கோவில் 1562 - கோயம்புத்தூர் நாதேகவுண்டன் புதூர் பழனியாண்டவர் கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1562
மன அமைதி தரும் கோயம்புத்தூர் நாதேகவுண்டன் புதூர் பழனியாண்டவர் கோவில்
17.09.2025 புதன்
அருள்மிகு பழனியாண்டவர் திருக்கோவில்
நாதேகவுண்டன் புதூர் 641101
[NadhaGounden Pudur]
பேரூர் வட்டம்
கோயம்புத்தூர் மாவட்டம்
இருப்பிடம்: காந்திபுரம் 26 கிமீ, பேரூர் 17 கிமீ, கோயம்புத்தூர் ரயில் நிலையம் 24 கிமீ, உக்கடம் 24 கிமீ,
மூலவர்: பழனியாண்டவர்
உற்சவர்: பழனியாண்டவர்
தல மகிமை:
கோயம்புத்தூர் மாநகரம் காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 26 கிமீ தொலைவில் இருக்கும் பேரூர் வட்டம் நாதேகவுண்டன் புதூர் கிராமத்தில் மன அமைதி தரும் கோயம்புத்தூர் நாதேகவுண்டன் புதூர் பழனியாண்டவர் கோவில் அமைந்துள்ளது. மேலும் பேரூர் பேருந்து நிலையத்திலிருந்து 17 கிமீ தொலைவு அல்லது கோயம்புத்தூர் ரயில் நிலையத்திலிருந்து 24 கிமீ தொலைவு அல்லது உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து 24 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் கோயம்புத்தூர் நாதேகவுண்டன் புதூர் பழனியாண்டவர் கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவராக பழனியாண்டவர் கையில் தண்டத்துடன் அருள்பாலிக்கின்றார்.
கோயம்புத்தூர் நாதேகவுண்டன் புதூர் பழனியாண்டவர் கோவிலில் வருடந்தோறும் தைப்பூசத் திருவிழா சிறப்புப் பூஜைகளுடன் கொண்டாடப்படுகின்றது. பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்த காவடி ஏந்தி வந்து வழிபடுகின்றனர். ஏராளமான பக்தர்கள் காவடி ஏந்தி பழனிக்கும் பாதயாத்திரை செல்கின்றனர். மேலும் பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை உள்ளிட்ட முருகப்பெருமானுக்குரிய அனைத்து திருவிழாக்களும் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. ஒவ்வொரு சஷ்டி, கிருத்திகை திருநாட்களில் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.
தல வரலாறு:
கோயம்புத்தூர் நாதேகவுண்டன் புதூர் பழனியாண்டவர் கோவில் இப்பகுதியில் மிகவும் பிரசித்திப் பெற்ற கோவிலாகும்.
தல அமைப்பு:
கோயம்புத்தூர் நாதேகவுண்டன் புதூர் பழனியாண்டவர் திருக்கோவிலில் அழகிய கோபுரங்கள், சிற்பங்கள், கொடிமரம் உள்ளன. திருக்கோவில் கருவறையில் மூலவர் பழனியாண்டவர் கையில் தண்டத்துடன் ஆண்டி கோலம் உட்பட பல திருக்கோலங்களில் நின்ற நிலையில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் விநாயகர், உற்சவர் உள்ளிட்ட எல்லா தெய்வங்களும் இத்திருக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சஷ்டி, கிருத்திகை
பிரார்த்தனை:
மன அமைதி கிடைக்க, வல்வினைகள் தீர, வேண்டியது நிறைவேற, பிணிகள் அகல, திருமணம், குழந்தைப் பேறு வேண்டி, உடல் ஆரோக்கியம் உண்டாக, நல்லன அருள, நேர்மறை எண்ணங்கள் உருவாக, தீமைகள் விலக, தோஷங்கள் போக்க
நேர்த்திக்கடன்:
காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
வல்வினைகள் யாவும் தீர்த்தருளும் கோயம்புத்தூர் நாதேகவுண்டன் புதூர் பழனியாண்டவரை போற்றி வணங்குவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
சைவ சித்தாந்தச் சுடர்
சைவ நெறிச் செம்மல்
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 1562 மன அமைதி தரும் கோயம்புத்தூர் நாதேகவுண்டன் புதூர் பழனியாண்டவர்
Comments
Post a Comment