, நடராஜர், சிவகாமி, சிவபெருமான், பார்வதி, மாரியம்மன், பெருமாள். ஆஞ்சநேயர், இடும்பன், பைரவர், நவக்கிரகங்கள் உள்ளிட்ட அனைத்து தெய்வங்களும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
வைகாசி விசாகம், தைப்பூசம், கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை, மாசி மகம், சித்ரா பௌர்ணமி, மகா சிவராத்திரி, நவராத்திரி, விநாயகர் சதுர்த்தி, மார்கழி பூஜை, தீபாவளி, பொங்கல், தமிழ், ஆங்கில புத்தாண்டு தினம், பிரதோஷம், சஷ்டி, கிருத்திகை
பிரார்த்தனை:
எதிரிகளை அழித்தருள, விருப்பங்கள் நிறைவேற, வினைகள் விலக, பிணிகள் தீர, திருமணப்பேறு கிட்ட, சந்தான பாக்கியம் வேண்டி, நோய்கள் குணமாக, தொழில், வியாபாரம் மேம்பட, மன மகிழ்ச்சி உண்டாக, பாவங்கள் போக்க, ஐஸ்வர்யம் பெருக, தோஷங்கள் அகல
நேர்த்திக்கடன்:
பால்குடம், காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
திறக்கும் நேரம்:
காலை 7-10 மாலை 7-9
விருப்பங்களை நிறைவேற்றும் மலேசியா பேராக் தஞ்சோங் மாலிம் தண்டாயுதபாணியை போற்றி வணங்குவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
சைவ சித்தாந்தச் சுடர்
சைவ நெறிச் செம்மல்
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
கோயம்புத்தூர் 25
🙏🏽🙏🏽
படம் 1 - 1651 எதிரிகளை அழித்தருளும் மலேசியா பேராக் தஞ்சோங் மாலிம் தண்டாயுதபாணி
Comments
Post a Comment