கோவில் 1595 - கோயம்புத்தூர் வடபுதூர் வன்னியகுமாரசாமி கோவில்

 🙏🏻🙏🏻

தினம் ஒரு முருகன் ஆலயம்-1595

மன மகிழ்ச்சி தந்தருளும் கோயம்புத்தூர் வடபுதூர் வன்னியகுமாரசாமி கோவில்

20.10.2025 திங்கள்


அருள்மிகு வன்னியகுமாரசாமி திருக்கோவில்

வடபுதூர் 642109

கிணத்துக்கடவு வட்டம்

கோயம்புத்தூர் மாவட்டம்


இருப்பிடம்: காந்திபுரம் 25 கிமீ, கிணத்துக்கடவு 6 கிமீ, பொள்ளாச்சி 20 கிமீ, உக்கடம் 21 கிமீ, சிங்காநல்லூர் 25 கிமீ


மூலவர்: வன்னியகுமாரசாமி

உற்சவர்: வன்னியகுமாரசாமி

கும்பாபிஷேகம்: 2024


தல மகிமை:

கோயம்புத்தூர் மாவட்டம் காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 25 கிமீ தொலைவில் இருக்கும் கிணத்துக்கடவு வட்டம் வடபுதூர் கிராமத்தில் கோயம்புத்தூர் வடபுதூர் வன்னியகுமாரசாமி கோவில் அமைந்துள்ளது. மேலும் கிணத்துக்கடவு பேருந்து நிலையத்திலிருந்து 6 கிமீ தொலைவு அல்லது பொள்ளாச்சி பேருந்து நிலையத்திலிருந்து 20 கிமீ தொலைவு அல்லது உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து 21 கிமீ தொலைவு அல்லது சிங்காநல்லூர் பேருந்து நிலையத்திலிருந்து 25 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் கோயம்புத்தூர் வடபுதூர் வன்னியகுமாரசாமி கோவிலை அடையலாம். முருகப்பெருமான் வடபுதூர் திருக்கோவிலில் வன்னியகுமாரசாமி என்ற திருப்பெயருடன் மூலவராக பொலிவுடன் வீற்றிருந்து அருள்புரிகின்றார். இத்திருக்கோவிலில் திருப்பணி வேலைகள் மேற்கொள்ளப்பட்டு 2024-ல் திருக்கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.


கோயம்புத்தூர் மாவட்டம் வடபுதூர் வன்னியகுமாரசாமி திருக்கோவிலில் தைப்பூசம் மற்றும் பங்குனி உத்திரம் திருவிழாக்கள் மிகவும் சிறப்பாக நடைபெறுகின்றன. பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற காவடி ஏந்தி வந்து வன்னியகுமாரசாமியை வழிபட்டு வேண்டும் வரங்கள் பெற்றுச் செல்கின்றனர். மேலும் கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை உள்ளிட்ட வன்னியகுமாரசாமியின் அனைத்து திருவிழாக்களும் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை திருநாட்களில் விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன.


தல வரலாறு:

கோயம்புத்தூர் மாவட்டம் கிணத்துக்கடவு வட்டம் பகுதியில் வடபுதூர் வன்னியகுமாரசாமி கோவில் மிகவும் முக்கியமான கோவிலாகும். வடபுதூர் வன்னியகுமாரசாமி கோவிலில் திருப்பணி வேலைகள் நடைபெற்று 2024-ல் திருக்கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.


தல அமைப்பு:

கோயம்புத்தூர் மாவட்டம் வடபுதூர் வன்னியகுமாரசாமி கோவில் அழகிய கோபுரங்கள் மற்றும் சிற்பங்களுடன் அமைந்துள்ளன. இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் வன்னியகுமாரசாமி நின்ற திருக்கோலத்தில் பொலிவுடன் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் விநாயகர், சாஸ்தா, அம்மன், இடும்பன் உள்ளிட்ட அனைத்து தெய்வங்களும் இத்திருக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.


திருவிழா:

தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சஷ்டி, கிருத்திகை


பிரார்த்தனை:

மன மகிழ்ச்சி அருள, வேண்டும் வரங்கள் பெற, வல்வினைகள் களைய, எடுத்த காரியங்களில் வெற்றி பெற, பிணிகள் தீர, சந்தான பாக்கியம் வேண்டி, திருமண வரம் கிட்ட, குடும்ப வாழ்வு சிறக்க, செல்வம் பெருக, நல்லன வேண்டி, சஞ்சலம் அகல, தோஷங்கள் விலக


நேர்த்திக்கடன்:

காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்


வேண்டும் வரங்களை அள்ளி வழங்கும் கோயம்புத்தூர் வடபுதூர் வன்னியகுமாரசாமி திருவடிகள் பணிந்து தொழுதிடுவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

சைவ சித்தாந்தச் சுடர்

சைவ நெறிச் செம்மல்

Dr K. முத்துக்குமரன் Ph. D

9489302842

bamikumar@gmail.com

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻


படம் 1 - 1595 மன மகிழ்ச்சி தந்தருளும் கோயம்புத்தூர் வடபுதூர் வன்னியகுமாரசாமி


படம் 2 - 1595 வேண்டும் வரங்களை அள்ளி வழங்கும் கோயம்புத்தூர் வடபுதூர் வன்னியகுமாரசாமி

Comments

Popular posts from this blog

கோவில் 1319 - சேலம் மல்லிகுந்தம் சின்ன பழனியாண்டவர் கோவில்

கோவில் 1326 - சேலம் K R தோப்பூர் பாலமுருகன் கோவில்

கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்