கோவில் 1591 - கோயம்புத்தூர் காடம்பாடி சென்னியாண்டவர் கோவில்
🙏🏾🙏🏾
தினம் ஒரு முருகன் ஆலயம்-1591
நேர்மறை அதிர்வுகள் உண்டாக்கும் கோயம்புத்தூர் காடம்பாடி சென்னியாண்டவர் கோவில்
16.10.2025 வியாழன்
அருள்மிகு சென்னியாண்டவர் திருக்கோவில்
காடம்பாடி 641401
சூலூர் வட்டம்
கோயம்புத்தூர் மாவட்டம்
இருப்பிடம்: காந்திபுரம் 26 கிமீ, காங்கேயம்பாளையம் சென்னியாண்டவர் கோவில் 3 கிமீ, சூலூர் 6 கிமீ, பல்லடம் 15 கிமீ, சிங்காநல்லூர் 17 கிமீ, உக்கடம் 25 கிமீ, அவிநாசி 26 கிமீ, திருப்பூர் 32 கிமீ
மூலவர்: சென்னியாண்டவர்
உற்சவர்: சென்னியாண்டவர் வள்ளி, தெய்வானை
தல மகிமை:
கோயம்புத்தூர் மாவட்டம் காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 26 கிமீ தொலைவில் இருக்கும் சூலூர் வட்டம் காடம்பாடி கிராமத்தில் பிணிகளை நீக்கியருளும் கோயம்புத்தூர் காடம்பாடி சென்னியாண்டவர் கோவில் அமைந்துள்ளது. மேலும் காங்கேயம்பாளையம் சென்னியாண்டவர் கோவிலிலிருந்து 3 கிமீ தொலைவு அல்லது சூலூர் பேருந்து நிலையத்திலிருந்து 6 கிமீ தொலைவு அல்லது பல்லடம் பேருந்து நிலையத்திலிருந்து 15 கிமீ தொலைவு அல்லது சிங்காநல்லூர் பேருந்து நிலையத்திலிருந்து 17 கிமீ தொலைவு அல்லது உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து 25 கிமீ தொலைவு அல்லது அவிநாசி பேருந்து நிலையத்திலிருந்து 26 கிமீ தொலைவு அல்லது திருப்பூர் பேருந்து நிலையத்திலிருந்து 32 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் கோயம்புத்தூர் மாவட்டம் காடம்பாடி சென்னியாண்டவர் கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் சென்னியாண்டவர் மூலவராக வீற்றிருந்து அருளாட்சி செய்கின்றார்.
கோயம்புத்தூர் மாவட்டம் காடம்பாடி சென்னியாண்டவர் கோவிலில் தைப்பூசம் மற்றும் பங்குனி உத்திரம் முக்கிய திருவிழாக்களாகக் கொண்டாடப்படுகின்றன. மேலும் கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை உள்ளிட்ட முருகப்பெருமானின் அனைத்து திருவிழாக்களும் சிறப்பாகக நடைபெறுகின்றன. சஷ்டி, கிருத்திகை நாட்களில் விசேஷழிபாடுகள் நடக்கின்றன.
தல வரலாறு:
கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் காடம்பாடி சென்னியாண்டவர் கோவில் மிகவும் பழமையான கோவிலாகும்.
தல அமைப்பு:
கோயம்புத்தூர் மாவட்டம் காடம்பாடி சென்னியாண்டவர் கோவில் அழகிய கோபுரங்கள் மற்றும் சிற்பங்களுடன் கட்டப்பட்டுள்ளது. இத்திருக்கோவிலில் அழகிய கொடிஸ்தம்பம் உள்ளது. இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் சென்னியாண்டவர் கையில் வேலுடன் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் இத்திருக்கோவிலில் விநாயகர், காசி விஸ்வநாதர், விசாலாட்சி, வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், கால பைரவர், நவக்கிரகங்கள் உள்ளிட்ட அனைத்து பரிவார மூர்த்திகளும் தனித் தனி சந்நிதிகளில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சஷ்டி, கிருத்திகை
பிரார்த்தனை:
நேர்மறை அதிர்வுகள் உண்டாக, வினைகள் விலக, நினைத்தது நிறைவேற, பிணிகள் அகல, திருமணம் நடைபெற, குழந்தைப்பேறு வேண்டி, குடும்ப வாழ்வு சிறக்க, மன அமைதி கிட்ட, நல்லன நடைபெற, உடல் ஆரோக்கியம் சீராக, தோஷங்கள் போக்க
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
வினைகள் விலக அருளும் கோயம்புத்தூர் காடம்பாடி சென்னியாண்டவர் திருவடிகள் பணிந்து தொழுதிடுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
சைவ சித்தாந்தச் சுடர்
சைவ நெறிச் செம்மல்
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
கோயம்புத்தூர் 25
🙏🏾🙏🏾
படம் 1 - 1591 நேர்மறை அதிர்வுகள் உண்டாக்கும் கோயம்புத்தூர் காடம்பாடி சென்னியாண்டவர் கோவில்
Comments
Post a Comment