கோவில் 1589 - கோயம்புத்தூர் முகாசிசெம்சம்பட்டி சென்னியாண்டவர் கோவில்
🙏🏾🙏🏾
தினம் ஒரு முருகன் ஆலயம்-1589
கவலைகள் போக்கும் கோயம்புத்தூர் முகாசிசெம்சம்பட்டி சென்னியாண்டவர் கோவில்
14.10.2025 செவ்வாய்
அருள்மிகு சென்னியாண்டவர் திருக்கோவில்
முகாசிசெம்சம்பட்டி 641697
அன்னூர் வட்டம்
கோயம்புத்தூர் மாவட்டம்
இருப்பிடம்: காந்திபுரம் 34 கிமீ, அன்னூர் 10 கிமீ, மேட்டுப்பாளையம் 15 கிமீ, அவிநாசி 29 கிமீ, உக்கடம் 38 கிமீ
மூலவர்: சென்னியாண்டவர்
உற்சவர்: சென்னியாண்டவர் வள்ளி, தெய்வானை
தல மகிமை:
கோயம்புத்தூர் மாவட்டம் காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 34 கிமீ தொலைவில் இருக்கும் அன்னூர் வட்டம் முகாசிசெம்சம்பட்டி கிராமத்தில் கவலைகள் போக்கும் கோயம்புத்தூர் முகாசிசெம்சம்பட்டி சென்னியாண்டவர் கோவில் அமைந்துள்ளது. மேலும் அன்னூர் பேருந்து நிலையத்திலிருந்து 10 கிமீ தொலைவு அல்லது மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து 15 கிமீ தொலைவு அல்லது அவிநாசி பேருந்து நிலையத்திலிருந்து 29 கிமீ தொலைவு அல்லது உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து 38 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் கோயம்புத்தூர் மாவட்டம் முகாசிசெம்சம்பட்டி சென்னியாண்டவர் கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் சென்னியாண்டவர் மூலவராக கைய்ல் வேலுடன் அருளாட்சி புரிகின்றார்.
கோயம்புத்தூர் மாவட்டம் முகாசிசெம்சம்பட்டி சென்னியாண்டவர் கோவிலில் ஒவ்வொரு வருடமும் தைப்பூத் திருவிழா சிறப்புப் பூஜைகளுடன் விமரிசையாக நடைபெறுகின்றது. மேலும் பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை உள்ளிட்ட முருகப்பெருமானின் அனைத்து திருவிழாக்களும் சிறப்பு பூஜைகளுடன் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை திருநாட்களில் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.
தல வரலாறு:
கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூர் வட்டம் முகாசிசெம்சம்பட்டி சென்னியாண்டவ கோவில்ர் இப்பகுதியில் ஒரு முக்கியமான கோவிலாகும்.
தல அமைப்பு:
கோயம்புத்தூர் மாவட்டம் முகாசிசெம்சம்பட்டி சென்னியாண்டவர் கோவில் அழகிய கோபுரங்களுடன் கட்டப்பபட்டுள்ளது. இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் சென்னியாண்டவர் வேல் கொண்டு பொலிவாக வீற்றிருந்து ஆற்றலுடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் விநாயகர், சிவபெருமான் உள்ளிட்ட அனைத்து தெய்வங்களும் இத்திருக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சஷ்டி, கிருத்திகை
பிரார்த்தனை:
கவலைகள் போக்க, வேண்டிதை தர, வினைகள் விலக, பிணிகள் தீர, சந்தான பாக்கியம் கிட்ட, குடும்ப ஒற்றுமை ஓங்க, உடல்நலன் வேண்டி, நல்லன அருள, மன அமைதி கிடைக்க, தோஷங்கள் விலக
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
வேண்டிதை தந்தருளும் கோயம்புத்தூர் முகாசிசெம்சம்பட்டி சென்னியாண்டவரை மனமுருகி பிரார்த்திப்போம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
சைவ சித்தாந்தச் சுடர்
சைவ நெறிச் செம்மல்
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
கோயம்புத்தூர் 25
🙏🏾🙏🏾
படம் 1 - 1589 கவலைகள் போக்கும் கோயம்புத்தூர் முகாசிசெம்சம்பட்டி சென்னியாண்டவர்
Comments
Post a Comment