கோவில் 1559 - கோயம்புத்தூர் கோபாலபுரம் முருகன் கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1559
மன அமைதி தரும் கோயம்புத்தூர் கோபாலபுரம் முருகன் கோவில்
13.09.2025 சனி
அருள்மிகு முருகன் திருக்கோவில்
கோபாலபுரம் 642002
[C. கோபாலபுரம்]
பொள்ளாச்சி வட்டம்
கோயம்புத்தூர் மாவட்டம்
இருப்பிடம்: கோயம்புத்தூர் காந்திபுரம் 44 கிமீ, பொள்ளாச்சி 9 கிமீ, உடுமலைபேட்டை 39 கிமீ, உக்கடம் 41 கிமீ
மூலவர்: முருகன்
உற்சவர்: முருகன் வள்ளி, தெய்வானை
தல மகிமை:
கோயம்புத்தூர் மாவட்டம் காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 44 கிமீ தொலைவில் இருக்கும் கோபாலபுரத்தில் [C. கோபாலபுரம்] மன அமைதி தரும் கோயம்புத்தூர் கோபாலபுரம் முருகன் கோவில் அமைந்துள்ளது. மேலும் பொள்ளாச்சி பேருந்து நிலையத்திலிருந்து 9 கிமீ தொலைவு அல்லது உடுமலைபேட்டை பேருந்து நிலையத்திலிருந்து 39 கிமீ தொலைவு அல்லது கோயம்புத்தூர் உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து 55 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் கோயம்புத்தூர் மாவட்டம் கோபாலபுரம் முருகன் கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் முருகன் சிறிய மூர்த்தமாக, பெரிய கீர்த்தியாக அருள்பாலிக்கின்றார்.
கோயம்புத்தூர் மாவட்டம் கோபாலபுரம் முருகன் கோவிலில் தைப்பூசம் முக்கியத் திருவிழாவாக சிறப்புப் பூஜைகளுடன் நடைபெறுகின்றன. மேலும் பங்குனி உத்திரம் கந்த சஷ்டி, வைகாசி விசாகம், ஆடிக்கிருத்திகை, தைக்கிருத்திகை மற்றும் திருக்கார்த்திகை உள்ளிட்ட முருகப்பெருமானுக்குரிய அனைத்து திருவிழாக்களும் சிறப்பாக நடைபெறுகின்றன. ஒவ்வொரு சஷ்டி, கிருத்திகை நாட்களில் விசேஷ வழிபாடுகள் நடக்கின்றன.
தல வரலாறு:
கோயம்புத்தூர் மாவட்டம் கோபாலபுரம் முருகன் கோவில் இப்பகுதியில் பிரசித்திப் பெற்ற கோவிலாகும்.
தல அமைப்பு:
கோயம்புத்தூர் மாவட்டம் கோபாலபுரம் முருகன் கோவில் கருவறையில் மூலவர் முருகன் கையில் வேலுடன், சிறிய மூர்த்தமாக, பெரிய கீர்த்தியுடன் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் விநாயகர், அம்மன், உற்சவர் வள்ளி, தெய்வானை முருகன் உள்ளிட்ட அனைத்து தெய்வங்களும் இத்திருக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சஷ்டி, கிருத்திகை
பிரார்த்தனை:
மன அமைதி பெற, விருப்பங்கள் நிறைவேற, கவலைகள் தீர, வினைகள் நீங்க, பிணிகள் போக்க, குழந்தை பாக்கியம் கிட்ட, நல்லன வேண்டி, நோய்கள் குணமடைய, செல்வங்கள் பெருக, தோஷங்கள் அகல
நேர்த்திக்கடன்:
காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
விருப்பங்களை நிறைவேற்றும் கோயம்புத்தூர் கோபாலபுரம் முருகன் திருவடிகள் போற்றித் தொழுதிடுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
சைவ சித்தாந்தச் சுடர்
சைவ நெறிச் செம்மல்
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 1559 மன அமைதி தரும் கோயம்புத்தூர் கோபாலபுரம் முருகன்
Comments
Post a Comment