கோவில் 1590 - கோயம்புத்தூர் காங்கேயம்பாளையம் சென்னியாண்டவர் கோவில்
🙏🏾🙏🏾
தினம் ஒரு முருகன் ஆலயம்-1590
பிணிகளை நீக்கியருளும் கோயம்புத்தூர் காங்கேயம்பாளையம் சென்னியாண்டவர் கோவில்
15.10.2025 புதன்
அருள்மிகு சென்னியாண்டவர் திருக்கோவில்
காங்கேயம்பாளையம் 641401
[காங்கயம்பாளையம்/Kangeyampalayam]
சூலூர் வட்டம்
கோயம்புத்தூர் மாவட்டம்
இருப்பிடம்: காந்திபுரம் 24 கிமீ, சூலூர் 4 கிமீ, சிங்காநல்லூர் 15 கிமீ, பல்லடம் 16 கிமீ, உக்கடம் 22 கிமீ, திருப்பூர் 32 கிமீ, அவிநாசி 32 கிமீ
மூலவர்: சென்னியாண்டவர்
உற்சவர்: சென்னியாண்டவர் வள்ளி, தெய்வானை
தல மகிமை:
கோயம்புத்தூர் மாவட்டம் காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 24 கிமீ தொலைவில் இருக்கும் சூலூர் வட்டம் காங்கேயம்பாளையம் கிராமத்தில் பிணிகளை நீக்கியருளும் கோயம்புத்தூர் காங்கேயம்பாளையம் சென்னியாண்டவர் கோவில் அமைந்துள்ளது. மேலும் சூலூர் பேருந்து நிலையத்திலிருந்து 4 கிமீ தொலைவு அல்லது சிங்காநல்லூர் பேருந்து நிலையத்திலிருந்து 15 கிமீ தொலைவு அல்லது பல்லடம் பேருந்து நிலையத்திலிருந்து 16 கிமீ தொலைவு அல்லது உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து 22 கிமீ தொலைவு அல்லது திருப்பூர் பேருந்து நிலையத்திலிருந்து 32 கிமீ தொலைவு அல்லது அவிநாசி பேருந்து நிலையத்திலிருந்து 32 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் கோயம்புத்தூர் மாவட்டம் காங்கேயம்பாளையம் சென்னியாண்டவர் கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் சென்னியாண்டவர் மூலவராக கையில் தண்டத்துடன் அருள்பாலிக்கின்றார்.
கோயம்புத்தூர் மாவட்டம் காங்கேயம்பாளையம் சென்னியாண்டவர் கோவிலில் தைப்பூசம் வருடந்தோறும் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. மேலும் பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை உள்ளிட்ட முருகப்பெருமானின் அனைத்து திருவிழாக்களும் விமரிசையாக நடைபெறுகின்றன. சஷ்டி, கிருத்திகை நாட்களில் விசேஷழிபாடுகள் நடக்கின்றன.
தல வரலாறு:
கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் காங்கேயம்பாளையம் சென்னியாண்டவர் கோவில் இப்பகுதியில் பிரசித்திப் பெற்றக் கோவிலாகும்.
தல அமைப்பு:
கோயம்புத்தூர் மாவட்டம் காங்கேயம்பாளையம் சென்னியாண்டவர் கோவில் கருவறையில் மூலவர் சென்னியாண்டவர் வலது திருக்கரம் தண்டம் ஏந்தியும், இடது திருக்கரம் இடுப்பில் ஒயிலாக வைத்தப்படியும் நின்ற திருக்கோலத்தில் ஆற்றலுடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மூலவர் சென்னியாண்டவர் வேல் மற்றும் சேவற்கொடியுடனும் அருளுகின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் விநாயகர், சிவபெருமான் உள்ளிட்ட எல்லா தெய்வங்களும் இத்திருக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சஷ்டி, கிருத்திகை
பிரார்த்தனை:
பிணிகள் நீங்க, நல்லன அருள, கேட்டது கிடைக்க, வினைகள் அகல, தொல்லைகள் தீர்=, திருமணப்பேறு, குழந்தைப்பேறு வேண்டி, நோய்கள் குணமாக, நல்ல எண்ணங்கள் அதிகரிக்க, தொழில் சிறக்க, விவசாயம் மேம்பட, தோஷங்கள் விலக
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
நல்லன அருளும் கோயம்புத்தூர் காங்கேயம்பாளையம் சென்னியாண்டவரை உள்ளங்குளிர வேண்டுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
சைவ சித்தாந்தச் சுடர்
சைவ நெறிச் செம்மல்
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
கோயம்புத்தூர் 25
🙏🏾🙏🏾
படம் 1 - 1590 பிணிகளை நீக்கியருளும் கோயம்புத்தூர் காங்கேயம்பாளையம் சென்னியாண்டவர்
Comments
Post a Comment