கோவில் 1593 - கோயம்புத்தூர் சாமிசெட்டிபாளையம் முருகன் கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1593
சங்கடம் தீர்க்கும் கோயம்புத்தூர் சாமிசெட்டிபாளையம் முருகன் கோவில்
18.10.2025 சனி
அருள்மிகு முருகன் திருக்கோவில்
[அ/மி விநாயகர் & முருகன் திருக்கோவில்]
பொதிகை கார்டன்
எல்.ஐ.சி நகர் 3-வது தெரு
சாமிசெட்டிபாளையம் 641047
கோயம்புத்தூர் வடக்கு வட்டம்
கோயம்புத்தூர் மாவட்டம்
இருப்பிடம்: காந்திபுரம் 21 கிமீ, பெரியநாயக்கன்பாளையம் 12 கிமீ, காரமடை 12 கிமீ, மேட்டுப்பாளையம் 19 கிமீ, உக்கடம் 22 கிமீ, சிங்காநல்லூர் 28 கிமீ
மூலவர் 1: முருகன்
மூலவர் 2: விநாயகர்
உற்சவர்: முருகன் வள்ளி, தெய்வானை
தல மகிமை:
கோயம்புத்தூர் மாநகரம் காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 21 கிமீ தொலைவில் இருக்கும் சாமிசெட்டிபாளையம் பகுதியில் எல்.ஐ.சி நகர் 3-வது தெருவில் சங்கடம் தீர்க்கும் கோயம்புத்தூர் சாமிசெட்டிபாளையம் முருகன் கோவில் அமைந்துள்ளது. விநாயகப்பெருமானும் இத்திருக்கோவிலில் மற்றுமொரு முக்கிய மூலவராக அருள்பாலிப்பதால் இக்கோவில் விநாயகர் & முருகன் திருக்கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் பெரியநாயக்கன்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து 12 கிமீ தொலைவு அல்லது காரமடை பேருந்து நிலையத்திலிருந்து 12 கிமீ தொலைவு அல்லது மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து 19 கிமீ தொலைவு அல்லது உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து 22 கிமீ தொலைவு அல்லது சிங்காநல்லூர் பேருந்து நிலையத்திலிருந்து 28 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் கோயம்புத்தூர் சாமிசெட்டிபாளையம் முருகன் கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர்களாக முருகன் மற்றும் விநாயகர் வீற்றிருந்து அருளாட்சி செய்கின்றனர்.
கோயம்புத்தூர் சாமிசெட்டிபாளையம் முருகன் கோவிலில் தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, விநாயகர் சதுர்த்தி முதலான திருவிழாக்கள் மிகவும் பிரசித்திப் பெற்ற திருவிழாக்களாக சிறப்பு பூஜைகள், சுவாமி உலா என்று விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. மேலும் வைகாசி விசாகம், திருக்கார்த்திகை உள்ளிட்ட முருகப்பெருமானின் அனைத்து திருவிழாக்களும் சிறப்பாக நடைபெறுகின்றன. சஷ்டி, கிருத்திகை, சங்கடஹர சதுர்த்தி திருநாட்களில் விசேஷ வழிபாடுகள் நடக்கின்றன.
தல வரலாறு:
கோயம்புத்தூர் சாமிசெட்டிபாளையம் முருகன் கோவில் இப்பகுதியில் மிகவும் பிரசித்திப் பெற்ற கோவிலாகும்.
தல அமைப்பு:
கோயம்புத்தூர் சாமிசெட்டிபாளையம் முருகன் கோவில் கருவறையில் முருகன் கையில் வேலுடன் மூலவராக வீற்றிருந்து தனி சந்நிதியில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மற்றொரு கருவறையில் விநாயகர் மூலவராக வீற்றிருந்து தனி சந்நிதியில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மேலும் சிவபெருமான், சப்த மாதர்கள் உட்பட அனைத்து தெய்வங்களும் இத்திருக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, விநாயகர் சதுர்த்தி, சஷ்டி, கிருத்திகை, சங்கடஹர சதுர்த்தி
பிரார்த்தனை:
சங்கடம் தீர, மன மகிழ்ச்சி பெற, வேண்டுவன கிடைக்க, வினைகள் விலக, பிணிகள் அகல, புத்திர பாக்கியம் வேண்டி, மண வாழ்க்கை கிட்ட, உடல் ஆரோக்கியம் உண்டாக, நல்லன அருள தோஷங்கள் போக்க
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
மன மகிழ்ச்சி தந்தருளும் கோயம்புத்தூர் கோயம்புத்தூர் சாமிசெட்டிபாளையம் முருகனை போற்றி வணங்குவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
சைவ சித்தாந்தச் சுடர்
சைவ நெறிச் செம்மல்
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 1593 சங்கடம் தீர்க்கும் கோயம்புத்தூர் சாமிசெட்டிபாளையம் முருகன்
Comments
Post a Comment