கோவில் 1597 - கோயம்புத்தூர் பொள்ளாச்சி ஜமீன் முத்தூர் பாலமுருகன் கோவில்

 🙏🏻🙏🏻

தினம் ஒரு முருகன் ஆலயம்-1597

சந்தான பாக்கியமருளும் கோயம்புத்தூர் பொள்ளாச்சி ஜமீன் முத்தூர் பாலமுருகன் கோவில்

22.10.2025 புதன்


அருள்மிகு பாலமுருகன் திருக்கோவில்

அரண்மனை தெரு

ஜமீன் முத்தூர்

[Zamin Muthur]

பொள்ளாச்சி 642005

பொள்ளாச்சி வட்டம்

கோயம்புத்தூர் மாவட்டம்


இருப்பிடம்: காந்திபுரம் 48 கிமீ, பொள்ளாச்சி 5 கிமீ, கிணத்துக்கடவு 29 கிமீ, உடுமலைப்பேட்டை 36 கிமீ, உக்கடம் 44 கிமீ


மூலவர்: பாலமுருகன்

உற்சவர்: முருகன் வள்ளி, தெய்வானை

கும்பாபிஷேகம்: 2024


தல மகிமை:

கோயம்புத்தூர் மாவட்டம் காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 35 கிமீ தொலைவில் இருக்கும் பொள்ளாச்சி நகரில் ஜமீன் முத்தூர் அரண்மனை தெருவில் சந்தான பாக்கியமருளும் பொள்ளாச்சி ஜமீன் முத்தூர் பாலமுருகன் கோவில் அமைந்துள்ளது. மேலும் பொள்ளாச்சி பேருந்து நிலையத்திலிருந்து 5 கிமீ தொலைவு அல்லது கிணத்துக்கடவு பேருந்து நிலையத்திலிருந்து 29 கிமீ தொலைவு அல்லது உடுமலைப்பேட்டை பேருந்து நிலையத்திலிருந்து 36 கிமீ தொலைவு அல்லது உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து 44 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் பொள்ளாச்சி ஜமீன் முத்தூர் பாலமுருகன் கோவிலை அடையலாம். பாலமுருகன் இத்திருக்கோவிலில் அழகு பாலகனாக கையில் வேலுடன் மூலவராக வீற்றிருந்து அருளாட்சி புரிகின்றார். இத்திருக்கோவிலில் கோவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு 10 மாதங்களுக்கு முன் (2024) மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.


கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி ஜமீன் முத்தூர் பாலமுருகன் திருக்கோவிலில் கந்த சஷ்டி பெருவிழா வெகுச் சிறப்புடன் விமரிசையாக நடைபெறுகின்றது. மேலும் தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை உள்ளிட்ட முருகப்பெருமானின் அனைத்து திருவிழாக்களும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. ஒவ்வொரு சஷ்டி, கிருத்திகை நாட்களில் விமரிசையாக வழிபாடுகள் நடைபெறுகின்றன.


தல வரலாறு:

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி நகரில் அமைந்துள்ள ஜமீன் முத்தூர் பாலமுருகன் கோவில் பிரசித்திப் பெற்றக் கோவிலாகும். இத்திருக்கோவிலில் கோவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு 10 மாதங்களுக்கு முன் (2024) மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.


தல அமைப்பு:

பொள்ளாச்சி ஜமீன் முத்தூர் பாலமுருகன் கோவில் அழகிய அமைப்புடன் அமைந்துள்ளது. கருவறையில் மூலவர் பாலமுருகன் அழகு பாலகனாக கையில் வேலுடன் நின்ற திருக்கோலத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன அதற்கும் முன்னால் ஒரு வேல் மற்றும் சிறிய தீபஸ்தம்பம் உள்ளது.. மேலும் இத்திருக்கோவிலில் விநாயகர், சிவன் உள்ளிட்ட அனைத்து தெய்வங்களும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.


திருவிழா:

கந்த சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சஷ்டி, கிருத்திகை


பிரார்த்தனை:

சந்தான பாக்கியம் வேண்டி, சத்ரு தொல்லைகள் மறைய, எண்ணியது ஈடேற, இரு வினைகள் அகல, பிணிகள் போக்க, ஞானம் மேம்பட, சகல செல்வங்களும் பெருக, உடல் ஆரோக்கியம் உண்டாக, நல்லன அருள, மன அமைதி கிட்ட, தோஷங்கள் விலக


நேர்த்திக்கடன்:

பால்குடம், அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்


சத்ரு தொல்லைகள் மறைய அருளும் கோயம்புத்தூர் பொள்ளாச்சி ஜமீன் முத்தூர் பாலமுருகனை போற்றி வணங்குவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

சைவ சித்தாந்தச் சுடர்

சைவ நெறிச் செம்மல்

Dr K. முத்துக்குமரன் Ph. D

9489302842

bamikumar@gmail.com

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻


படம் 1 - 1597 சந்தான பாக்கியமருளும் கோயம்புத்தூர் பொள்ளாச்சி ஜமீன் முத்தூர் பாலமுருகன்


படம் 2 - 1597 சத்ரு தொல்லைகள் மறைய அருளும் கோயம்புத்தூர் பொள்ளாச்சி ஜமீன் முத்தூர் பாலமுருகன் கோவில்

Comments

Popular posts from this blog

கோவில் 1319 - சேலம் மல்லிகுந்தம் சின்ன பழனியாண்டவர் கோவில்

கோவில் 1326 - சேலம் K R தோப்பூர் பாலமுருகன் கோவில்

கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்