கோவில் 1564 - கோயம்புத்தூர் சின்னையா கவுண்டன் புதூர் பழனி ஆண்டவர் கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1564
செல்வம் பெருக அருளும் கோயம்புத்தூர் சின்னையா கவுண்டன் புதூர் பழனி ஆண்டவர் கோவில்
19.09.2025 வெள்ளி
அருள்மிகு பழனி ஆண்டவர் திருக்கோவில்
சின்னையா கவுண்டன் புதூர் 641105
எட்டிமடை ஊராட்சி
கோயம்புத்தூர் மாவட்டம்
இருப்பிடம்: காந்திபுரம் 26 கிமீ, எட்டிமடை 2 கிமீ, மதுக்கரை 12 கிமீ, கோயம்புத்தூர் ரயில் நிலையம் 23 கிமீ, உக்கடம் 23 கிமீ, சிங்காநல்லூர் 25 கிமீ
மூலவர்: பழனி ஆண்டவர்
உற்சவர்: பழனி ஆண்டவர்
கும்பாபிஷேகம்: 01.06.2022
தல மகிமை:
கோயம்புத்தூர் மாநகரம் காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 26 கிமீ தொலைவில் இருக்கும் எட்டிமடை ஊராட்சி சின்னையா கவுண்டன் புதூர் கிராமத்தில் செல்வம் பெருக அருளும் கோயம்புத்தூர் சின்னையா கவுண்டன் புதூர் பழனி ஆண்டவர் கோவில் அமைந்துள்ளது. மேலும் எட்டிமடை பேருந்து நிலையத்திலிருந்து 2 கிமீ தொலைவு அல்லது மதுக்கரை பேருந்து நிலையத்திலிருந்து 12 கிமீ தொலைவு அல்லது கோயம்புத்தூர் ரயில் நிலையத்திலிருந்து 23 கிமீ தொலைவு அல்லது உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து 23 கிமீ தொலைவு அல்லது சிங்காநல்லூர் பேருந்து நிலையத்திலிருந்து 25 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் கோயம்புத்தூர் சின்னையா கவுண்டன் புதூர் பழனி ஆண்டவர் கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் பழனி ஆண்டவர் கையில் தண்டத்துடன் அருள்கின்றார். இத்திருக்கோவில் கும்பாபிஷேகம் 01.06.2022-ல் சிறப்பாக நடந்தேறியது.
கோயம்புத்தூர் சின்னையா கவுண்டன் புதூர் பழனி ஆண்டவர் கோவிலில் தைப்பூசத் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் முக்கியத் திருவிழாவாக விசேஷ பூஜைகளுடன் நடைபெறுகின்றது. மேலும் முருகப்பெருமானுக்குரிய பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை உள்ளிட்ட அனைத்து திருவிழாக்களும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. ஒவ்வொரு சஷ்டி, கிருத்திகை திருநாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன.
தல வரலாறு:
கோயம்புத்தூர் சின்னையா கவுண்டன் புதூர் பழனி ஆண்டவர் கோவில் மிகவும் பழமையான கோவில் ஆகும். இத்திருக்கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு 01.06.2022 அன்று மகா கும்பாபிஷேகம் விநாயகர் கோவிலுடன் சேர்த்து மிகச் சிறப்பாக நடைபெற்றது.
தல அமைப்பு:
கோயம்புத்தூர் சின்னையா கவுண்டன் புதூர் பழனி ஆண்டவர் கோவில் அழகிய அமைப்புடன் அமைந்துள்ளது. இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் பழனி ஆண்டவர் கையில் தண்டத்துடன் அழகிய திருக்கோலத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் இத்திருக்கோவிலில் விநாயகர், உற்சவர் உட்பட எல்லா மூர்த்திகளும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சஷ்டி, கிருத்திகை
பிரார்த்தனை:
செல்வம் பெருக, வினைகள் வேரறுக்க, கேட்டது கிடைத்திட, பிணிகள் அகல, கல்வி, ஞானம் மேம்பட, சந்தான பாக்கியம் கிட்ட, நோய்கள் நீங்க, நல்லன வேண்டி, சஞ்சலங்கள் தீர, தோஷங்கள் விலக
நேர்த்திக்கடன்:
பால்குடம், காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
வினைகளை வேரறுக்கும் கோயம்புத்தூர் சின்னையா கவுண்டன் புதூர் பழனி ஆண்டவர் திருவடிகள் பணிந்து தொழுதிடுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
சைவ சித்தாந்தச் சுடர்
சைவ நெறிச் செம்மல்
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 1564 செல்வம் பெருக அருளும் கோயம்புத்தூர் சின்னையா கவுண்டன் புதூர் பழனி ஆண்டவர்
Comments
Post a Comment