கோவில் 1566 - கோயம்புத்தூர் கள்ளிப்பாளையம் பழனியாண்டவர் கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1566
இகபர சுகமருளும் கோயம்புத்தூர் கள்ளிப்பாளையம் பழனியாண்டவர் கோவில்
21.09.2025 ஞாயிறு
அருள்மிகு பழனியாண்டவர் திருக்கோவில்
கள்ளிப்பாளையம் 641108
நஞ்சுண்டாபுரம்
கோயம்புத்தூர் மாவட்டம்
இருப்பிடம்: காந்திபுரம் 17 கிமீ, தடாகம் 5 கிமீ, துடியலுர் 7 கிமீ, கோயம்புத்தூர் ரயில் நிலையம் 17 கிமீ, உக்கடம் 18 கிமீ, சிங்காநல்லூர் 23 கிமீ
மூலவர்: பழனியாண்டவர்
உற்சவர்: முருகப்பெருமான் வள்ளி, தெய்வானை
தல மகிமை:
கோயம்புத்தூர் மாநகரம் காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 17 கிமீ தொலைவில் இருக்கும் நஞ்சுண்டாபுரம் அருகில் இருக்கும் கள்ளிப்பாளையம் கிராமத்தில் இகபர சுகமருளும் கோயம்புத்தூர் கள்ளிப்பாளையம் பழனியாண்டவர் கோவில் அமைந்துள்ளது. மேலும் தடாகம் பேருந்து நிலையத்திலிருந்து 5 கிமீ தொலைவு அல்லது துடியலுர் பேருந்து நிலையத்திலிருந்து 7 கிமீ தொலைவு அல்லது கோயம்புத்தூர் ரயில் நிலையத்திலிருந்து 17 கிமீ தொலைவு அல்லது உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து 18 கிமீ தொலைவு அல்லது சிங்காநல்லூர் பேருந்து நிலையத்திலிருந்து 23 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் கோயம்புத்தூர் கள்ளிப்பாளையம் பழனியாண்டவர் கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவராக பழனியாண்டவர் கையில் தண்டத்துடன் அருளாட்சி புரிகின்றார்.
கோயம்புத்தூர் கள்ளிப்பாளையம் பழனியாண்டவர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசம் மற்றும் பங்குனி உத்திரம் திருவிழாக்கள் மிகவும் கோலகலமாக கொண்டாடப்படுகின்றன. பக்தர்கள் காவடி ஏந்தி தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். மேலும் கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை உள்ளிட்ட முருகப்பெருமானுக்குரிய அனைத்து திருவிழாக்களும் விசேஷ பூஜைகளுடன் நடைபெறுகின்றன. பிரதி சஷ்டி, கிருத்திகை திருநாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன.
தல வரலாறு:
கோயம்புத்தூர் கள்ளிப்பாளையம் பழனியாண்டவர் கோவில் இப்பகுதியில் மிகவும் பிரசித்திப் பெற்றக் கோவில் ஆகும்.
தல அமைப்பு:
கோயம்புத்தூர் கள்ளிப்பாளையம் பழனியாண்டவர் கோவிலில் அழகிய தீபஸ்தம்பம் உள்ளது. இத்திருக்கோவில் கருவறையில் மூலவராக பழனியாண்டவர் வலது கையில் தண்டத்துடன், வேலும் கொண்டு நின்ற திருக்கோலத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் அழகிய வேல், மயில், பலிபீடம் உள்ளன. மேலும் இத்திருக்கோவிலில் விநாயகர், உற்சவர் வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமான் உள்ளிட்ட அனைத்து சாநித்ய தெய்வங்களும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சஷ்டி, கிருத்திகை
பிரார்த்தனை:
இகபர சுகமருள, தொல்லைகள் தீர, வேண்டுவன கிடைத்திட, இருவினைகள் நீங்க, சகல பிணிகளும் விலக, சந்தான பாக்கியம் உண்டாக, குடும்ப ஒற்றுமை ஓங்க, உடல் ஆரோக்கியம் சீராக, நல்லன கிட்ட, எதிர்மறை உணர்வுகள் விலக, ஞானம் சிறக்க, விவசாயம் செழிக்க, வியாபாரம் மேம்பட, தோஷங்கள் போக்க
நேர்த்திக்கடன்:
காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
திறக்கும் நேரம்:
காலை 7-9 மாலை 6-7.30
தொல்லைகள் தீர்த்தருளும் கோயம்புத்தூர் கள்ளிப்பாளையம் பழனியாண்டவரை போற்றி வணங்குவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
சைவ சித்தாந்தச் சுடர்
சைவ நெறிச் செம்மல்
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 1566 இகபர சுகமருளும் கோயம்புத்தூர் கள்ளிப்பாளையம் பழனியாண்டவர்
Comments
Post a Comment