கோவில் 1592 - கோயம்புத்தூர் பொன்னாண்டாம்பாளையம் சென்னியாண்டவர் கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1592
செல்வம் அருளும் கோயம்புத்தூர் பொன்னாண்டாம்பாளையம் சென்னியாண்டவர் கோவில்
17.10.2025 வெள்ளி
அருள்மிகு சென்னியாண்டவர் திருக்கோவில்
பொன்னாண்டாம்பாளையம் 641107
[Ponnandampalayam]
சூலூர் வட்டம்
கோயம்புத்தூர் மாவட்டம்
இருப்பிடம்: காந்திபுரம் 25 கிமீ, விராலிகாடு சென்னியாண்டவர் கோவில் 12 கிமீ, சூலூர் 13 கிமீ, சிங்காநல்லூர் 21 கிமீ, அவிநாசி 21 கிமீ உக்கடம் 26 கிமீ
மூலவர்: சென்னியாண்டவர்
உற்சவர்: சென்னியாண்டவர் வள்ளி, தெய்வானை
தல மகிமை:
கோயம்புத்தூர் மாவட்டம் காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 25 கிமீ தொலைவில் இருக்கும் சூலூர் வட்டம் பொன்னாண்டாம்பாளையம் கிராமத்தில் செல்வம் அருளும் கோயம்புத்தூர் பொன்னாண்டாம்பாளையம் சென்னியாண்டவர் கோவில் அமைந்துள்ளது. மேலும் மிகவும் பிரசித்திப் பெற்ற விராலிகாடு சென்னியாண்டவர் கோவிலிலிருந்து 12 கிமீ தொலைவு அல்லது சூலூர் பேருந்து நிலையத்திலிருந்து 13 கிமீ தொலைவு அல்லது சிங்காநல்லூர் பேருந்து நிலையத்திலிருந்து 21 கிமீ தொலைவு அல்லது அவிநாசி பேருந்து நிலையத்திலிருந்து 21 கிமீ தொலைவு அல்லது உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து 26 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் கோயம்புத்தூர் மாவட்டம் பொன்னாண்டாம்பாளையம் சென்னியாண்டவர் கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் சென்னியாண்டவர் கையில் வேலுடன் வீற்றிருந்து அருளாட்சி செய்கின்றார்.
கோயம்புத்தூர் மாவட்டம் பொன்னாண்டாம்பாளையம் சென்னியாண்டவர் கோவிலில் தைப்பூசம் மிகவும் பிரசித்திப் பெற்ற திருவிழாவாகும். மேலும் பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை உள்ளிட்ட முருகப்பெருமானின் அனைத்து திருவிழாக்களும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன.
தல வரலாறு:
கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் பொன்னாண்டாம்பாளையம் சென்னியாண்டவர் கோவில் இப்பகுதியில் பிரசித்திப் பெற்ற கோவிலாகும்.
தல அமைப்பு:
கோயம்புத்தூர் மாவட்டம் பொன்னாண்டாம்பாளையம் சென்னியாண்டவர் கோவில் கோபுரங்கள் மற்றும் அழகிய சிற்பங்களுடன் அமைந்துள்ளது. கோவில் இத்திருக்கோவில் கோபுர வாயில் அருகில் அழகிய கொடிஸ்தம்பம் உள்ளது. கோவில் திருக்கோபுரம் மேல் ஒரு அழகிய வேல் ஒன்று உள்ளது. இத்திருக்கோவில் கருவறையில் சென்னியாண்டவர் மூலவராக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் விநாயகர், தட்சிணாமூத்தி, துர்க்கை, சிவபெருமான், அம்பாள், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், பைரவர், நவக்கிரகங்கள் உள்ளிட்ட அனைத்து தெய்வங்களும் இத்திருக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சஷ்டி, கிருத்திகை
பிரார்த்தனை:
செல்வம் பெற, விருப்பங்கள் நிறைவேற, மன அமைதி கிட்ட, வல்வினைகள் தீர, பிணிகள் விலக, குழந்தை பாக்கியம் வேண்டி, நோய்கள் குணமடைய, நல்லன நடைபெற, தொல்லைகள் நீங்க, தோஷங்கள் அகல
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
விருப்பங்களை நிறைவேற்றும் கோயம்புத்தூர் பொன்னாண்டாம்பாளையம் சென்னியாண்டவரை மனமுருகி வேண்டுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
சைவ சித்தாந்தச் சுடர்
சைவ நெறிச் செம்மல்
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 1592 செல்வம் அருளும் கோயம்புத்தூர் பொன்னாண்டாம்பாளையம் சென்னியாண்டவர் கோவில்
Comments
Post a Comment