கோவில் 1563 - கோயம்புத்தூர் மாதம்பட்டி பழனி ஆண்டவர் கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1563
கல்வி சிறக்க அருளும் கோயம்புத்தூர் மாதம்பட்டி பழனி ஆண்டவர் கோவில்
18.09.2025 வியாழன்
அருள்மிகு பழனி ஆண்டவர் திருக்கோவில்
மாதம்பட்டி 641109
தொண்டாமுத்தூர் வட்டம்
கோயம்புத்தூர் மாவட்டம்
இருப்பிடம்: காந்திபுரம் 17 கிமீ, தொண்டாமுத்தூர் 4 கிமீ, பேரூர் 7 கிமீ, கோயம்புத்தூர் ரயில் நிலையம் 14 கிமீ, உக்கடம் 14 கிமீ
மூலவர்: பழனி ஆண்டவர்
உற்சவர்: பழனி ஆண்டவர்
தல மகிமை:
கோயம்புத்தூர் மாநகரம் காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 17 கிமீ தொலைவில் இருக்கும் தொண்டாமுத்தூர் வட்டம் மாதம்பட்டி கிராமத்தில் மன கல்வி சிறக்க அருளும் கோயம்புத்தூர் மாதம்பட்டி பழனி ஆண்டவர் கோவில் அமைந்துள்ளது. மேலும் தொண்டாமுத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து 4 கிமீ தொலைவு அல்லது பேரூர் பேருந்து நிலையத்திலிருந்து 7 கிமீ தொலைவு அல்லது கோயம்புத்தூர் ரயில் நிலையத்திலிருந்து 14 கிமீ தொலைவு அல்லது உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து 14 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் கோயம்புத்தூர் மாதம்பட்டி பழனி ஆண்டவர் கோவிலை அடையலாம். பழனி ஆண்டவர் இத்திருக்கோவிலில் மூலவராக கையில் தண்டத்துடன் அருள்புரிகின்றார்.
கோயம்புத்தூர் மாதம்பட்டி பழனி ஆண்டவர் கோவிலில் தைப்பூசம் மற்றும் பங்குனி உத்திரம் திருவிழாக்கள் வெகு விமரிசையாக சிறப்புப் பூஜைகளுடன் கொண்டாடப்படுகின்றன. மேலும் முருகப்பெருமானுக்குரிய கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை உள்ளிட்ட அனைத்து திருவிழாக்களும் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை நன்னாட்களில் விசேஷ வழிபாடுகள் நடக்கின்றன.
தல வரலாறு:
கோயம்புத்தூர் மாதம்பட்டி பழனி ஆண்டவர் கோவில் இவ்வட்டாரத்தில் மிகவும் புகழ் பெற்ற கோவிலாகும்.
தல அமைப்பு:
கோயம்புத்தூர் மாதம்பட்டி பழனி ஆண்டவர் கோவில் அழகிய கோபுரங்கள் உள்ளன. இத்திதிருக்கோவில் கருவறையில் மூலவர் பழனி ஆண்டவர் கையில் தண்டத்துடன் நின்ற நிலையில் திருக்காட்சியருளி ஆற்றலுடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் இத்திருக்கோவிலில் விநாயகர், உற்சவர் உள்ளிட்ட அனைத்துத் தெய்வங்களும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சஷ்டி, கிருத்திகை
பிரார்த்தனை:
கல்வி சிறக்க, வேண்டியது பெற்றிட, நினைத்தது நடக்க, வினைகள் விலக, பிணிகள் அகல, குழந்தை பாக்கியம் வேண்டி, உடல் ஆரோக்கியம் உண்டாக, நல்லன அருள, தொல்லைகள் தீர, தோஷங்கள் போக்கிட
நேர்த்திக்கடன்:
காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
வேண்டியதை அள்ளி வழங்கும் கோயம்புத்தூர் மாதம்பட்டி பழனி ஆண்டவரை மனமுருகி வேண்டுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
சைவ சித்தாந்தச் சுடர்
சைவ நெறிச் செம்மல்
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 1563 கல்வி சிறக்க அருளும் கோயம்புத்தூர் மாதம்பட்டி பழனி ஆண்டவர்
படம் 2 - 1563 வேண்டியதை அள்ளி வழங்கும் கோயம்புத்தூர் மாதம்பட்டி பழனி ஆண்டவர் கோவில்
Comments
Post a Comment