கோவில் 1596 - கோயம்புத்தூர் ஆண்டிபாளையம் வன்னியகுமாரசாமி கோவில்

 🙏🏻🙏🏻

தினம் ஒரு முருகன் ஆலயம்-1596

ஆனந்தமருளும் கோயம்புத்தூர் ஆண்டிபாளையம் வன்னியகுமாரசாமி கோவில்

21.10.2025 செவ்வாய்


அருள்மிகு வன்னியகுமாரசாமி திருக்கோவில் [TM011478]

ஆண்டிபாளையம் 642202

கிணத்துக்கடவு வட்டம்

கோயம்புத்தூர் மாவட்டம்


இருப்பிடம்: காந்திபுரம் 35 கிமீ, கிணத்துக்கடவு 12 கிமீ, பொள்ளாச்சி 25 கிமீ, சிங்காநல்லூர் 30 கிமீ, உக்கடம் 34 கிமீ


மூலவர்: வன்னியகுமாரசாமி

உற்சவர்: வன்னியகுமாரசாமி


தல மகிமை:

கோயம்புத்தூர் மாவட்டம் காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 35 கிமீ தொலைவில் இருக்கும் கிணத்துக்கடவு வட்டம் ஆண்டிபாளையம் கிராமத்தில் ஆனந்தமருளும் கோயம்புத்தூர் ஆண்டிபாளையம் வன்னியகுமாரசாமி கோவில் அமைந்துள்ளது. மேலும் கிணத்துக்கடவு பேருந்து நிலையத்திலிருந்து 12 கிமீ தொலைவு அல்லது பொள்ளாச்சி பேருந்து நிலையத்திலிருந்து 25 கிமீ தொலைவு அல்லது சிங்காநல்லூர் பேருந்து நிலையத்திலிருந்து 30 கிமீ தொலைவு அல்லது உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து 34 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் கோயம்புத்தூர் ஆண்டிபாளையம் வன்னியகுமாரசாமி கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் வன்னியகுமாரசாமி என்ற திருப்பெயருடன் மூலவர் வீற்றிருந்து அருள்கின்றார்.


கோயம்புத்தூர் மாவட்டம் ஆண்டிபாளையம் வன்னியகுமாரசாமி திருக்கோவிலில் தைப்பூசம் சிறப்பு பூஜைகளுடன் மிகவும் விமரிசையாக நடைபெறுகின்றது. மேலும் பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை உள்ளிட்ட வன்னியகுமாரசாமியின் அனைத்து திருவிழாக்களும் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை திருநாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.


தல வரலாறு:

கோயம்புத்தூர் மாவட்டம் கிணத்துக்கடவு வட்டம் வன்னியகுமாரசாமி கோவில் மிகவும் பழமையான கோவிலாகும். இத்திருக்கோவிலின் நிர்வாகத்தை தற்போது இந்து அறநிலையத் துறை நிர்வகித்து வருகிறது.


தல அமைப்பு:

கோயம்புத்தூர் மாவட்டம் வன்னியகுமாரசாமி கோவில் கருவறையில் மூலவர் வன்னியகுமாரசாமி பொலிவான தோற்றத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் விநாயகர், உள்ளிட்ட தெய்வங்களும் இத்திருக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.


திருவிழா:

தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சஷ்டி, கிருத்திகை


பிரார்த்தனை:

ஆனந்தம் அருள, இடர்கள் களைய, நினத்தது நிறைவேற, வினைகள் விலக, பிணிகள் அகல, குழந்தை வரம் வேண்டி, உடல் ஆரோக்கியம் உண்டாக, நல்லன நடைபெற, சகல ஐஸ்வர்யங்கள் கிடைக்க, தோஷங்கள் போக்க


நேர்த்திக்கடன்:

காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்


இடர்கள் களைய அருளும் கோயம்புத்தூர் ஆண்டிபாளையம் வன்னியகுமாரசாமியை மனக்கண்ணால் தரிசித்து வேண்டுவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

சைவ சித்தாந்தச் சுடர்

சைவ நெறிச் செம்மல்

Dr K. முத்துக்குமரன் Ph. D

9489302842

bamikumar@gmail.com

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻


படம் 1 - 1596 ஆனந்தமருளும் கோயம்புத்தூர் ஆண்டிபாளையம் வன்னியகுமாரசாமி கோவில் [HRCE Photo]



படம் 2 - 1596 இடர்கள் களைய அருளும் கோயம்புத்தூர் ஆண்டிபாளையம் வன்னியகுமாரசாமி கோவில் [HRCE Photo]

Comments

Popular posts from this blog

கோவில் 1319 - சேலம் மல்லிகுந்தம் சின்ன பழனியாண்டவர் கோவில்

கோவில் 1326 - சேலம் K R தோப்பூர் பாலமுருகன் கோவில்

கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்