கோவில் 1565 - கோயம்புத்தூர் கணபதி நடுதோட்டம் பழனி ஆண்டவர் கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1565
சங்கடம் தீர்க்கும் கோயம்புத்தூர் கணபதி நடுதோட்டம் பழனி ஆண்டவர் கோவில்
20.09.2025 சனி
அருள்மிகு பழனி ஆண்டவர் திருக்கோவில்
கோபாலசுவாமி கோவில் தெரு
நடுதோட்டம்
கணபதி
கோயம்புத்தூர் 641006
கோயம்புத்தூர் மாவட்டம்
இருப்பிடம்: காந்திபுரம் 3 கிமீ, கோயம்புத்தூர் ரயில் நிலையம் 6 கிமீ, உக்கடம் 7 கிமீ, சிங்காநல்லூர் 9 கிமீ
மூலவர்: பழனி ஆண்டவர்
உற்சவர்: முருகப்பெருமான் வள்ளி, தெய்வானை
தல மகிமை:
கோயம்புத்தூர் மாநகரம் காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 3 கிமீ தொலைவில் இருக்கும் கணபதி நகரில் உள்ள நடுதோட்டம் கோபாலசுவாமி கோவில் தெருவில் சங்கடம் தீர்க்கும் கோயம்புத்தூர் கணபதி நடுதோட்டம் பழனி ஆண்டவர் கோவில் அமைந்துள்ளது. மேலும் கோயம்புத்தூர் ரயில் நிலையத்திலிருந்து 6 கிமீ தொலைவு அல்லது உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து 7 கிமீ தொலைவு அல்லது சிங்காநல்லூர் பேருந்து நிலையத்திலிருந்து 9 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் கோயம்புத்தூர் கணபதி நடுதோட்டம் பழனி ஆண்டவர் கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் பழனி ஆண்டவர் கையில் தண்டத்துடன் அருளாட்சி செய்கின்றார். இத்திருக்கோவில் மிகவும் பழமையான கோவிலாகும்.
கோயம்புத்தூர் கணபதி நடுதோட்டம் பழனி ஆண்டவர் கோவிலில் வருடந்தோறும் தைப்பூசம் திருவிழா சிறப்புப் பூஜைகளுடன் நடைபெறுகின்றது. மேலும் பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை உள்ளிட்ட முருகப்பெருமானுக்குரிய அனைத்து திருவிழாக்களும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை நன்னாட்களில் விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன.
தல வரலாறு:
கோயம்புத்தூர் நகர் மையத்தில் கணபதி நடுதோட்டம் பழனி ஆண்டவர் கோவில் மிகவும் பழமையான கோவில் ஆகும்.
தல அமைப்பு:
கோயம்புத்தூர் கணபதி நடுதோட்டம் பழனி ஆண்டவர் கோவில் ஆகம விதிப்படிகளின் படி அமைந்துள்ளது. இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் பழனி ஆண்டவர் வலது கையில் தண்டத்துடன் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். சுவாமியின் இடது திருக்கரம் இடுப்பில் பொலிவுடன் வைத்தப்படி அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் அழகிய, ஆற்றல் மிக்க வேல், மயில், பலிபீடம் உள்ளன. மேலும் இத்திருக்கோவிலில் விநாயகர், உற்சவர், சிவபெருமான், உமையம்மை, துர்க்கை உள்ளிட்ட அனைத்து பரிவார தெய்வங்களும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர். பழனி ஆண்டவர் அலங்காரம் மட்டுமன்றி வேல், சிவபெருமான், அம்பாள் அழகிய அலங்காரம் இத்திருக்கோவிலின் சிறப்பம்சமாகும்.
திருவிழா:
தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சஷ்டி, கிருத்திகை
பிரார்த்தனை:
சங்கடம் தீர, ஞானம் மேம்பட, நினைத்தது நிறைவேற, வல்வினைகள் அகல, பிணிகள் போக்க, திருமணம் நடைபெற, குழந்தை பாக்கியம் வேண்டி, நோய்கள் குணமாக, நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்க, நல்லன நடைபெற, தொழில், கல்வி சிறக்க, வியாபாரம் விருத்தியடைய, தோஷங்கள் விலக
நேர்த்திக்கடன்:
காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
திறக்கும் நேரம்:
காலை 6-10 மாலை 5.30-7
ஞானம் மேம்பட அருளும் கோயம்புத்தூர் கணபதி நடுதோட்டம் பழனி ஆண்டவரை பணிவுடன் வேண்டுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
சைவ சித்தாந்தச் சுடர்
சைவ நெறிச் செம்மல்
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 1565 சங்கடம் தீர்க்கும் கோயம்புத்தூர் கணபதி நடுதோட்டம் பழனி ஆண்டவர்
Comments
Post a Comment