கோவில் 1598 - கோயம்புத்தூர் பொள்ளாச்சி காளிபாளையம் முருகன் கோவில்
🙏🏼🙏🏼
தினம் ஒரு முருகன் ஆலயம்-1598
சத்ரு தொல்லைகளை அழிக்கும் கோயம்புத்தூர் பொள்ளாச்சி காளிபாளையம் முருகன் கோவில்
23.10.2025 வியாழன்
அருள்மிகு முருகன் திருக்கோவில் [TM010775]
காளிபாளையம்
[D.Kalipalayam]
பொள்ளாச்சி 642005
பொள்ளாச்சி வட்டம்
கோயம்புத்தூர் மாவட்டம்
இருப்பிடம்: காந்திபுரம் 47 கிமீ, பொள்ளாச்சி 9 கிமீ, கிணத்துக்கடவு 21 கிமீ, உடுமலைப்பேட்டை 40 கிமீ, உக்கடம் 43 கிமீ
மூலவர்: முருகன்
உற்சவர்: முருகன் வள்ளி, தெய்வானை
தல மகிமை:
கோயம்புத்தூர் மாவட்டம் காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 9 கிமீ தொலைவில் இருக்கும் பொள்ளாச்சியில் உள்ள காளிபாளையம் பகுதியில் சத்ரு தொல்லைகளை அழிக்கும் பொள்ளாச்சி காளிபாளையம் முருகன் கோவில் அமைந்துள்ளது. மேலும் பொள்ளாச்சி பேருந்து நிலையத்திலிருந்து 9 கிமீ தொலைவு அல்லது கிணத்துக்கடவு பேருந்து நிலையத்திலிருந்து 21 கிமீ தொலைவு அல்லது உடுமலைப்பேட்டை பேருந்து நிலையத்திலிருந்து 40 கிமீ தொலைவு அல்லது உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து 43 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் பொள்ளாச்சி காளிபாளையம் முருகன் கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் முருகன் ஆற்றலுடன் வீற்றிருந்து அருளாட்சி செய்கின்றார்.
கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி காளிபாளையம் முருகன் கோவிலில் தைப்பூசம் மற்றும் பங்குனி உத்திரம் திருவிழாக்கள் சிறப்புப் பூஜைகளுடன் கொண்டாடப்படுகின்றன. மேலும் கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை உள்ளிட்ட முருகப்பெருமானின் அனைத்து திருவிழாக்களும் விமரிசையாக நடைபெறுகின்றன. சஷ்டி, கிருத்திகை திருநாட்களில் விசேஷ வழிபாடுகள் நடக்கின்றன.
தல வரலாறு:
கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி காளிபாளையம் முருகன் கோவில் மிகவும் பழமையான கோவிலாகக் கருதப்படுகிறது. இந்து அறநிலையத் துறை தற்போது இத்திருக்கோவில் நிர்வாகத்தை நிர்வகித்து வருகிறது.
தல அமைப்பு:
பொள்ளாச்சி காளிபாளையம் முருகன் கோவில் கருவறையில் மூலவர் முருகன் கையில் வேல் கொண்டு பொலிவான தோற்றத்துடன் ஆற்றலுடன் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன மேலும் இத்திருக்கோவிலில் விநாயகர், சிவன் உள்ளிட்ட அனைத்து பரிவார தெய்வங்களும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சஷ்டி, கிருத்திகை
பிரார்த்தனை:
சத்ரு தொல்லைகள் அழிய, மன அமைதி பெற, வேண்டுவன கிட்ட, இருவினைகள் நீங்க, பிணிகள் விலக, குழந்தை வரம் வேண்டி, குடும்ப வாழ்வு சிறக்க, நல்ல எண்ணங்கள் உண்டாக, உடல் ஆரோக்கியம் பெற்றிட, தோஷங்கள் அகல
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
மன அமைதி தரும் கோயம்புத்தூர் பொள்ளாச்சி காளிபாளையம் முருகனை மனமுருகி தொழுதிடுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
சைவ சித்தாந்தச் சுடர்
சைவ நெறிச் செம்மல்
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
கோயம்புத்தூர் 25
🙏🏼🙏🏼
Comments
Post a Comment