கோவில் 1558 - திருப்பத்தூர் ஆலாங்குப்பம் சுப்பிரமணிய சுவாமி கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1558
குறைகள் தீர்க்கும் திருப்பத்தூர் ஆலாங்குப்பம் சுப்பிரமணிய சுவாமி கோவில்
13.09.2025 சனி
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்
ஆலாங்குப்பம்
திருப்பத்தூர் மாவட்டம்
இருப்பிடம்: திருப்பத்தூர் 43 கிமீ, ஆம்பூர் 4 கிமீ, குடியாத்தம் 31 கிமீ, வேலூர் 55 கிமீ
மூலவர்: சிங்காரவேலன்
தேவியர்: வள்ளி, தெய்வானை
உற்சவர்: சிங்காரவேலன் வள்ளி, தெய்வானை
தல மகிமை:
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து 43 கிமீ தொலைவில் இருக்கும் ஆலாங்குப்பம் கிராமத்தில் குறைகள் தீர்க்கும் திருப்பத்தூர் ஆலாங்குப்பம் சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. மேலும் ஆம்பூர் பேருந்து நிலையத்திலிருந்து 4 கிமீ தொலைவு அல்லது குடியாத்தம் பேருந்து நிலையத்திலிருந்து 31 கிமீ தொலைவு அல்லது வேலூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து 55 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் திருப்பத்தூர் ஆலாங்குப்பம் சுப்பிரமணிய சுவாமி கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி மூலவராக வீற்றிருந்து அருளாட்சி புரிகின்றார்.
திருப்பத்தூர் ஆலாங்குப்பம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடிக்கிருத்திகை, தைக்கிருத்திகை மற்றும் திருக்கார்த்திகை திருவிழாக்கள் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. மேலும் தைப்பூசம், பங்குனி உத்திரம் கந்த சஷ்டி, வைகாசி விசாகம் உள்ளிட்ட முருகப்பெருமானுக்குரிய எல்லா திருவிழாக்களும் வெகு விமரிசையாக நடைபெறுகின்றன. பிரதி சஷ்டி, கிருத்திகை நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன.
தல வரலாறு:
திருப்பத்தூர் ஆலாங்குப்பம் சுப்பிரமணிய சுவாமி கோவில் மிகவும் பழமையான கோவிலாகக் கருதப்படுகிறது.
தல அமைப்பு:
திருப்பத்தூர் ஆலாங்குப்பம் சுப்பிரமணிய சுவாமி கோவில் அழகிய கோபுர அமைப்புடன் அமைந்துள்ளது. இக்கோவில் கருவறையில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானை சமேதராக கையில் வேலுடன் நின்ற திருக்கோலத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் விநாயகர், உற்சவர் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி உள்ளிட்ட அனைத்து தெய்வங்களும் இத்திருக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
ஆடிக்கிருத்திகை, தைக்கிருத்திகை, திருக்கார்த்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், சஷ்டி, கிருத்திகை
பிரார்த்தனை:
குறைகள் தீர, சங்கடங்கள் போக்க, வேண்டுவது கிடைக்க, வினைகள் அகல, பிணிகள் போக்க, திருமணத் தடை நீங்க, சந்தான பாக்கியம் கிட்ட, மன அமைதி கிடைத்திட, நல்லன அருள, நேர்மறை எண்ணங்கள் உண்டாக, தோஷங்கள் விலக
நேர்த்திக்கடன்:
காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
சங்கடங்கள் தீர்க்கும் திருப்பத்தூர் ஆலாங்குப்பம் சுப்பிரமணிய சுவாமியை போற்றி வணங்கிவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
சைவ சித்தாந்தச் சுடர்
சைவ நெறிச் செம்மல்
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 1558 குறைகள் தீர்க்கும் திருப்பத்தூர் ஆலாங்குப்பம் சுப்பிரமணிய சுவாமி
படம் 2 - 1558 சங்கடங்கள் தீர்க்கும் திருப்பத்தூர் ஆலாங்குப்பம் சுப்பிரமணிய சுவாமி
Comments
Post a Comment