கோவில் 1611 - மலேசியா ஜோகூர் பஞ்சூர் சுப்பிரமணியர் கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1611
திருமண வரமருளும் மலேசியா ஜோகூர் பஞ்சூர் சுப்பிரமணியர் கோவில்
05.11.2025 புதன்
அருள்மிகு சுப்பிரமணியர் திருக்கோவில்
[அ/மி முருகன் திருக்கோவில்]
Ladang Nordanal
பஞ்சூர் [Panchor 84500]
மூவார் மாவட்டம் [[Muar District]
ஜோகூர் மாநிலம் [Johor Darul Ta'zi]
மலேசியா [Malaysia]
இருப்பிடம்: கோலாலம்பூர் [KLBST/Airport] 185 கிமீ, பஞ்சூர் [Panchor] 15 கிமீ, தங்காக் [Tangkak] 35 கிமீ, மூவார் [Muar] 40 கிமீ, மலாக்கா [Malacca] 70 கிமீ, ஜோகூர் பாரு [Johor Bahru] 170 கிமீ
மூலவர்: சுப்பிரமணியர்
தேவியர்: வள்ளி, தெய்வானை
உற்சவர்: சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானை
தல மகிமை:
மலேசியா நாட்டின் தெற்கு பகுதியில் ஜோகூர் [Johor] மாநிலத்தில் இருக்கும் மூவார் மாவட்டத்தில் உள்ள பஞ்சூர் [Panchor] நகரில் Ladang Nordanal பகுதி தோட்டத்தில் திருமண வரமருளும் பஞ்சூர் சுப்பிரமணியர் கோவில் அமைந்துள்ளது. மலேசியா தலைநகரம் கோலாலம்பூர் பேருந்து நிலையத்திலிருந்து 185 கிமீ தொலைவு அல்லது பஞ்சூர் [Panchor] பேருந்து நிலையத்திலிருந்து 15 கிமீ தொலைவு அல்லது தங்காக் [Tangkak] பேருந்து நிலையத்திலிருந்து 35 கிமீ தொலைவு அல்லது மூவார் [Muar] பேருந்து நிலையத்திலிருந்து 40 கிமீ தொலைவு அல்லது மலாக்கா பேருந்து நிலையத்திலிருந்து 70 கிமீ தொலைவு அல்லது ஜோகூர் பாரு 170 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் பஞ்சூர் சுப்பிரமணியர் கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானை சமேதராக அருளாட்சி புரிகின்றார்.
மலேசியா பஞ்சூர் சுப்பிரமணியர் கோவிலில் ஆண்டு தோறும் தைப்பூசம் மற்றும் பங்குனி உத்திரத் திருவிழாக்கள் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. பக்தர்கள் பால்குடம், காவடி ஏந்தி தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றுகின்றனர். மேலும் கந்த சஷ்டி பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை உள்ளிட்ட முருகப்பெருமானின் அனைத்து திருவிழாக்களும் இத்திருக்கோவிலில் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை திருநாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.
தல வரலாறு:
மலேசியாவின் ஜோகூர் மாநிலம் மூவார் மாவட்டம் பஞ்சூர் சுப்பிரமணியர் கோவில் மிகவும் பழமையான கோவிலாகும். . சில ஆண்டுகளுக்கும் முன் கோவில் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தல அமைப்பு:
மலேசியா ஜோகூர் மாநிலம் மூவார் மாவட்டம் பஞ்சூர் சுப்பிரமணியர் கோவில் அழகிய அமைப்பிடன் அமைந்துள்ளது. இத்திருக்கோவிலில் கொடிமரம் உள்ளது. இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் சுப்பிரமணியர் கையில் வேலுடன் வள்ளி, தெய்வானை சமேதராக திருக்காட்சி தந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் வேல், மயில், பலிபீடம் உள்ளன. மேலும் இத்திருக்கோவிலில் விநாயகர், உற்சவர், மாரியம்மன் உட்பட அனைத்து தெய்வங்களும் சந்நிதிகளில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சஷ்டி, கிருத்திகை, தீபாவளி, பொங்கல்
பிரார்த்தனை:
திருமண வரமருள, செல்வம் பெருக, குழந்தைப்பேறு வேண்டி, வேண்டியது பெற, வினைகள் விலக, பிணிகள் போக்க, நல்லன நடைபெற, உடல் ஆரோக்கியம் வேண்டி, மன அமைதி கிட்ட, தொல்லைகள் தீர, வியாபாரம் விருத்தியடைய, தோஷங்கள் அகல
நேர்த்திக்கடன்:
பால்குடம், காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
செல்வம் பெருக அருளும் மலேசியா ஜோகூர் பஞ்சூர் சுப்பிரமணியரை பணிந்து தொழுதிடுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
சைவ சித்தாந்தச் சுடர்
சைவ நெறிச் செம்மல்
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
Comments
Post a Comment