கோவில் 1561 - கோயம்புத்தூர் சொக்கனூர் முருகன் கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1561
மங்கல வாழ்வு அருளும் கோயம்புத்தூர் சொக்கனூர் முருகன் கோவில்
16.09.2025 செவ்வாய்
அருள்மிகு முருகன் திருக்கோவில்
[அ/மி பழனி ஆண்டவர் திருக்கோவில்]
சொக்கனூர் 642109
கிணத்துக்கடவு வட்டம்
கோயம்புத்தூர் மாவட்டம்
இருப்பிடம்: காந்திபுரம் 35 கிமீ, கிணத்துக்கடவு 16 கிமீ, உக்கடம் 32 கிமீ, சிங்காநல்லூர் 35 கிமீ, பொள்ளாச்சி 42 கிமீ
மூலவர்: முருகன்
உற்சவர்: முருகப்பெருமான் வள்ளி, தெய்வானை
தல மகிமை:
கோயம்புத்தூர் மாவட்டம் காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 35 கிமீ தொலைவில் இருக்கும் கிணத்துக்கடவு வட்டம் சொக்கனூர் கிராமத்தில் மங்கல வாழ்வு அருளும் கோயம்புத்தூர் சொக்கனூர் முருகன் கோவில் அமைந்துள்ளது. மேலும் கிணத்துக்கடவு பேருந்து நிலையத்திலிருந்து 11 கிமீ தொலைவு அல்லது உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து 32 கிமீ தொலைவு அல்லது சிங்காநல்லூர் பேருந்து நிலையத்திலிருந்து 35 கிமீ தொலைவு அல்லது பொள்ளாச்சி பேருந்து நிலையத்திலிருந்து 42 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் கோயம்புத்தூர் மாவட்டம் சொக்கனூர் முருகன் கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவராக முருகன் கையில் தண்டத்துடன் அருளாட்சி செய்கின்றார்.
கோயம்புத்தூர் மாவட்டம் சொக்கனூர் முருகன் கோவிலில் வருடந்தோறும் தைப்பூசம் மற்றும் பங்குனி உத்திரம் முக்கிய திருவிழாக்களாக நடைபெறுகின்றன. பக்தர்கள் காவடி ஏந்தி வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். மேலும் கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை உள்ளிட்ட முருகப்பெருமானுக்குரிய அனைத்து திருவிழாக்களும் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை திருநாட்களில் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.
தல வரலாறு:
கோயம்புத்தூர் மாவட்டம் சொக்கனூர் முருகன் கோவில் கிணத்துக்கடவு பகுதியில் மிகவும் பழமையான கோவிலாகும்.
தல அமைப்பு:
கோயம்புத்தூர் மாவட்டம் சொக்கனூர் முருகன் கோவில் ஆகம விதிகளுடன் அழகிய சிற்பங்கள் கூடிய ராஜகோபுரம் கொண்டுள்ளது. கோவில் வாயிலில் கொங்கு தலத்திற்கே உரிய அழகிய ஸ்தம்பம் உள்ளது. இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் முருகன் கையில் தண்டத்துடன், வேல் கொண்டு நின்ற திருக்கோலத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் விநாயகர், உற்சவ மூர்த்திகள், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, நாகர் உள்ளிட்ட அனைத்து தெய்வங்களும் இத்திருக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சஷ்டி, கிருத்திகை
பிரார்த்தனை:
மங்கல வாழ்வு அருள, சகல தோஷங்களும் விலக, கேட்டது கிடைக்க, வினைகள் அகல, பிணிகள் நீங்க, சந்தான பாக்கியம் வேண்டி, நோய்கள் குணமாக, நல்லன நடைபெற, மன அமைதி கிட்ட, கவலைகள் தீர
நேர்த்திக்கடன்:
காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
சகல தோஷங்களும் விலக அருளும் கோயம்புத்தூர் சொக்கனூர் முருகன் பொற்பாதங்கள் பணிந்து போற்றுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
சைவ சித்தாந்தச் சுடர்
சைவ நெறிச் செம்மல்
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
Comments
Post a Comment