கோவில் 1588 - கோயம்புத்தூர் கப்பளாங்கரை சென்னியாண்டவர் கோவில்

 🙏🏾🙏🏾

தினம் ஒரு முருகன் ஆலயம்-1588

சகல ஐஸ்வர்யங்களையும் அருளும் கோயம்புத்தூர் கப்பளாங்கரை சென்னியாண்டவர் கோவில்

13.10.2025 திங்கள்


அருள்மிகு சென்னியாண்டவர் திருக்கோவில் [TM010638]

[அ/மி முருகன் கோவில்]

முருகன் கோவில் தெரு

கப்பளாங்கரை 642120

கிணத்துக்கடவு வட்டம்

கோயம்புத்தூர் மாவட்டம்


இருப்பிடம்: காந்திபுரம் 43 கிமீ, கிணத்துக்கடவு 18 கிமீ, பொள்ளாச்சி 19 கிமீ, பல்லடம் 33 கிமீ, உக்கடம் 40 கிமீ


மூலவர்: சென்னியாண்டவர்

உற்சவர்: சென்னியாண்டவர் வள்ளி, தெய்வானை

கும்பாபிஷேகம்: 29.11.2024


தல மகிமை:

கோயம்புத்தூர் மாவட்டம் காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 35 கிமீ தொலைவில் இருக்கும் கிணத்துக்கடவு வட்டம் கப்பளாங்கரை கிராமத்தில் சகல ஐஸ்வர்யங்களையும் அருளும் கோயம்புத்தூர் கப்பளாங்கரை சென்னியாண்டவர் கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவில் முருகன் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் கிணத்துக்கடவு பேருந்து நிலையத்திலிருந்து 18 கிமீ தொலைவு அல்லது பொள்ளாச்சி பேருந்து நிலையத்திலிருந்து 19 கிமீ தொலைவு அல்லது அவிநாசி பேருந்து நிலையத்திலிருந்து 17 கிமீ தொலைவு அல்லது பல்லடம் பேருந்து நிலையத்திலிருந்து 33 கிமீ தொலைவு அல்லது உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து 40 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் கோயம்புத்தூர் மாவட்டம் கப்பளாங்கரை சென்னியாண்டவர் கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் சென்னியாண்டவர் பொலிவான தோற்றத்தில் அருள்புரிகின்றார். இக்கோவில் சமீபத்தில் புனரமைக்கப்பட்டு 29.11.2024 அன்று கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.


கோயம்புத்தூர் கப்பளாங்கரை சென்னியாண்டவர் கோவிலில் தைப்பூசம் மற்றும் பங்குனி உத்திரம் திருவிழாக்கள் மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. மேலும் கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை உள்ளிட்ட முருகப்பெருமானின் அனைத்து திருவிழாக்களும் சிறப்பு பூஜைகளுடன் நடைபெறுகின்றன. சஷ்டி, கிருத்திகை திருநாட்களில் விசேஷ வழிபாடுகள் நடக்கின்றன.


தல வரலாறு:

கோயம்புத்தூர் மாவட்டம் கப்பளாங்கரை சென்னியாண்டவர் இப்பகுதியில் மிகவும் பழமையான கோவிலாகும். தற்போது இத்திருக்கோவில் நிர்வாகத்தை இந்து அறநிலையத் துறை நிர்வகித்து வருகிறது. இத்திருக்கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு 29.11.2024 -ல் மகா கும்பாபிஷேகம் மிகச் சிறப்பாக நடந்தேறியது. திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


தல அமைப்பு:

கோயம்புத்தூர் மாவட்டம் கப்பளாங்கரை சென்னியாண்டவர் கோவில் ஆகம விதிகளின் படி எழுப்பப்பட்டுள்ளது. இக்கோவிலில் அழகிய தீபஸ்தம்பம் உள்ளது. இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் சென்னியாண்டவர் வேல் மற்றும் சேவேற் கொடி கொண்டு பொலிவாக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் விநாயகர், ஐயப்பன் உள்ளிட்ட தெய்வங்கள் இத்திருக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.


திருவிழா:

தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சஷ்டி, கிருத்திகை


பிரார்த்தனை:

சகல ஐஸ்வர்யங்களையும் அருள, பிணிகள் நீங்க, எண்ணியது ஈடேற, வினைகள் தீர, குழந்தை பாக்கியம் வேண்டி, குடும்ப வாழ்வு சிறக்க, உடல் ஆரோக்கியம் உண்டாக, நல்லன நடைபெற, தொல்லைகள் அகல, மன அமைதி கிடைக்க, தோஷங்கள் விலக


நேர்த்திக்கடன்:

அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்


பிணிகள் யாவையும் நீக்கியருளும் கோயம்புத்தூர் கப்பளாங்கரை சென்னியாண்டவரை சென்னியில் வைத்து தொழுதிடுவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

சைவ சித்தாந்தச் சுடர்

சைவ நெறிச் செம்மல்

Dr K. முத்துக்குமரன் Ph. D

9489302842

bamikumar@gmail.com

கோயம்புத்தூர் 25

🙏🏾🙏🏾


படம் 1 - 1588 சகல ஐஸ்வர்யங்களையும் அருளும் கோயம்புத்தூர் கப்பளாங்கரை சென்னியாண்டவர்


படம் 2 - 1588 பிணிகள் யாவையும் நீக்கியருளும் கோயம்புத்தூர் கப்பளாங்கரை சென்னியாண்டவர் கோவில் [இந்து அறநிலையத் துறை பழைய படம்]

Comments

Popular posts from this blog

கோவில் 1319 - சேலம் மல்லிகுந்தம் சின்ன பழனியாண்டவர் கோவில்

கோவில் 1326 - சேலம் K R தோப்பூர் பாலமுருகன் கோவில்

கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்